Sunday, March 29, 2015

ரெட்டு

                                              ரெட்டு                                              




நன்றி : ஹீலர் பாஸ்கர் 
              அமைதியும் ஆரோக்கியமும் மாத இதழ் 


Saturday, March 21, 2015

ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!

ரூபர்ட் முர்டோச்: 
ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!

ஐந்து கண்டங்களிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பும் செயற்கைக் கோள்கள், ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’, ‘டைம்ஸ் ஆப் லண்டன்’, ‘நியூயார்க் போஸ்ட்’ உள்ளிட்டு உலகெங்கும் 175 செய்தித்தாள்கள், அமெரிக்காவில் மட்டும் 35 தொலைக்காட்சி நிலையங்கள், 19 விளையாட்டு சானல்கள், டுவென்டியத் சென்சுரி பாக்ஸ் என்ற ஹாலிவுட் திரைப்பட நிறுவனம்… இத்தனைக்கும் சொந்தக்காரரான உலக ஊடக சாம்ராச்சியத்தின் சக்ரவர்த்தி ரூபர்ட் முர்டோச் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்.
ஊடக சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை என்பவைகளின் இலக்கணத்தைப் படைத்து மனித குலத்துக்கு வழங்கியதாக பீற்றிக் கொள்ளும் மேற்கத்திய நாடுகளின் செய்தி ஊடகங்கள் அதிர்ச்சியில் வீழ்ந்திருப்பது போன்றதொரு போலித் தோற்றத்தைக் காட்டுகின்றன. நடக்கக் கூடாததும், நடக்கவே முடியாததும் நடந்து விட்டதைப் போன்ற ஒரு பாசாங்கு!
ரூபர்ட் முர்டோச்சின் ஊடக சாராஜ்ஜியத்தைச் சேர்ந்த ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ எனும் பத்திரிகை போலீசுக்கு இலஞ்சம் கொடுத்து, லண்டன் குண்டு வெடிப்பு மற்றும் அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதல் போன்றவற்றில் இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுடைய தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டுள்ளது என்ற உண்மை அம்பலமாகியிருக்கிறது. அது மட்டுமின்றி, இங்கிலாந்து அரச குடும்பத்தினரின் தொலைபேசிகளையும் கூட முர்டோச்சின் பத்திரிகை கள்ளத்தனமாக ஒட்டுக் கேட்டிருக்கிறது. ராஜ குடும்பத்தின் அந்தரங்கத்திலேயே மூக்கை நுழைத்து விட்டார் ருபர்ட் முர்டோச் என்று போட்டி சாம்ராஜ்ஜியங்களைச் சேர்ந்த ஊடகங்கள் சாமியாடிக் கொண்டிருக்கின்றன.
இங்கிலாந்தில் ருபர்ட் முர்டோச்சின் மேல் நடந்து வரும் விசாரணைகளைப் போலவே, அமெரிக்கப் புலனாய்வுத் துறையும் தங்கள் நாட்டில் முர்டோச்சின் ஊடகங்கள் பின்பற்றிய முறைகேடான விவகாரங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறியிருக்கிறது.
முதலாளித்துவ தனிநபர் சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றுக்கிடையில் நடக்கும் மோதல் போன்று தோற்றமளிக்கும் இந்த நிகழ்வுகள் உண்மையில் எம்.ஜி.ஆர். – நம்பியார் கத்திச் சண்டை ரகத்தைச் சேர்ந்தவையே. புலனாய்வு என்ற பெயரில் மஞ்சள் மசாலாக்களை கடைவிரிக்கும் இதழியலுடன் இவை நேரடித்தொடர்பு கொண்டவை.
கடந்த 2002ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனைச் சேர்ந்த மில்லி டோலர் என்கிற 13 வயது சிறுமி மர்மமான முறையில் காணாமல் போகிறார். முர்டோச்சிற்கு சொந்தமான ‘நியூஸ் ஆப் தெ வோர்ல்ட்’ பத்திரிகையின் சார்பாக களமிறங்கும் தனியார் துப்பறியும் நிபுணர் க்ளென் முல்கெய்ர், மில்லியின் தொலைபேசியை கள்ளத்தனமாக இயக்கி,  மில்லி எங்கோ இருக்கிறார் என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார். மில்லியின் குடும்பமும் இதை நம்புகிறது. போலீசாரும், இதையே ஆதாரமாக வைத்து தமது புலனாய்வை தவறான திசையில் தொடருகிறார்கள். கடைசியில் அதே ஆண்டு நவம்பர் மாத வாக்கில் மில்லியின் சிதைந்த உடற்பாகங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அதுவரை அக்குடும்பம் மில்லி உயிரோடு இருப்பதாகவே நம்பிக் கொண்டிருக்கிறது. போலீசாரும் அதே கோணத்தில் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே இக்கொலைச் சம்பவம் குறித்தும் விசாரணைகள் பற்றியும் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகை பரபரப்பாக எழுதுகிறது.
அடுத்து 2005ம் ஆண்டு நவம்பர் வாக்கில் இளவரசர் வில்லியம்ஸின் மூட்டு வலி பற்றிய ஒரு செய்தியும் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகையில் வெளியாகிறது. மிக இரகசியமாக வைக்கப்பட்டிருந்த மூட்டு வலி விசயம் வெளியானதையடுத்து அதிர்ச்சியடைந்த இங்கிலாந்து போலீசார், இது குறித்து விசாரணை ஒன்றை நடத்துகிறார்கள். ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகை தொலைபேசிகளை திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கிறது என்பது தெரிய வந்தாலும், அது நிரூபிக்கப் படவில்லை. 2002ல் இப்பத்திரிகை இழைத்த குற்றம் 2011 ஜூலையில்தான் ஆதாரபூர்வமாக பிடிபடுகிறது.
முர்டோச்சின் பத்திரிகை பல்வேறு தருணங்களில் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்தும், சட்டவிரோதமான வகையில் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டும் செய்திகளைத் திரட்டியுள்ளது என்பது இச்சம்பவங்களைத் தொடர்ந்து ஒவ்வொன்றாக வெளியே வருகிறது. லண்டன் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுடைய தொலைபேசிகளும், 9/11 இரட்டை கோபுரத் தகர்ப்பில் கொல்லப்பட்ட பிரிடிஷ் பிரஜைகளின் உறவினர்களின் தொலைபேசி உரையாடல்களும் கூட ஒட்டுக் கேட்கப் பட்டிருக்கின்றன என்று தெரிய வருகிறது. தொடர்ந்து நடந்த விசாரணைகளில் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகை லண்டன் போலீசின் கணினிமயமாக்கப்பட்ட ஆவணங்கள் மொத்தத்தையும் லஞ்சம் கொடுத்து கள்ளத்தனமாக கைப்பற்றியிருக்கிறது என்ற உண்மையும் அம்பலமாகிறது. அதாவது, இங்கிலாந்தின் குடிமக்கள் யார் எப்போது எந்த வழக்கில் சிக்கியிருந்தாலும், அந்த விவரம் இப்போது முர்டோச்சினுடைய பத்திரிகையின் கைக்கு வந்துவிட்டது.
1969 இல் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகையை விலைக்கு வாங்கிய முர்டோச், அதனை டேப்லாய்ட் வகையைச் சார்ந்த ஒரு பத்திரிகையாக மாற்றினார். வேறு விதமாகச் சொன்னால் அது ஒரு மஞ்சள் பத்திரிகை. முர்டோச்சுக்கே சொந்தமான இன்னொரு வாரப்பத்திரிகையான ‘தி சன்’ என்ற மஞ்சள் பத்திரிகையைக் காட்டிலும் கேவலமான பத்திரிகை இது. உலகம் முழுவதும் உள்ள பிரபலங்களின் படுக்கையறைச் செய்திகள், கள்ள உறவு பற்றிய கிசுகிசுக்கள் ஆகியவைதான் இப்பத்திரிகையின் மூலதனம்.
இன்றைக்கு விவகாரம் அம்பலமானவுடன் மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்கள் காட்டும் ஆச்சர்யம்தான் உண்மையில் ஆச்சர்யப்படத்தக்கது. ஏதோ ரூபர்ட் முர்டோச் இத்தனை காலமாக யோக்கியமாகத் தொழில் செய்து வந்தவர் போலவும், இப்போதுதான் அவரது ஊழல்கள் வெளியாகியுள்ளது போலவும் இந்தப் பத்திரிகைகள் அங்கலாய்க்கின்றன. ஆனால், ரூபர்ட் முர்டோச் தனது தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தியதிலாகட்டும், தனது கிளைகளான ஒவ்வொரு ஊடகங்களையும் வெற்றிகரமாக நடத்தியதாகட்டும் – அனைத்திலும் அவர் பின்பற்றியது பச்சை அயோக்கியத்தனமான வழிமுறைகள் தானென்பது அனைவருமே அறிந்து வைத்திருந்த ‘ரகசியம்’தான்.
ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!
முர்டோச்சின் ஊடக ஏகபோகம். நன்றி - கார்டியன் (படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்)
ஐந்து கண்டங்களையும் தழுவி பல்வேறு நாடுகளில் 175க்கும் மேற்பட்ட செய்தித் தாள்கள், நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி சேனல்கள், இணையச் சேவை வழங்கும் நிறுவனங்கள், உலகெங்கும் செயற்கைக்கோள் தொலைகாட்சி சேவை வழங்கும் நிறுவனங்கள் என்று பரந்து விரிந்து கிடக்கும் ரூபர்ட் முர்டோச்சின் ஊடக சாம்ராஜ்ஜியத்தின் எல்லைகள் நமது கற்பனைகளை விஞ்சிய ஒன்று. 1953ல் ஆஸ்திரேலியாவில் அவரது தந்தையான கெயித் முர்டோச்சின் ஊடக நிறுவனத்தின் பொறுப்பிற்கு வரும் ரூபர்ட் முர்டோச், அடுத்த சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் அசைக்கமுடியாத ஒரு மீடியா மன்னனாகிறார்.
பின்னர், மார்கரெட் தாட்சரின் முழுமையான ஆதரவோடு இங்கிலாந்தைச் சேர்ந்த ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகையின் பங்குகளை வாங்குவதன் மூலம் அப்பத்திரிகையைக் கைப்பற்றுகிறார். எண்பதுகளின் துவக்கத்தில், ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகையின் வழமையான வடிவத்தை உதறி விட்டு அதனை ஒரு டேப்லாய்ட் வகைப்பட்ட பத்திரிகையாக மாற்றுகிறார்.
செய்திப் பத்திரிகை என்பதன் கடமை செய்திகளைச் சொல்வது எனும் இலக்கணத்தை உடைத்து, செய்திகளினூடாக மசாலாத் தூவப்பட்ட மலினமான கிசுகிசுக்களை விற்பனை செய்ததே முர்டோச்சின் பிரம்மாண்ட வளர்ச்சியின் அடிநாதமாக இருந்தது. இது துவக்கம். காலம் செல்லச் செல்ல, வெறும் கிசுகிசுக்கள் மற்றும் வலதுசாரி அரசியலின் வெறிகொண்ட துவேசப் பிரச்சாரங்கள் மட்டுமே செய்திப் பத்திரிகையின் முதன்மைச் செய்திகளாயின. சினிமாத் துறையினர், அரசியல்வாதிகள் போன்ற மேட்டுக்குடியினரின் கள்ளக்காதல் விளையாட்டுக்கள் பற்றிய கிசுகிசுக்களைத் தேடி அவரது பத்திரிகையாளர்கள் அலையும் தேவை இருக்கவில்லை. திரைப்பட, தொலைக்காட்சித் தயாரிப்பு நிறுவனங்களையும் முர்டோச்சே நடத்தி வந்ததால், பிரபலங்கள் தேடி வந்தனர்.
முர்டோச் தொடங்கி வைத்த வழிமுறைகளைப் பிற போட்டி பத்திரிகைகளும் பின்பற்றத் துவங்கியதால், ஆபாசத்தை விற்பதில் அவர்களுக்குள்ளேயே கழுத்தறுப்புப் போட்டிகள் துவங்கின. ‘கதைகள்’ கிடைக்காத சந்தர்பங்களில் எதேச்சையாக நடந்து விடும் குற்றச் சம்பவங்களை இட்டுக் கட்டி மசாலாத் தடவி வெளியிடுவது, நடந்தேயிராத செய்திகளை உருவாக்குவது, பிரபலங்களின் படுக்கையறை விவகாரங்கள், கள்ள உறவுகள் ஆகியவற்றைத் தனியார் உளவு நிறுவனங்கள் மூலம் துப்பறிந்து வெளியிடுவது, அதி நவீன புகைப்படக் கருவிகள் மூலம் அவர்களது அந்தரங்கங்களைப் படம் பிடித்துப்போடுவது போன்ற கீழ்த்தரமான வழிமுறைகளைக் கையாண்டனர். இத்தகைய புகைப்பட நிருபர்கள் ‘பாப்பராஸி’ என்றழைக்கப்பட்டனர். பிரபலங்களின் அரை அம்மண, அம்மணப் படங்கள், கள்ளக் காதல்கள் ஆகியவற்றை படமெடுத்து பத்திரிகைகளுக்கு விற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தொழில், ஒரு மாபெரும் ‘சுயதொழிலாக’ உலகமெங்கும் பரவத்தொடங்கியது. பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் காதல் விவகாரத்தை படம் பிடிப்பதற்காக பாப்பராஸிகள் அவரைக் காரில் துரத்த, அவர்களிடமிருந்து தப்புவதற்காக விரைந்த டயானாவின் கார் கவிழ்ந்து டயானா இறந்ததும், உடனே பாப்பராஸிக் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் பற்றிய விவாதத்தில் பத்திரிகை உலகம் இறங்கியிதும் 90களின் செய்திகள்.
ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!தரத்தில் காமக் கிளுகிளுப்புக்கு இணையானதும் அதே அளவுக்கு சந்தையில் விலை போகக் கூடியதுமான பண்டம் – அச்சத்தையும் வெறுப்பையும் தூண்டும் துவேசப் பிரச்சாரம். ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே சிறுபான்மையினர் மீதான வெறுப்புணர்வையும் அச்சத்தையும் விசிறி விட்டதில் முர்டோச்சின் ஊடகங்களுக்கு பெரும் பங்கு உண்டு.
முர்டோச்சின் ஊடக நிறுவங்கள் தாம் இயங்கிய நாடுகள் அனைத்திலும், அங்கிருந்த வலதுசாரி பாசிஸ்டு கட்சிகளையும் அதன் தலைவர்களையுமே உயர்த்திப் பிடித்தன. இசுலாமியர்கள், இசுலாமிய நாடுகளின் மீது வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டதில் முர்டோச்சின் ஊடகங்கள் தலைமைப் பாத்திரம் ஆற்றின. இந்த அச்சமும் வெறுப்புணர்வும்தான் இன்று வரையில் ஈராக்கில் சிதறும் உடல்கள் மேற்குலக மக்களின் மனசாட்சியை உலுக்காமல் இருப்பதற்கான உளவியல் ரீதியிலான அடிப்படை ஒன்றைத் தோற்றுவித்துள்ளது.
இங்கே தலித்துகள், இசுலாமியர்கள், தமிழ் உணர்வாளர்கள், கம்யூனிஸ்டுகள் மீதான வெறுப்புணர்வை ‘தினமலர்’ திட்டமிட்டே எப்படி தோற்றுவிக்கிறதோ, அதேபோல் மேற்கில் இசுலாமிய வெறுப்பை விதைத்ததில் முர்டோச்சின் ஊடக நிறுவனங்கள் பெரும் பங்காற்றியுள்ளன.
இரண்டாயிரமாவது ஆண்டின் பிற்பகுதியில் இருந்தே தனது பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சிகளில், ‘இதோ சதாம் அணு ஆயுதம் தயாரிக்க அவரது விஞ்ஞானிகளிடம் சொல்லி விட்டார்’, ‘இதோ ஈராக்கில் அணு குண்டு பரிசோதனை நடந்து விட்டது’ என்பது போன்ற பச்சை புளுகுகளை அவிழ்த்து விடத் துவங்கினார் முர்டோச். சதாம் உசேனால் இந்த பூமிக்கே ஆபத்து என்பது போலெல்லாம் விரிந்த அந்தக் கதைகள் ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த சாதாரண மக்களின் மனங்களில் அவரை சாத்தானின் அவதாரம் என்று பதிய வைத்தது. சதாம் அழிக்கப் படவேண்டியவர் என்றும், இந்தப் போரினால் நாகரீக உலகத்து மக்களின் நலவாழ்வு பாதுகாக்கப்படும் என்றும் அம்மக்கள் நம்பும் அளவுக்கு உளவியல் ரீதியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதன் மூலம் போருக்கு ஆதரவாக உலகெங்கிலும் ஒரு பொதுக்கருத்தை உண்டாக்குவதில் முர்டோச் வெற்றியடைந்தார்.
ஈராக்கின் மேலான யுத்தம் துவங்கியதும் ஜார்ஜ் புஷ்ஷுக்கும், டோனி பிளேருக்கும் தனது முழுமையான ஆதரவைத முர்டோச் வெளிப்படையாகத் தெரிவித்தார். அமெரிக்கா இதுகாறும் நடத்தியுள்ள போர்களைப் பற்றிய செய்திகளை சாகசகக் கதைகள் போல் விவரித்து, போர் என்பது மனிதர்கள் கொல்லப்படும் கொடூர நிகழ்வு என்பதாக இல்லாமல் ஒரு சாகச விளையாட்டு என்பதாகப் பொதுபுத்தியில் பதியச் செய்தார். சர்வதேச அளவிலான பிற முதலாளித்துவ பத்திரிகைகளும் இதே பாணியில்தான் இயங்கின என்றாலும், முர்டோச்சின் பத்திரிகைகளே இதில் முன்னணியில் நின்றன.
போரின் முடிவில் அணு ஆயுதங்கள் ஏதும் ஈராக்கில் கண்டிபிடிக்கப் படவில்லை. ஆனால், முர்டோச்சின் பத்திரிகைகள் உள்ளிட்டு அந்தக் கதைகளைப் பரப்பிய எந்த முதலாளித்துவ ஊடகமும், இத்தகையதொரு பொய்யான பொதுக்கருத்தை உருவாக்கியதற்காக தண்டிக்கப்பட வேண்டும் என்று முதலாளித்துவ அறிஞர்களோ மேற்குலக ஜனநாயகவாதிகளோ கருதவில்லை. போரில் கொல்லப்பட்ட  ஈராக்கியர்களின் எண்ணிக்கை சுமார் பத்து லட்சம். இன்று அந்த நாடே வாழ்க்கையிழந்து நிற்கிறது. எனினும் முர்டோச் வெளியிட்ட செய்திகளுக்கு என்ன ஆதாரம் என்றோ, அதன் விளைவுக்கு என்ன பதில் என்றோ யாரும் கேட்கவில்லை.
பல்வேறு நாடுகளின் ஆளும் வர்க்கத்தோடும் அதிகார வர்க்கத்தோடும் முர்டோச் கொண்டிருந்த உறவும், செல்வாக்கும், அவரது மீடியா சாம்ராஜ்ஜியத்தின் அபரிமிதமான வீச்சும் அவருக்கு வரம்பற்ற பலத்தையும் திமிரையும் அளித்திருந்தன. ஈராக் மட்டுமல்லாமல், சிரியா, லிபியா, பாலஸ்தீனம் என்று அமெரிக்காவுக்கு அடங்காத இசுலாமிய நாடுகள் மீதும் அதன் தலைவர்கள் மீதும் விஷத்தைக் கக்கி, உலகெங்கும் மக்கள் மத்தியில் இசுலாமிய விரோதத்தை ஊட்டி வளர்க்கும் முர்டோச்சின் பத்திரிகை நிறுவனத்தில் இரண்டாம் பெரிய பங்குதாரர் சவூதி இளவரசர் அல்லாவி பின் தலால். (மதமா – வர்க்கமா என்கிற முரண்பாடுகள் எழும் போது முதலாளித்துவவாதிகள் எப்போதும் சரியான நிலையையே எடுக்கிறார்கள் என்பதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டு).
தற்போது முர்டோச்சின் வழிமுறைகள் அம்பலமாகியிருப்பினும் இதெல்லாம் முதலாளித்துவ உலகத்திற்கு புதிய செய்தியில்லை. இன்றைக்கு முர்டோச்சைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கும் பிற முதலாளித்துவ ஊடகங்கள் பின்பற்றுவதும் இதே வழிமுறைகளைத்தான். ஆயினும், தற்போது எழுந்திருக்கும் சலசலப்புகளால் 168 வருடங்களாக வெளியாகி வந்த ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகையை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு முர்டோக் ஆளாகியுள்ளார். விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டு கைகட்டி நிற்கிறார்.
எப்பேர்பட்ட கொம்பனாக இருந்தாலும் அந்தத் தவறுக்கு தண்டனை உண்டு என்பதைப் போன்றும், மேற்கு நாடுகளில் நிலவும் தனிமனித உரிமை போன்ற ஜனநாயக விழுமியங்கள் இன்னமும் செத்துப் போகாமல் இருப்பதன் ஒரு சமகால சாட்சிதான் முர்டோச் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது என்பது போலவும் சர்வதேச ஊடகங்கள் எழுதுகின்றன. ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களும் அவ்வாறே நம்பவைக்கப் படுகிறார்கள். உப்புத் தின்றவன் தண்ணி குடிப்பான்; தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பான். படம் முடிந்தது. ரசிகர்கள் வீட்டுக்குக் கிளம்பலாம என்று முதலாளித்துவ ஊடகங்கள் இதற்கு ஒரு ‘சுபம்’ போட்டு முடிக்கப் பார்க்கின்றன.
ஆனால், இது அத்தனை சுலபத்தில் கடந்து போகும் ஒரு பிரச்சினையல்ல. முர்டோச்சின் பாணியும் வழிமுறைகளும் அவருக்கு மட்டுமே சொந்தமானதாக இல்லை என்பது ஒரு புறம் இருக்க, இன்றைக்கு ‘குற்றங்கள்’ என்று அவர்மேல் சுமத்துப்பட்டுள்ள செயல்கள் எதுவுமே அவர் புரிந்துள்ள உண்மையான குற்றங்களின் நிழலைக் கூட தொடவில்லை என்பதே உண்மை.
அரச குடும்பத்தையே ஒட்டுக்கேட்டது, ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களின் தனிமனித உரிமையில் கைவைத்தது, போன்ற சில்லரை அத்துமீறல்கள்தான் இன்று இங்கிலாந்திலும் பிற மேற்கத்திய நாடுகளிலும் அதிர்ச்சியையும் சத்தியாவேசத்தையும் தூண்டியுள்ளது. ஈராக் பற்றி வெளியிட்ட புளுகுச் செய்திகளுக்காக அவரைத் தண்டிக்க வேண்டும் என்று எவரும் கோராததற்குக் காரணம், அது ஏகாதிபத்தியங்களின் விருப்பம் மற்றும் நலன் சார்ந்தது. இந்த அடிப்படையில் இருந்துதான் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்களுடைய உயிர்களை விட அரச குடும்பத்தினர் மற்றும் தனிநபர்களின் ‘ப்ரைவசி’ மற்றும் தனிநபர் உரிமைகளை மேன்மையானதாகச் சித்தரிக்கும் அவர்களின் விசாரணைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!நியூஸ் கார்பொரேஷன் நிறுவனத்தின் தலைமையை இன்னமும் முர்டோச் குடும்பத்தினரே ஆக்கிரமித்துள்ளனர். மேற்கத்திய கார்ப்பரேட் நிர்வாக முறையின் பார்வையில் மிகவும் பின்தங்கியதான இந்தக் குடும்ப ஆதிக்கமும், முர்டோச்சை நோக்கி எழும் விமர்சனங்களுக்கு ஒரு கூடுதல் காரணமாக இருக்கிறது. கூக்குரல்கள் அனைத்தும் இந்தத் ‘தலையை’ மட்டுமே குறிவைக்கின்றன. நியூஸ் கார்பொரேஷன் எனும் மொத்த உடலையும் இயக்கி அதன் நாளங்களில் இரத்தமாய்ப் பாய்ந்து கொண்டிருக்கும் ஏகாதிபத்திய நலன் குறித்த விவாதங்களே எழவில்லை என்பதிலிருந்து நாம் சில உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும்.
மீளாத போர் வெறியில் மூழ்கிக் கிடக்கும் ஏகாதிபத்தியங்களுக்கு ரூபர்ட் முர்டோச்களின் தேவை தீர்ந்து விடவில்லை. சதாம் உசேனும், பின்லேடனும் ஒழிந்து விட்டார்கள். ஆனால், நாளையே வேறு ஒரு மூன்றாம் உலக நாட்டின் மீது ஆக்கிரமிப்புப் போரைத் துவக்குவதற்கு முன் மக்களின் பொதுபுத்தியைக் கட்டமைக்க வேண்டியிருக்கும். இசுலாமியர்கள் மேல் கருத்துக்களத்தில் தாக்குதல் தொடுத்து அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டியிருக்கும். அதற்கு ரூபர்ட் முர்டோச் கட்டாயம் தேவைப்படுவார்.
அவர் தயாரித்து வழங்கிய பாசிச பிரச்சார ஆயுதத்தின் பணி இன்னமும் நிறைவுறவில்லை. இறுகும் பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வை ஏகாதிபத்தியங்கள் போர்களினூடேதான் தேடிச் செல்லும். அப்போது பொறுத்தமான கதைகள் விதைக்கப்பட வேண்டும்; வில்லன்கள் குறித்த அச்சமூட்டும் வர்ணனைகள் செய்யப்பட வேண்டும்; மக்களின் பொதுக்கருத்தை நெம்பி வளைக்க வேண்டும் – அதற்கு நியூஸ் கார்ப்பொரேஷன் போன்ற பிரச்சார ஆயுதங்கள் வேண்டும். எனவேதான், படுக்கையறையை எட்டிப்பார்த்த ரூபர்ட் முர்டோச்சின் அநாகரீகங்கள் பரபரப்பாகப் பேசப்படும் அளவுக்கு அவரின் கொலைப் பாதகங்கள் பேசப்படுகிறதில்லை.
ரூபர்ட் முர்டோச் ஊடகத் துறையில் துவக்கி வைத்துள்ள போக்குகள் மேற்குலகம் மட்டுமே சம்பந்தப்பட்ட ஒன்றல்ல. அதன் பாதிப்புகளும், பிரதி பிம்பங்களும் உலகெங்கும் உள்ள முதலாளித்துவ ஊடகங்களின் செயல்பாடுகளில் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவில் தனியார் தொலைகாட்சி சேனல்கள் அனுமதிக்கப்பட்டு, இன்றைய தேதியில் சுமார் 600 தொலைக்காட்சி சேனல்களுக்கான லைசென்சுகளை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை வழங்கியிருக்கிறது.
மேற்கத்திய நாடுகளைப் போல் செய்திகளுக்கு மசாலா சேர்ப்பது, பரபரப்புக் கூட்டும் ‘Breaking News’ மற்றும் ‘Exclusive News’ போன்ற கழிசடைக் கலாச்சாரங்கள் தொன்னூறுகளின் மத்தியிலிருந்து ஸ்டார் குழுமத்தால் இந்தியாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டன. புதிய ரக உயர் நடுத்தரவர்க்கத்தினரின் நொறுக்குத் தீனிகளுக்கு இந்த பரபரப்பு பாணி செய்திகள் சுவை கூட்டின.
செய்தியையும் அதன் கண்ணோட்டத்தையும் பகுத்தறிய முடியாத வண்ணம், ரூபர்ட் முர்டோச்சின் பாணியை நகலெடுத்து ‘டைம்ஸ் நௌ’, ‘என்.டி.டி.வி.’, ‘ஐ.பி.என்.’, ‘டி.வி.9′, ‘ஹெட்லைன்ஸ் டுடே’ என்று புற்றீசல் போல ஊடக கார்பரேட்டுகள் தோன்றின. இவர்களின் செய்திச் சந்தையின் இயக்கத்திற்கான அச்சாணி, மலிவான முறையில் உணர்ச்சியையும் பரபரப்பையும் தூண்டுவது மட்டுமே என்றான பின்னால், இதுகாறும் போலியாகவாவது தூக்கிப் பிடிக்கப்பட்டு வந்த நேர்மை, புனிதம் போன்ற பழைய விஷயங்கள் தேவையற்றதாகின.
லண்டனைச் சேர்ந்த மாணவியான மில்லி டோலரின் மரணத்தில் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பின்பற்றிய அதே வழிமுறைகளைத்தான் தில்லியைச் சேர்ந்த ஆருஷி என்கிற பள்ளி மாணவியின் மரணத்திலும் இந்திய ஊடகங்கள் பின்பற்றின. ரூபர்ட் முர்டோச்சின் ஊடகங்கள் உலகளவில் இசுலாமியர்கள் மீதும் இசுலாமிய நாடுகள் மீதும் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றன என்றால், இந்திய முதலாளித்துவ ஊடகங்களோ இசுலாமியர்கள் மீதும் பாகிஸ்தான் மீதும் அவதூறுப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளன. ஒவ்வொரு முறை இந்தியாவில் குண்டுகள் வெடிக்கும் போதும், செய்திச் சேனல்கள் விசாரணையேதுமின்றி இசுலாமியர்களை நோக்கியும் பாகிஸ்தானை நோக்கியும் விரலைச் சுட்டுகின்றன.
ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!முர்டோச்சின் ஊடகங்கள் சொன்ன பேரழிவு ஆயுதங்கள் பற்றிய புளுகுகள் அம்பலமானதைப் போன்றே இந்திய ஊடகங்கள் இசுலாமியர்களைக் குற்றவாளிகளாக்கிய எத்தனையோ குண்டு வெடிப்புகளின் உண்மையான காரணம் இந்துத்துவ கும்பல்தான் என்கிற உண்மை அம்பலமாகியிருக்கிறது. தனது பொய்கள் அம்பலமான போது ரூபர்ட் முர்டோச் கடைபிடித்த அதே விதமான கள்ள மௌனத்தைத்தான் இந்திய ஊடகங்களும் கடைபிடிக்கின்றன.
மேற்கில் அன்றாட வாழ்வின் குரல்வளை மேல் அமர்ந்து அழுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார யதார்த்தத்தை பயங்கரவாத பீதியூட்டி மடைமாற்ற முடிகிறது. இங்கே தமது வாழ்வாதாரங்களைக் காப்பாற்றிக் கொள்ள போராட்டத்தில் இறங்கியுள்ள விவசாயிகள், ஆதிவாசி மக்களின் போராட்டங்களைப் பின்தள்ளுவதற்கு பயங்கரவாதம்  மட்டுமல்ல காந்தியவாதமும் ஊடகங்களுக்குப் பயன்படுகிறது.
நாட்டின் அரசியல் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிப்பதிலும், திசை திருப்புவதிலும், அரசியல் தலைவர்களை உருவாக்குவதிலும் அழிப்பதிலும், ஊடகங்களின் பாத்திரம் முன் எப்போதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. உணவு, உடை, பழக்க வழக்கங்கள், விருப்பு வெறுப்புகள், ரசனை, சிந்தனை முறை உள்ளிட்ட அனைத்தையும், அதாவது நமது ஆளுமையை அடக்கி ஆள்வதில், அல்லது வளைந்து உருவாக்குவதில் ஊடக முதலாளிகளின் பாத்திரம் முன் எப்போதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகரித்து விட்டது.
ரூபர்ட் முர்டோச் எனும் கிழவன் நமது தோளில் அமர்ந்து உத்தரவிடுகிறான். சிரிக்கவும், வெறுக்கவும், அழவும் சொல்லிக் கொடுக்கிறான். முன்னால் சென்று வழி காட்டுகிறான். பின்னால் நின்று கண்காணிக்கிறான்.
அவனைக் கூண்டில் ஏற்றிவிட்டதாகவும் தண்டிக்கப்போவதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள் பத்திரிகை சுதந்திரத்தின் காவலர்கள்.

நன்றி : வினவு வலைதளம்

Thursday, March 19, 2015

கலப்பட அபாயங்கள் 2 (தேங்காய் எண்ணெய் , சமையல் எண்ணெய்)

கலப்பட அபாயங்கள் 1

தேங்காய் எண்ணெய் , சமையல் எண்ணெய் 
அடுத்து நாம் காணப் போவது காலையில் நாம் தினமும், தலைக்கு, (சிலர் கால், கைகளுக்கும் கூட) தேய்த்துக் கொள்ளும் தேங்காய் எண்ணெய்  பற்றி அதிர்ச்சி தரும் உண்மைகள்.  

தற்போது பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் சில கம்பெனி தேங்காய் எண்ணெய், தேங்காயில் இருந்து தயாரிக்கப்பட்டதில்லை.

தேங்காய் எண்ணெய் என்றாலே அதற்கு முழுமை யான மூலப்பொருள் தேங்காய்தான். பருத்த தேங்காய் களை உடைத்து, காயவிட்டு செக்கில் ஆட்டி எடுத்து எண்ணெய் பெறப்படுகிறது. தலை முடிக்கு தேய்ப்பது மட்டுமல் லாது, சித்தா உள்ளிட்ட பலதரப்பட்ட மருந்துகள் தயாரிப்பிலும், உணவிலும் தேங்காய் எண்ணெய் அதிகம் பயனாகிறது. 

ஆனால் சமீப காலமாக பெரும்பாலான கடைகளில் விற்கும் தேங்காய் எண்ணெய், தேங்காய் எண்ணெயே இல்லை. 

 சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு  பதில் வேறு என்ன இருக்க முடியும் ?
தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை .

பின் எப்போது தான் கூடுகிறது ?

கச்சா எண்ணெய்  விலை கூடும் போது தான் விலை கூடுகிறது ..
கச்சாஎண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெய்க்கும் -என்ன தொடர்பு ?
பல கம்பெனிகள் தேங்காய் எண்ணெயை மினரல் ஆயில் என்ற பெட்ரோலிய  கழிவுடன் தேங்காய் எண்ணெய்  எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய்  என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்கிறார்கள்.


அவர்கள் பொய் சொல்வதில்லை. உண்மையை அவர்களின் தயாரிப்புக்களின் மேல் அட்டையிலேயே (லேபிள்) அச்சடித்தும் இருக்கிறார்கள். நாம்தான் பார்த்துப் படித்து புரிந்து கொள்வதில்லை.

மினரல் ஆயில் என்றால் என்ன ?..

பொதுவாக கச்சா எண்ணெயை சுத்திகரித்து பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு துவங்கி ரோட்டுக்கான தார் வரை 24 வகைப் பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “மினரல் ஆயில்’. இதில் பெட்ரோலியப்  பொருட்களின் ஆக கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண்ணெண்ணெய்  என்னும் லிக்யுட்  பேரபின்  ஆகும் ‘அமெரிக்க மண்ணெண்ணெய்’ இதை இப்படியும் சொல்வார்கள்”சீமை எண்ணெய் – சீமெண்ணெய்” .
இதற்கு நிறமோ, மணமோ இருக்காது.இதன் அடர்த்தி அதிகம் .எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விடலாம் .

இந்த மினரல் ஆயில் பற்றி விக்கிபீடியாவின் விளக்கம்:
 A mineral oil is any of various colorless, odorless, light mixtures of higher alkanes from a non-vegetable (mineral) source, particularly a distillate of petroleum
Mineral oil is a clear, colorless, odorless, petroleum derivative. It's chemically similar to petroleum jelly and is produced in heavy and light grades, or viscosities. There are three further classifications — paraffinic, aromatic, and naphthenic — based on what type of alkanes the oil is made from, and they have slightly different chemical makeups and properties. Inexpensive and easy to make, it's used in many different products, including cooling systems, lubricants, cosmetics, and medicine.

நிறம், மணமற்ற, அடர்த்திமிக்க இந்த மினரல் ஆயிலுடன் தேங்காய் வாசத்திற்கான எசன்ஸ் கலந்து தயாரித்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் விற்பனைக்கு வருகிறது. இந்த மினரல் ஆயிலுடன் எந்த எண்ணெயையும் கலப்படம் செய்தும் விற்க முடிவதால் சிலர் சிறிதளவு தேங்காய் எண்ணெய்யுடன், மினரல் ஆயிலை பெருமளவில் கலந்து விற்பதும் நடக்கிறது. 

இந்த எண்ணெயை தலைக்குத் தேய்ப்பது உள்ளிட்ட வெளிப்பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது ஒருபுறமிருக்க, நம் தென்மாவட்டத்தின் பலரது வீடுகளில் உணவு தயாரிப்பில் அதிகளவில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் சாதம், முறுக்கு, பலகாரங்களுடன் தாளிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.

பாக்கெட்டில் அடைத்து விற்கும் இந்த மினரல் ஆயிலை அறியாமையில் பலரும் சமையலுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். தேங்காய் எண்ணெய்யில் மட்டுமல்லாது நாம் பயன்படுத்தும் பலதரப்பட்ட ஹேர் ஆயில்கள், சோப்புகள், முக லோஷன்களிலும் ‘மினரல் ஆயில்’ அரக்கன் இருக்கிறான்.

மினரல் ஆயிலில் உருவாகும் தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் தோல் வறண்டு போகும். தலைமுடி தன் ஜீவனை இழக்கும். பலருக்கும் ஒவ்வாமையில் முடி கொட்டும். சீக்கிரமே நரைத்துப் போகும். அரிப்பு வரும், குழந்தைகளுக்கு பயன்படுத்துவது மேலும் ஆபத்தானது. இந்த மினரல் தேங்காய் எண்ணெய்யை உணவுக்குப் பயன்படுத்துவது இன்னும் கொடுமையானது என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். 

பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை ,எல்லாவிதாமான முக லோஷன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னும் அரக்கன் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம் தான் 

தேங்காய் எண்ணெய்  என்று நாம் இது வரை நம்பி இருக்கிற -மினரல் ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய்  இவைகள் ..  சாம்பிளுக்கு சில 
    Inline image 3
 Inline image 4
               
     
நாம்  முன்பெல்லாம்  பனிக்காலங்களில் நம் வீட்டில் வைத்திருக்கும் தேங்காய் எண்ணெய்  உறைந்து போய் விடும். ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் எண்ணெய் உறைவதில்லை. இதை யோசித்திருக்கிறோமா? ஆனால் அதே சமயம் பெரும்பாலான எல்லாக் கம்பெனி எண்ணெய் பாட்டில்களின் மேலே லேபிளில் ஒரு முக்கியமான விஷயம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அது இதுதான். 

“STORE IN A COOL & DRY PLACE PROTECTED FROM SUN LIGHT”

புரிந்து கொள்ளுங்கள். தே. எண்ணெயாக இருந்தால் குளிர் காலத்தில் உறைந்து போகும். வெயிலில் வைத்து உபயோகிப்போம். ஏனெனில் அது உண்மையான       தே. எண்ணேய். ஆனால் இன்று நாம் உபயோகிக்கும் எண்ணெயை குளிர்ந்த, வறட்சியான இடத்தில் வைக்க சொல்கிறான். கூடவே வெயில் படாமல் வைக்கவும் சொல்கிறான். ஏனெனில் வெயில் பட்டால் மண்ணெண்ணெய் ஆவியாக ஆரம்பித்து விடும். என்ன ஜாக்கிரதை பாருங்கள்.

இதை விட இன்னொரு அதிர்ச்சி தரும் எச்சரிக்கை. 

Warning : For External use only .
Keep out of reach of children to avoid
accidental drinking; and inhalation
which can cause serious injury.
Discontinues use if skin irritation occurs

இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

எச்சரிக்கை: வெளி உபயோகத்திற்கு மட்டும்
குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.
தற்செயலாக குடிப்பதையோ, நுகர்வதையோ தவிர்க்கவும்,
ஏனெனில் அவை மோசமான தீங்கை உண்டாக்கும்.
தோலில் எரிச்சல் ஏற்பட்டால் உபயோகிப்பதை நிறுத்தவும்.

இரண்டு எலும்பும், ஒரு மண்டை ஓடும் போட்டு அபாயம்னு சொல்லலை. அவ்வளவுதான். இது நான் சொல்லவில்லை குழந்தைகளுக்கென்றே பிர்த்யேகமாக பொருட்களை தயாரித்து விற்கும் புகழ்பெற்ற ஜான்ஸன்ஸ் & ஜான்ஸன்ஸ் கம்பெனி அதன் ஹேர் ஆயில் லேபிளில் சொல்கிறது.

குழந்தைகளுக்கு உபயோகிக்கும் ஆயிலையே குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க சொல்கிறது. எண்ணை வாய்க்குள் போகவும், சுவாசிக்கும் போது மூச்சுக் காற்றோடு உள்ளே போகவும் வாய்ப்பிருக்கும்போது அது மோசமான தீங்கை உண்டாக்கும் என்கிறது. எரிச்சல் வந்தால் நிறுத்து என்கிறது. நம்ம பாப்பா எரிச்சல்னு சொல்லி பேசத் தெரியுமா? யோசியுங்கள் நண்பர்களே.

தேங்காய் எண்ணெய்  வாங்குவதாக இருந்தால் பக்கத்தில் எண்ணெய்  ஆட்டும் மில்களில் இருந்து வாங்குங்கள். டப்பாக்களில் அடைத்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண்ணெய் யை  வாங்காதீர்கள். நல்ல தேங்காய் எண்ணெய்  முடியை நன்கு வளர வைக்கும். கலப்படமில்லா தேங்காய்  எண்ணெய்  முடி வளர ,கருக்க உதவும்.

இனி அடுத்து நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் சமையல் எண்ணெய்களான கடலை எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், பாம் ஆயில் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்.

முன்னர் கூறிய தேங்காய் எண்ணெய் எப்படி தயாரிக்கிறார்களோ அது போலவே சமையல் எண்ணெய்களும்,  லிக்யுட் பாரஃபின் என்ற பெட்ரோலியத்தின் ‘பை ப்ரோடக்ட்’  என்னும் கழிவுப் பொருளுடன்  தேவையான வாசத்திற்கான ‘ஃப்ளேவர்’ கலந்து தயாரித்து சமையல் எண்ணெய் என்ற பெயரில் விற்பனைக்கு வருகிறது.
மூலப்பொருளை விட பல மடங்கு விலை குறைவான லிக்யூட் பாரஃபினைக் கலப்பதால் எண்ணெயின் அடக்க விலை பெருமளவில் குறைந்து விடுகிறது. வியாபார போட்டிக்காக குறைந்த விலையில் கலப்பட எண்ணெயை விற்பவர்களுக்கு மனிதர்களின் ஆரோக்கியம் பற்றிய அக்கறை இருப்பதில்லை.

அதற்காக மேலே சொன்ன எண்ணெய்களை கலப்படத்தை அஞ்சி தவிர்த்து விட்டு ரீஃபைண்டு ஆயிலை உபயோகப்படுத்தலாமா என்றால் அதில் இன்னும் அதிக ஆபத்து இருக்கிறது.

சாதரணமாக ஒரு பொருளில் இருந்து எண்ணெய் எடுப்பதற்கு அந்தப் பொருளை காய வைத்து, அரைத்து எண்ணெய் எடுப்பார்கள். ஆனால் ரீஃபைண்டு ஆயிலைப் பொறுத்தவரையில், முதலில் எண்ணெய் வித்துக்களைப் பிரித்து, நசுக்கி, நீராவி முறையில் ( டிஸ்டிலேஷன்) 110 முதல் 180 டிகிரி வரை வெப்பத்தை உயர்த்தி எண்ணெயை பிரித்தெடுக்கிறார்கள்.

சக்கையான வித்துக்களில் இன்னமும் மிச்சமிருக்கிற எண்ணெயைப் பிழிந்தெடுக்க பெட்ரோலிய உற்பத்தியின் போது கிடைக்கும்  ஹெக்ஸேன் என்னும் திரவத்துள் சக்கையை ஊற வைத்து பின்னர் , வெப்பப்படுத்தி  நீராவி முறையில் (டிஸ்டிலேஷன்) வெவ்வேறு கொதி நிலையில்  தனித்தனியே கிடைக்கும் எண்ணெயையும், ஹெக்ஸேனையும் பிரித்து எடுத்துக் கொள்கிறார்கள்.

இப்படிப் பிரித்துடுக்கப்பட்ட எண்ணெயை இன்னும்  சுத்தமாக்க பாஸ்பேட் எண்ணும் கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது.

இதுவரை நடந்ததெல்லாம் பிரித்தெடுப்பு மட்டுமே. அடுத்து நடப்பதுதான்   ரீஃபைனிங், டிகம்மிங், நியூட்ரிலைசேசன்  போன்ற பிராஸஸ்கள் அடுத்தடுத்து செய்யப்படும். இறுதியில் காஸ்டிக் சோடா  அல்லது சோடா ஆஷ் மூலம் ப்ளீச்சிங் செய்யப்பட்டு பிசுபிசுப்பில்லாத, நிறமற்ற , மணமற்ற திரவமாக எண்ணெய் கிடைக்கிறது. இதில் தேவைப்படும் நிறம் மற்றும் மணம் வேண்டி அதற்கான கெமிக்கல் வண்ணமூட்டிகளையும், ஃப்ளேவர் என்னும் மணமூட்டிகளையும் சேர்த்து பாட்டிலில், டின்னில், பாக்கெட்டுக்களில் அடைத்து கம்பெனி லேபிளோடு விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.

இதில் அபாயகாரமானவைகள் நிறைய இருக்கின்றன. ஹெக்ஸேன் என்னும் கெமிக்கல் உடலில் தசைகள் மற்றும் எலும்புகளை கடும் பாதிப்புக்களுக்கு உட்படுத்தும், மேலும் இது ஒரு புற்று நோய்க் காரணி என்றும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள் என்பதற்காகவே தெருவோரக் கடைகளில் வடை, போண்டா, சில்லி சிக்கன் வாங்கி சாப்பிடக்கூடாது என நமக்கு சொல்லப்படுகிறது. ஒரு முறை வெப்பப்படுத்திய எண்ணெயை மறுமுறை சூடு படுத்துவது நல்லதில்லை என்றால், ரீபைண்டு ஆயில் தயாரிக்கும்போது உச்சபட்சமாக கிட்டத்தட்ட 500 டிகிரி வரை வெப்பபடுத்தப்பட்டு பின்னர் குளிர்விக்கப்பட்டு தயாரிக்கப்படுவது பற்றி என்ன சொல்வது? இப்படி ஏற்கன்வே கொதிக்க வைக்கப்பட்ட எண்ணெயைத்தான் நாம் வாங்கி உபயோகப்படுத்துகிறோம். இயற்கையான சத்துக்கள் எல்லாம் இப்படித் தயாராகும் எண்ணெயில் அழிந்து விடுவதால் செயற்கையான சத்துக்கள் இந்த எண்ணெயில் இறுதியில் கலக்கப்படுகிறது.

 ஆகவே இந்தக் கலப்படங்களைத் தவிர்த்து ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால், நீங்களே நேரில் சென்று எள்ளையோ, கடலையையோ, தேங்காயையோ  வாங்கி, காய வைத்து, உங்கள் ஊரிலேயே அருகில் இருக்கும் செக்கு என்னும் எண்ணெய் அரவை ஆலைக்கு கொண்டு சென்று உங்கள் கண் முன்னேயே ஆட்டி கொண்டு வந்து உபயோகியுங்கள். அல்லது விலை சற்றுக் கூடுதலாக இருந்தாலும் கூட உங்களுக்கு தெரிந்த நம்பகமானவர்கள் மூலம் எண்ணெயை வாங்கிக் கொள்ளுங்கள்.

இன்னும் அடுத்தடுத்து கலப்படங்களை விளக்குகிறேன் .

கலப்பட அபாயங்கள் 1 (டூத் பேஸ்டின் மர்மங்கள்)

கலப்பட அபாயங்கள் 1

டூத் பேஸ்டின் மர்மங்கள்:

பெரும்பாலானோர் காலையில் எழுந்ததும் முதலில் செய்யும் காரியம் டூத்பேஸ்டு கொண்டு பல் துலக்குவதுதான்.. முன்பெல்லாம் நமது முன்னோர்கள் ஆலங்குச்சியையும், வேப்பங்குச்சியையும் பல்துலக்க பயன்படுத்தினர். உமிக்கரி, உப்பு, இடித்த மிளகு சேர்த்து பல் தேய்த்த காலமும் உண்டு.

ஆனால், இன்று அதிகாலையின் சுறுசுறுப்பை நம்மில் முதலில் விதைப்பது நறுமணம் கவழும் டூஸ் பேஸ்டுகளாகும்.. சுகந்தமான சுவாசத்திற்கும், வலுவான பற்களுக்கும் நம்மில் பெரும்பாலானோர் டூத் பேஸ்டுகளையே நம்பியுள்ளனர். ப்ரஸ் மற்றும் டூத் பேஸ்டுகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் இன்றைய காலக்கட்டத்தில் செலவிடப்படுகிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சார்ந்த ஏராளமான டூஸ் பேஸ்டுகளும், ப்ரஸ்ஸுகளும் நமது சந்தையை ஆக்கிரமித்துள்ளன.

மினி ஸ்க்ரீனில் தொடர்ந்து காட்டப்படும் டூத் ப்ரஸ், பேஸ்ட் விளம்பரங்கள் நம்மை வலுக்கட்டாயமாக வாங்கத் தூண்டுகின்றன. பற்கள் மற்றும் ஈறுகள் பலம் பெற என ஒரு விளம்பரம், சுகந்தமான சுவாசத்திற்க்கு இன்னொரு விளம்பரம், பற்கள் பளீரிட மற்றொரு விளம்பரம் என விளம்பரங்கள் அளிக்கும் வாக்குறுதிகளால் அடிக்கடி நாம் ப்ராண்டுகளையும் மாற்றி வருகிறோம்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போலவே தான் டூத் பேஸ்டும். நீங்கள் விளம்பரங்களில் காண்பதுபோல ப்ரஸ் முழுக்க பேஸ்டை நிரப்பிவிட்டா பல் துலக்குகின்றீர்கள்? அவ்வாறெனில் நீங்கள் உங்கள் பற்களுக்கு தீங்கிழைக்கின்றீர்கள் என்பதுதான் உண்மை. காரணம் ஃப்ளோரைடும், இதர இரசாயனப் பொருட்களும் கலந்த டூத் பேஸ்டை ப்ரஸ்ஸில் ஒரு பட்டாணி அளவுக்கு எடுத்தாலே போதுமானது. இவ்விடத்தில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில் டூத் பேஸ்டின் அளவில் அல்ல, மாறாக எவ்வாறு பேஸ்டை உபயோகின்றீர்கள் என்பதாகும்.

விளம்பரங்கள் உங்களை வழி தவறச் செய்துவிடும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டால் நல்லது.

ப்ளோரைடு கலந்த பற்பசைகளை பயன்படுத்துமாறு பல் மருத்துவக் கழகங்களும், பல் மருத்துவர்களும் பொதுவாக அறிவுறுத்துகிறார்கள்.

ப்ளோரைடு இயற்கையாகவே கிடைக்கின்ற ஒன்று. அது நமது பற்களும் எலும்புகளும் வலிமையாக இருக்க உதவுகிறது. பல சோதனைகளில், ப்ளோரைடு கலந்த பற்பசை உபயோகிப்பவர்களுக்கு பற்குழி விழுவது குறைகிறது அல்லது தவிர்க்கப்படுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் அளவுக்கு அதிகமான ப்ளோரைடு உபயோகம் பற்களுக்கு ஊறு விளைவிக்கும். அது மட்டுமல்லாமல் உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.
1997-ம் ஆண்டின் மத்தியிலிருந்து, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA) ப்ளோரைடு கலந்த பற்பசைகளில் கீழ்க்கண்ட எச்சரிக்கையை அச்சிட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.

“WARNINGS: Keep out of reach of children under 6 years of age. If you accidentally swallow more than used for brushing, seek PROFESSIONAL HELP or contact a POISON CONTROL center immediately.”

 “ஒரு முறை பல் துலக்குவதற்கு வேண்டிய அளவை விட அதிகமான பற்பசையை உட்கொண்டாலே உடனடியாக மருத்துவ உதவியை நாடவும் அல்லது, விஷமுறிவு மையத்தை நாடவும்”

என்ற எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.
ப்ளோரைடு கலவையை நேரடியாக உட்கொண்டால் விஷம் தான். ஆனால் பற்களிலும், எலும்புகளிலும் ப்ளோரைடு கலந்திருக்கிறது. இது பற்களை வலுவானதாக ஆக்குகிறது.

பூமியில் இயற்கையாக கிடைப்பது கால்சியம் ப்ளோரைடு என்ற தாது உப்பு வடிவில் உள்ளது. ஆனால் பற்பசையில் கலக்கப்படும் ப்ளோரைடு இந்த வகையில் இல்லை. சோடியம் ப்ளோரைடு அல்லது ப்ளூரோசாலிசிக் அமிலம் பற்பசையில் உபயோகிக்கப்படுகிறது. இவை அலுமினியத் தொழிற்சாலைகளில் விஷக் கழிவுகளாக வெளியேறுபவை. இவை எலி பாஷாணத்திலும், பூச்சி மருந்திலும் உபயோகப் படுத்தப்படுகிறது. இவைகளையே ப்ளோரைடு தேவைக்காக பற்பசையில் சேர்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

ப்ளோரைடு நல்லதா கெட்டதா என்பது குறித்து வல்லுநர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
                    
 Inline image 1
Directions
Adults and children 2 years of age and older:
brush teeth thoroughly, preferably after each meal or at least twice a day,
or as directed by a dentist or physician
Children 2 to 6 years:
Use only a pea sized amount and supervise child’s brushing and
rinsing (to minimize swallowing)
Children under 2 years: ask a dentist or physician

 
 
 இதன் தமிழ் மொழிபெயர்ப்பு:


உபயோகிக்கும் முறை:
பெரியவர்கள் மற்றும் 2 வயதுக்கு மேலானவர்கள்:
ஒவ்வொரு முறையும் உணவு உண்ட பின்னால் அல்லது தினமும் இருமுறை
அல்லது மருத்துவர் / பல் மருத்துவர் சொல்படி பற்களை நன்றாக ப்ரஷ் செய்யவும்
2 – 6 வயது குழந்தைகள்:
பட்டாணி அளவு மட்டும் உபயோகிக்க வேண்டும்.
பல் துலக்கும் போதும், கொப்பளிக்கும் போதும் அவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும். (விழுங்குவதை குறைத்துக் கொள்ள வேண்டும்)
2 வயதுக்கும் குறைந்த குழந்தைகள்: மருத்துவர் / பல் மருத்துரிடம் கேட்கவும்.

 இது மட்டுமல்ல இன்னொரு எச்சரிக்கையயும் நமக்காக நம் நலனுக்காக விடுக்கிறார்கள்.
அது இதோ:
Warnings: Keep out of reach children under 6 years of age
If more than used for brushing is accidentally swallowed, get medical help or contact a Poison Control Center right away

  இதன் மொழிபெயர்ப்பு:
எச்சரிக்கை : 6 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைத்துக் கொள்ளவும்.
அதிகப்படியாக உபயோகித்து, தவறுதலாக விழுங்கி விட்டால், உடனே மருத்துவ உதவி பெறவும் அல்லது சரியான முறையில் விஷக் கட்டுப்பாட்டு நிலையத்தை அனுகவும்.
 இந்த ‘உபயோகிக்கும் முறை மற்றும் எச்சரிக்கை’ இந்த ஒரு பேஸ்ட்டில் மட்டும் சொல்லப்படவில்லை. நீங்கள் வாங்கும் எல்லா பேஸ்ட்டின் அட்டையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எழுத்துக்கள்தான் மிக மிகச் சிறியதாக இருக்கும். பிரசுரமாகியும் இருக்கணும். ஆனால் படிக்கக்கூடாது. இது வடிவேலுவின் ‘வரும் ஆனால் வராது’ மாதிரி  ‘இருக்கும் ஆனால் இருக்காது’. (படிக்க முடியாது). சாம்பிளுக்கு கீழே உள்ள படங்களைப் பார்க்கவும்.

Inline image 2
இப்படிப்பட்ட பேஸ்ட்டுகளைத் தவிர்ப்பீர், பற்களையும் உடல் நலத்தையும் பாதுகாப்பீர்.
எளிதான முறையில் வீட்டில் கல் உப்பு, கடுக்காய் பொடி, லவங்கம், கற்பூரம், புதினா, எலுமிச்சை முதலானவற்றைக் கொண்டு நாமே பல்பொடி தயார் செய்து துலக்கலாம்.
இது ஆபத்தில்லாதது. சிக்கனமானது. உடலுக்கும், பற்களுக்கும் உறுதுணையானது.

இந்த ஆரோக்கியத்தைக் கெடுத்து அனைவரையும் நோயாளிகளாய் மாற வைத்து அவர்களுக்கு மருத்துவம் என்ற பெயரில் மருந்தையும் , மாத்திரைகளையும் இன்னும் பிற செலவுகளையும் திணித்து தங்களின் பாக்கெட்டுக்களை நிரப்பிக் கொள்கின்றன பன்னாட்டுக் கம்பெனிகள். அந்த கம்பெனிகளின் முதலாளிகள் இந்தியர்கள் இல்லை. இந்தியாவில் தயாரிப்பதாலும், இந்தியாவில் ஆபிஸ் இருப்பதாலும் இவைகள் இந்தியக் கம்பெனிகள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அனைத்தும் வெளினாட்டு கம்பெனிகள். அவர்கள் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றார்கள். இந்த நாட்டின் அரசியலையும் தீர்மானிக்கின்றார்கள்.

புரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து நாம் அன்றாடம் உபயோகிக்கும் சமையல் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் தயாரிப்பிலும், விற்பனையிலும் எப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அடுத்த போஸ்ட்டில் பார்க்கலாம்.

Monday, March 2, 2015

பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்வது எப்படி? பயமுறுத்தல்கள்

வருடா வருடம் மழை வருகிறதோ இல்லையோ, தவறாமல் வித விதமாய் காய்ச்சல்கள் மட்டும் வந்து விடும். கூடவே புயல் வரும்போது எச்சரிக்கை கொடி ஏற்றி வைப்பது போல் எங்கு நோக்கினும் ஒரே குரலில் மருத்துவ உலகத்தாரின் எச்சரிக்கைகளும் (இன்னொரு விதத்தில் சொன்னால் பயமுறுத்தல்), ஆலோசனைகளும் நம்மை சூழும். மருத்துவமனைகள் மக்களின் படையெடுப்பால்  மருந்து கம்பெனிகளுக்கு நன்கு கல்லா கட்டும். அப்படி ஒரு கட்டுரை பன்றிக் காய்ச்சல் பற்றி ‘தி இந்து” தமிழ்  நாளேட்டில் 23.02.2015 அன்று பிரசுரமானது. அதில் சொல்லப்பட்டுள்ள பயமுறுத்தல்களை நீங்களும் படியுங்கள். ஆனால் பயப்படாதீர்கள். என் கருத்துக்கள் சிவப்பு வண்ணத்தில்.

அரசும் மக்களும் கைகோத்தால் மட்டுமே தொற்றுநோய்களை அடியோடு ஒழிக்க முடியும்
இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் மத்திய மாநிலங்களில் மக்களை அச்சுறுத்திய பன்றிக் காய்ச்சல், இப்போது மீண்டும் வந்து மிரள வைத்துக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தான், குஜராத், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் என்று கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி, தமிழகத்துக்குள்ளும் வந்துவிட்டது.

இதுவரை 700-க்கும் மேற்பட்டவர்கள் இந்தக் காய்ச்சலால் இறந்திருக்கிறார்கள். 12,000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். (பயமுறுத்தல் 1)  இத்தனைக்கும் இது ஓர் உயிர்க்கொல்லி நோய் இல்லை. எளிதாகத் தடுத்துவிடக் கூடியதுதான். உயிர் காக்கும் மருத்துவம் பல வழிகளில் முன்னேறிக்கொண்டிருந்தாலும், சுத்தமும் சுகாதாரமும் குறைந்துள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் போன்றவை நமக்குச் சவால் விடுவதைத் தவிர்க்க முடியவில்லை. தோற்றுத்தான் போகிறோம். ஊட்டச்சத்துக் குறைபாடும், நோய் எதிர்ப்புச் சக்தியும் குறைந்து காணப்படுகிற நம் சமுதாயத்தில், தொற்றுக் காய்ச்சலால் ஏற்படுகிற உயிர்ப் பலிகளை முழுவதுமாகத் தடுக்க முடியவில்லை. எல்லாவற்றையும்விட முக்கியக் காரணம், நம்மிடம் போதுமான எச்சரிக்கை விழிப்புணர்வு இல்லை. நோயை ஆரம்பத்திலேயே உறுதி செய்யும் பரிசோதனைக்கூடங்கள் மிகவும் குறைவு. இதனால், நோயைக் கணிப்பதற்குள் நோயாளிக்கு மரணம் நெருங்கிவிடுகிறது. 

பன்றிக் காய்ச்சல் தோற்றம்
முதன்முதலில் 2009-ல் மெக்சிகோவில் இந்தக் காய்ச்சல் பரவி, லட்சக் கணக்கில் உயிர்ப் பலி வாங்கியது. (பயமுறுத்தல் 2)  பன்றியிடம் காணப்பட்ட வைரஸும் மனிதரிடம் காணப்பட்ட வைரஸும் ஒன்றுபோலிருந்த காரணத்தால், இதற்கு ‘பன்றிக் காய்ச்சல்’(Swine Flu) என்று பெயரிட்டார்கள். இது காற்று மூலம் பரவும் தொற்றுநோய். பன்றியிடமிருந்து மனிதருக்குப் பரவுவதில்லை. ‘ஹெச்1என்1 இன்ஃபுளுயென்சா வைரஸ்’ எனும் வைரஸ் கிருமி மனிதரைத் தாக்குவதால் பன்றிக் காய்ச்சல் வருகிறது. மற்ற பருவக் காலங்களைவிட, குளிர்காலத்தில் இந்த வைரஸ் அதிக வீரியத்துடன் மக்களைத் தாக்கும் தன்மையுடையது. தென்னிந்திய மாநிலங்களில் இன்னமும் அதிக அளவில் குளிர் நீடிப்பதால் பன்றிக் காய்ச்சல் பரவ சாதகமாகிவிட்டது. (பயமுறுத்தல் 3)  

எப்படிப் பரவும்?
நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தினாலோ, சளியைக் காறித் துப்பினாலோ கிருமிகள் சளியுடன் காற்றில் பரவி மற்றவர்களுக்கும் நோயை உண்டாக்கும். நோயாளியின் மூக்கு, வாய் போன்ற பகுதிகளில் வைரஸ் கிருமிகள் ஒட்டிக்கொண்டிருக்கும்.அந்த இடங்களைத் தொட்டுவிட்டு, அதே கைவிரல்களால் அடுத்தவர்களைத் தொட்டால் கிருமிகள் அவர்களுக்கும் பரவிவிடும். நோயாளி பயன்படுத்திய கைக்குட்டை, உடை, உணவுத்தட்டு, போர்வை, துண்டு, சீப்பு, தலையணை, கழிப்பறைக் கருவிகள் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தினால் நோய் எளிதாகப் பரவிவிடும். நோயாளி பேசும்போதுகூட நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. ஆறு அடி தூரத்துக்கு இந்தக் கிருமிகள் பரவக்கூடியவை. ஆகவே, காற்றில் பரவும் மற்ற தொற்றுநோய்களைப் போல் மிக நெருக்கத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பரவும் என்று அலட்சியமாக இருக்க முடியாது. இந்தக் காய்ச்சல் மக்களிடம் வேகமாகப் பரவுவதற்கு இதுவும் ஒரு காரணம். (பயமுறுத்தல் 4)  

மூன்று வகை நோயாளிகள்
சாதாரண ஃபுளு காய்ச்சலைச் சேர்ந்ததுதான் பன்றிக் காய்ச்சல். இதன் அறிகுறிகளை வைத்து நோயாளிகளை மூன்று வகைப்படுத்துகிறார்கள் மருத்துவர்கள்.
முதல் வகையில் மிதமான காய்ச்சல், இருமல், தும்மல், மூக்கு ஒழுகுதல், தொண்டைவலி, உடல்வலி, தலைவலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தெரியும். இவர்களுக்குப் பாதிப்பு அதிகமாக இருக்காது. எனவே, ரத்தப் பரிசோதனை தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். ஒரு வாரத்தில் நோய் கட்டுப்பட்டுவிடும்.
இரண்டாம் வகையில், இந்த அறிகுறிகளுடன் காய்ச்சல் கடுமையாக இருக்கும். மூட்டுகளில் வலி அதிகமாக இருக்கும். சோர்வு கடுமையாகும். இவர்களுக்கு ரத்தப் பரிசோதனை அவசியம். காய்ச்சலைக் குறைக்க ‘டாமிஃபுளு’ மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும்.
மூன்றாம் வகையில், மேற்சொன்ன அறிகுறிகளுடன் மயக்கம், மூச்சு விடுவதில் சிரமம், சளியில் ரத்தம், நெஞ்சுவலி போன்ற தொல்லைகளும் சேர்ந்துகொள்ளும். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டியது அவசியம். இவர்களுக்கு ‘டாமிஃபுளு’ மாத்தி ரைகளுடன் உயிர்காக்கும் சிகிச்சைகளும் தேவைப்படும்.
(பயமுறுத்தல் 5:  மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் அனைத்தும் பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், கோழிக்காய்ச்சல் அதாங்க சிக்கன் குனியா என எல்லா காய்ச்சலுக்கும் இதையேதான் சொல்லுகிறார்கள் )  

யாருக்குப் பாதிப்பு அதிகம்?
பன்றிக் காய்ச்சல் வந்துவிட்டவர்கள் அனைவரும் அச்சப்படத் தேவையில்லை. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், ஊட்டச்சத்து குறைந்தவர்கள், முறையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள், ஆஸ்துமா, காசநோய், சிறுநீரக நோய், சர்க்கரை நோய், கல்லீரல் நோய், இதயநோய், புற்றுநோய், எய்ட்ஸ் உள்ளவர்கள் ஆகியோரை இந்த நோய் மிகச் சுலபத்தில் பாதித்துவிடுகிறது. இவர்கள்தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
(நம்மீது அக்கறை காட்டுவது மாதிரி சொல்லும் பயமுறுத்தல் 5. சாதாரண காய்ச்சல் வந்தவர்கள் கூட இந்த லிஸ்டில் உள்ள ஏதாவது ஒன்றில் மாட்டிக் கொள்வார்கள். முக்கியமாக “முறையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்” என்பதை கவனத்தில் கொள்க.)

தடுப்பது எப்படி?
இருமும்போதும் தும்மும்போதும் மூக்கையும் வாயையும் சுத்தமான கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி சோப்புப்போட்டுத் தண்ணீரில் கழுவ வேண்டும். கண்ட இடங்களில் எச்சிலைத் துப்புவதும் சளியைச் சிந்துவதும் கூடாது.கைகுலுக்காதீர்கள். பொதுஇடங்களுக்குச் சென்று திரும்பினால், வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பு கலந்து கொப்பளித்து, தொண்டையைச் சுத்தம் செய்யுங்கள். முகத்தையும் கண்களையும் சோப்புப்போட்டுக் கழுவி சுத்தம் பேணுங்கள். வெளியில் செல்லும்போது முகமூடி அணிவதாக இருந்தால், மூன்றடுக்கு முகமூடி அல்லது N95 ரக முகமூடியை அணியுங்கள். சுய மருத்துவம் வேண்டாம். காய்ச்சல், சளி உள்ள குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். (என் கேள்வி : N95 ரக முகமூடி ஹெச்1என்1 இன்ஃபுளுயென்சா வைரஸை’ வடிகட்டி விடுமா? இதன் துளைகள் வரஸின் அளவைவிட குறுகலானதா?. யோசியுங்கள்)

ஃபுளு காய்ச்சலைத் தடுக்க உதவுகின்ற ‘வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரி மூவகைத் தடுப்பூசி’யை (Trivalent inactivated vaccine - TIV) மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னால் போட்டுக்கொள்ளலாம். இது ஓராண்டுக்கு நோயைத் தடுக்கும். எனவே, வருடாவருடம் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்கிறவர்களுக்குப் பன்றிக் காய்ச்சல் எப்போதும் வராது. (இது என்ன கூத்து? வருடம் ஒரு முறை போட்டுக் கொண்டால் அந்த வருடம் முழுவதும் வராது ஓகே. ஆனால் எப்போதும் வராது என்று சொன்னால் வாழ் நாள் முழுவதும் வராது என்பது போல் வார்த்தை தோற்றமளிக்கிறதே.  அதிலும் இது பன்றிகாய்ச்சலை மட்டுமே ஓராண்டுக்கு தடுக்கும். இனி இன்னும் நாய், பறவை, கரடிக் காய்ச்சல்கள் என்று வரிசையாய் வரும். ஒவ்வொன்றுக்கும் தனிதனியே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.  மருந்துக் கம்பெனிகளின் சதியையும், பின்னணியையும் புரிந்து கொள்ளுங்கள்.)
 
அரசின் கடமை
பன்றிக் காய்ச்சலுக்குரிய தடுப்பூசி இப்போது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால், அதன் விலை 500-லிருந்து 1,000 ரூபாய் வரை இருக்கிறது. இதனால், இதை மருத்துவத் துறை சார்ந்த பணியாளர்களுக்கு மட்டுமே போடுகிறார்கள். (ரூபாய் 500-லிருந்து 1,000 வரை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை காய்ச்சலுக்கு என வருடா வருடம் காசை செலவழிக்க வேண்டும்)

இதையே உள்நாட்டில் தயாரித்தால் இதன் விலை 100 ரூபாய்க்குத் தர முடியும். அப்போது பொதுமக்களுக்கும் அதைப் போட முடியும். இதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மக்களைப் பொறுத்தவரை பொது சுத்தம் மிக முக்கியம். 

இப்படி அரசும் மக்களும் கைகோத்தால் மட்டுமே பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களை அடியோடு ஒழிக்க முடியும். 

டாக்டர் கு. கணேசன், பொதுநல மருத்துவர்,