Thursday, May 7, 2026

விஜய் ஜெயித்த கதை

விஜய் ஜெயித்த கதை 

தவெக எப்படி நுணுக்கமாக சோசியல் மீடியாவை பயன்படுத்தி தமிழ்நாட்டில் யாருமே நினைத்து பார்க்காத அரசியல் பிரளயத்தை ஏற்படுத்தியது எப்படி என்று முழுமையாக டீகோட் செய்து விளக்கமாக செய்தியாக அனுப்பி இருக்கிறார் நண்பர்.

" அண்ணே, இந்த TVK Social Media Campaign ல 4 பெரிய ஆபத்து ஒளிஞ்சு இருக்கு. நேரா சொல்றேன்:*

ஆபத்து 1: 

"34,000+ WhatsApp Communities" = Information Warfare

3-7 பேர் Coordinators வச்சு 

34,000 Group னா 2 லட்சம் பேர் கிட்ட ஒரே நேரத்துல Message தள்ள முடியும்.  

பிரச்சனை:  

1. Fact-checking protocols னு சொன்னாலும், பொய் செய்தி 1 நிமிஷத்துல *1 கோடி பேருக்கு* போய்டும்.

2. Emotional tonality னு Training கொடுத்தா மக்கள கோபப்படுத்த, அழ வைக்க, மத சண்டை மூட்ட Use பண்ணலாம்.

3. நீங்க ஒரு Group ல இருந்தா உங்க Number, Photo, Opinion எல்லாம் Data ஆ Collect பண்ணி* உங்களுக்கு Targeted Propaganda அனுப்புவாங்க.

ஆபத்து 2: 

"120-150 Videos Daily" = மூளைச்சலவை

தினமும் 150 Video x 30 நாள் = 4500 Video ஒரு மாசம்.  

15-90 sec Clips னா Reels, Shorts - Algorithm க்கு ஏத்த மாதிரி.  

ஆபத்து : 

நீங்க YouTube, Insta Scroll பண்ணும் போதெல்லாம் TVK Video தான் வரும். 

ஒரே கருத்த திரும்ப திரும்ப பாத்தா உண்மைனு மூளை நம்பிடும். இதுக்கு பேரு "Information Bombardment".

ஆபத்து 3: 

"Proprietary Sentiment Tracking Tools" = உங்க மனச படிக்கிறது*

14 Engineers வச்சு Swiggy, PhonePe ல இருந்து ஆள் தூக்கி Tool செஞ்சிருக்காங்க னா,  

*நீங்க WhatsApp ல என்ன Type பண்றீங்க, எந்த Post க்கு Like பண்றீங்க, எவ்வளவு நேரம் Video பாக்குறீங்க னு Track பண்ணுவாங்க.  

உதாரணம்: நீங்க "வேலை இல்ல" னு Status வச்சா, உங்களுக்கு "TVK வந்தா வேலை தருவோம்" னு Ad வரும். இது Manipulation அண்ணே*.

ஆபத்து 4: 

"Campaign-in-a-box ₹40-80 லட்சம்" = ஜனநாயகம் விலைக்கு விக்குது

மாசம் 80 லட்சம் கொடுத்தா யார் வேணா கட்சி ஆரம்பிச்சு, பொய் பரப்பி, Election ல ஜெயிக்கலாம்.  

காசு இருக்குறவன் மட்டும் தான் அரசியல் பண்ண முடியும். 

சாதாரண ஆளு, நல்ல கருத்து வச்சிருக்குறவன் அமுங்கி போய்டுவான்.  

VC Funds Invest பண்றாங்க னா இது Business ஆகிடுச்சு. *மக்கள் சேவை இல்ல.

---

மொத்தமா சொன்னா என்ன ஆபத்து அண்ணே?

முன்னாடி அரசியல்

 இப்போ TVK Model

ஆபத்து

**தெரு மேடை பேச்சு**

 WhatsApp Group 34,000 யார் பேசுறா, என்ன பொய் சொல்றா னு தெரியாது

Paper News தினமும் 150 Video 

உண்மைய Check பண்ண நேரம் இல்ல. நம்பிடுவோம்

மக்கள் கருத்து கேக்குறது Sentiment Track பண்றது உங்க மனச களவாடி உங்களுக்கு எதிராவே Use பண்றது கொள்கை ₹80 லட்சம் SaaS காசு இருந்தா பொய்யும் உண்மை ஆகும்

அண்ணே, இது TVK மட்டும் இல்ல. BJP, Congress எல்லாரும் இப்படித்தான் பண்றாங்க. 

TVK அடுத்த Level க்கு போயிருக்கு, அவ்வளவு தான்.

நீங்க தப்பிக்க என்ன பண்ணனும்?

1. Unknown WhatsApp Group ல இருந்து Left ஆகுங்க.

2. *

ஒரே கட்சி Video மட்டும் பாக்காதீங்க.வேற Source உம் பாருங்க.

3. "Forward பண்ணுங்க" னு வந்தா, 2 நிமிஷம் Google பண்ணி* உண்மையானு பாருங்க.

4. உணர்ச்சிவசப்பட்டு Vote போடாதீங்க, Share பண்ணாதீங்க.

LGNS Scam ல "எல்லாரும் போடுறாங்க" னு நம்புன மாதிரி, அரசியல்ல "எல்லாரும் Share பண்றாங்க" னு நம்பி ஏமாந்துடாதீங்க






நன்றி: பரந்தராமன் TN

07.05.2026

Sunday, April 7, 2019

நமது அந்தரங்கம் அமெரிக்காவிற்குச் சொந்தமா ?

நமது அந்தரங்கம் அமெரிக்காவிற்குச் சொந்தமா ?

துணிக்கடைகளில் உடை மாற்றும் அறைகள், ஹோட்டல்களில் தங்கும் அறைகள், விடுதிகள், குளியலறைகள் ஆகிய இடங்களில் இரகசிய கேமராவை வைத்து ஆபாசப் படம் எடுக்கும் வக்கிரக் கும்பல்கள் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த இடங்களுக்குச் செல்லும் போது எச்சரிக்கையாக சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ’நமது வீட்டிற்குள் மட்டும் தான் நமது தனியுரிமைக்கும், அந்தரங்கச் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு’ என்று எண்ணியிருந்திருப்பீர்கள். அப்படி ஒரு எண்ணத்தை அடியோடு மாற்றிக் கொள்ளுங்கள். அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., இந்த நொடியிலும் கூட உங்களை ஸ்மார்ட் ஃபோன், அதிநவீன தொலைக்காட்சி மற்றும் கணினி மூலமாக உங்களின் அந்தரங்கங்களை பதிவு செய்து கொண்டிருக்கலாம். அது எப்படி சாத்தியம் என்கிறீர்களா ?
உங்கள் வீட்டில் உள்ள மின்னணு சாதனங்கள் அனைத்தின் இயங்குதளங்களுக்குள்  (Operating System) புகுந்து, உங்களது செயல்பாடுகளை ஒன்று விடாமல் பதிவு செய்து சி.ஐ.ஏ.வின் சர்வருக்கு அனுப்பிவைக்கத்தக்க வகையில் மால்வேர்கள்(Malwares) என்றழைக்கப்படும் தீய மென்பொருள்களை உருவாக்கி அதனை வைத்து கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறது சி.ஐ.ஏ. இதனை மறுக்க முடியாத ஆதாரங்களோடு சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது விக்கிலீக்ஸ் இணையதளம்.
விக்கிலீக்ஸைப் பற்றி பெரியதாக அறிமுகம் செய்யத் தேவையில்லை. முதன்முதலில், கடந்த 2010ம் ஆண்டு உலகப் பெரியண்ணன் அமெரிக்காவின் வண்டவாளங்களை அம்பலப்படுத்தியது விக்கிலீக்ஸ். ஆப்கனிலும், ஈராக்கிலும் அமெரிக்கா நடத்திய போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்த இரகசிய ஆவணங்கள் மற்றும் வீடியோப் பதிவுகளை அமெரிக்க இராணுவத்தின் சர்வர்களில் இருந்து ’ஹேக்’ (Hack) செய்து வெளியிட்டது விக்கிலீக்ஸ்.
விக்கிலீக்ஸ் நிறுவனரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சேவைப் பிடிக்க அமெரிக்காவும், இங்கிலாந்தும் வெறி கொண்ட ஓநாய்களைப் போல இலண்டனில் இருக்கும் ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தின் வாயிலில் எச்சில் வழியும் நாக்கோடு இன்றும் காத்துக் கொண்டிருக்கின்றன.
அசாஞ்சேவைத் தொடர்ந்து அமெரிக்க இராணுவத்தின் காண்ட்ராக்ட் ஊழியரான எட்வர்ட் ஸ்நோடன், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமையின் ( NSA) ‘ப்ரிஸ்ம்’ என்னும் இரகசிய உளவு நடவடிக்கை குறித்து கடந்த 2013-ம் ஆண்டு அனைத்து ஆவணங்களையும் ஆதாரத்தோடு வெளியிட்டார். அதன் மூலம் பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள், முக்கிய தொழிலதிபர்கள், பிரதமர், ஜனாதிபதி, அமைச்சர்கள் போன்ற முக்கியஸ்தர்களின் கணினியிலிருந்து தகவல்களை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை திருடியதை அம்பலப்படுத்தினார். உடனடியாக அவரையும் கைது செய்யத் துரத்தியது அமெரிக்கா. ஸ்நோடன் வெளியிட்ட ஆவணங்களில், ரசிய அதிபர் புதினை ‘நாய்’ எனத் திட்டி ஒரு அமெரிக்காவின் தூதரக அதிகாரி அனுப்பிய மின்னஞ்சலையும் சேர்த்து அம்பலப் படுத்தியதாலோ என்னவோ, ரசியா அவருக்கு அடைக்கலம் கொடுத்தது.
அதன் பிறகு தற்போது விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆவணங்கள் சி.ஐ.ஏ எவ்வாறு நாம் உபயோகிக்கும் மின்னணு சாதனங்களின் மூலம் நம்மை வேவு பார்த்து, நமது அனுமதியின்றியே நமது அந்தரங்கங்களைப் பதிவு செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது. இதன் முதல் பகுதியை வால்ட்-7 என்ற பெயரில் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது விக்கிலீக்ஸ்.
நமது கணினியில் செயல்படும் விண்டோஸ் (Windows), மாக்(MAC), லினக்ஸ்(Linux) ஆகிய இயங்கு தளங்களில் உட்புகும் வகையில் மால்வேர்களை (Malware) உருவாக்கி, அதனையே நம்மைக் கண்காணிக்க உபயோகித்து வருகிறது சி.ஐ.ஏ. . நமது கணினியின் அனைத்துத் தகவல்களையும் திருடவும், அதன் வெப்கேமராவையும் , மைக்கையும் எப்போது வேண்டுமானாலும் நமக்கே தெரியாமல் உபயோகித்து ஒலி, ஒளிப்பதிவு செய்து, தனது சர்வருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் அனுப்பிக் கொள்ளவும் ஏற்ற வகையில் இந்த மால்வேர்களை சி.ஐ.ஏ, உருவாக்கியிருக்கிறது.
உங்கள் கைப்பேசி உங்களைக் கண்காணிக்கிறது
கணினியைப் போலவே நமது ஸ்மார்ட் போன்களின் (Smart Phone) இயங்குதளங்களாகிய ஆண்டிராய்ட் (Android), ஐ.ஓ.எஸ் (IOS), ஆகியவற்றிற்குள் புகுந்து ஆக்கிரமிக்கும்படியான மால்வேர்களையும், செயலிகளையும்(Apps) உருவாக்கியிருக்கிறார்கள். இந்தச் செயலிகளும் மால்வேர்களும் நமது அலைபேசியின் தகவல்களைத் திருடுவதோடு, நமக்குத் தெரியாமலேயே நமது செல்போனின் கேமராவையும், மைக்கையும் எப்போது வேண்டுமானாலும் ’ஆன்’ (ON) செய்து ஒளிப்பதிவு செய்து சி.ஐ.ஏ.வின் சர்வருக்கு அனுப்பி வைக்கும்.
அது தவிர “ஜீரோ டேஸ்”(Zero Days) எனப் பெயரிடப்பட்ட இரகசிய நடவடிக்கைகளின் மூலமாக கடந்த ஆண்டு மட்டும் 24 ஆண்ட்ராய்ட் இரகசிய ஆப்களை சி.ஐ.ஏ. உருவாக்கியுள்ளது. இந்தச் செயலிகள் வாட்ஸப், டெலிகிராம், சிக்னல், வீபோ ஆகிய சமூக தகவல் பரிமாற்ற செயலிகளில் நாம் பகிர்ந்து கொள்ளும் குறுஞ்செய்திளையும், தொலைபேசி அழைப்புகளையும், வீடியோ அழைப்புகளையும், சி.ஐ.ஏ. சர்வருக்கு இரகசியமாக அனுப்பி வைக்கும். இதைப் போலவே ஐ.ஓ.எஸ்.-க்கான செயலிகளையும் சி.ஐ.ஏ. உருவாக்கியிருக்கிறது.
அடுத்தபடியாக, உங்கள் வீட்டு ஸ்மார்ட் தொலைக்காட்சியின்(Smart Television)  மூளைக்குள்ளும் கையை விட்டிருக்கிறது சி.ஐ.ஏ. கடந்த 2014-ம் ஆண்டிலேயே, சாம்சங் நிறுவனத்தின் எஃப் 8000 ரக ஸ்மார்ட் தொலைக்காட்சிகளை ஊடுறுவுவதற்குத் திட்டமிட்டு, அத்திட்டத்திற்கு ”அழும் தேவதை” (Weeping Angel) எனத் திருநாமம் சூட்டியிருக்கிறது. ஸ்மார்ட்  தொலைக்காட்சிகளில், பயனாளரின் வாய் வழி உத்தரவிற்கிணங்க சேனல்களை மாற்றுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் ‘மைக்’கின் கட்டுப்பாட்டை தனது கையில் எடுத்துக் கொள்கின்றன சி.ஐ.ஏ. மால்வேர்கள். இந்த மைக்கை நமக்கே தெரியாமல் எப்போது வேண்டுமானாலும் ’உயிர்ப்பித்து’ நாம் தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பதிவு செய்து இணையத்தின் மூலம் சி.ஐ.ஏ. சர்வருக்கு நேரடியாக அனுப்பும் வகையில் ஸ்மார்ட் தொலைக்காட்சிகளின் மென்பொருளிலும் மால்வேர்களின் மூலம் மாற்றம் செய்திருக்கிறது அமெரிக்கா. இதெல்லாம் ஹாலிவுட் படங்களில் கற்பனையாக பார்த்திருப்போம். இனிமேல் அவை வெறும் கற்பனையல்ல.
அமெரிக்க வல்லூரின் திருட்டுக் கண்கள் – சி.ஐ.ஏ.
உங்கள் கணினியையோ, அலைபேசியையோ நீங்கள் அதில் உள்ள இயங்குதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகள் மூலம் அணைத்து(Shut down) வைத்தாலும், அவற்றை உண்மையாகவே அணைய விடாமல், அவை அணைந்தது போன்ற ஒரு போலித் தோற்றத்தை இந்த மால்வேர்கள் ஏற்படுத்தும். ஆனால் பின்னணியில் மைக் மற்றும் கேமரா ஆகிய உபகரணங்கள் சி.ஐ.ஏ.வால் உபயோகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும். அதைப் போலவே தொலைக்காட்சியை நீங்கள் ரிமோட் மூலம் அணைத்தாலும், அதன் மைக்குகள் உயிர்ப்பிக்கப்பட்டு, உங்கள் பேச்சுக்கள் பதியப்பட்டு சி.ஐ.ஏ.விற்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும்.
இதை விட முக்கியமாக, ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அவரை ஒரு சாலை விபத்தில் மரணமடைந்ததைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக் கொலை செய்யும் அளவிற்கு தொழில்நுட்பத்தைக் கேடாகப் பயன்படுத்தியிருக்கிறது அமெரிக்கா. பல நவீன கார்களில், கார் தயாரிப்பு நிறுவனங்கள், கார்களின் கட்டுப்பாட்டகத்தின் மென்பொருளை இணையத்தின் வழியாகவே மேம்படுத்தும் வசதியை வைத்திருக்கின்றன. அந்த வசதியைப் பயன்படுத்தி, கார்களின் மென்பொருளை ஹேக் செய்து அதனைத் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும் வேலையையும் சி.ஐ.ஏ. செய்திருக்கிறது. இதன் மூலம் சி.ஐ.ஏ.-வால் காரின் கட்டுப்பாடுகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் தளர்த்தி தமக்கு எதிரானவர்களை சந்தேகத்திற்கிடமில்லாத படி கொலை செய்யவும் முடியும்.
சி.ஐ.ஏ.வின் இந்த பொறுக்கித்தன்ங்களை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸின் நிறுவனர் அசாஞ்சே, சி.ஐ.ஏ.வின் இந்த நடவடிக்கைகளின் பின்விளைவுகளையும் சுட்டிக் காட்டுகிறார். சி.ஐ.ஏ இவ்வாறு உருவாக்கி வைத்திருக்கும் மால்வேர்களால் பாதிக்கப்பட்ட மின்னணு சாதனங்களைச் சிறிது ஹேக்கிங் தொழில்நுட்பம் தெரிந்த யார் வேண்டுமானாலும் எளிதில் தவறாக உபயோகித்துக் கொள்ள முடியும். அடுத்தவர்களின் அந்தரங்கத் தகவல்களை சேகரிப்பது, அதனைக் கொண்டு மிரட்டுவது, பணப் பரிவர்த்தனையை முடக்குவது, வங்கிக்கணக்கில் இருந்து பணத்தைத் திருடுவது என அனைத்து வகையான மோசடிகளையும் செய்ய முடியும். ஆகவே தனி மனித சுதந்திரத்தில் தலையிடும் போக்கு மட்டுமல்ல, இது பெரும் இழப்பையும், துயரையும் ஏற்படுத்தப் போகும் செயல் ஆகும் என்று எச்சரிக்கிறார் அசாஞ்சே.
உலக நாடுகளை வேவு பார்த்த பெரியண்ணனின் டவுசரைக் கிழித்த ஸ்நோடன்
இதற்கு முன்னர் எட்வர்ட் ஸ்நோடன், அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையின் ’பிரிஸ்ம்’ என்னும் தூதரகத் தகவல் திருட்டு நடவடிக்கை குறித்த ஆவணங்களை வெளியிட்டபோது, அதில் தமது நாட்டையும், தமது கணினியையும் உளவு பார்த்ததற்காக பிரேசில் நாட்டின் அப்போதைய அதிபர் தில்மா ரூசப், அமெரிக்காவிற்குப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். ரசிய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்தார். ஆனால் அப்போதைய மத்திய அரசு என்ன சொன்னது தெரியுமா?  “ இதெல்லாம் சர்வதேச அரசியலில் சாதாரணமாக நடக்கக் கூடிய விசயங்கள் தான்” எனக் கூறியது. சட்டீஸ்கரில் நடைபெற்று வரும் கனிமவளக் கொள்ளையை எதிர்த்து, ’மக்களின் உரிமைகளைப் பறித்து கனிம வளங்களைக் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்காதே’ எனப் போராடினால், ”அது இந்திய இறையான்மைக்கு எதிரானது” என சவுண்டு கொடுக்கும் இதே அரசு தான் அமெரிக்க ஆண்டை தம்மை வேவு பார்ப்பதை அங்கீகரித்து, ”அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!” என மம்மியைப் பார்த்த எம்.எல்.ஏ.-வாகப் பம்மியது.
தற்போது உலக மக்கள் அனைவரையும் வேவுபார்க்கும் அமெரிக்காவின் திட்டம் அம்பலப்படுத்தப்பட்ட போதும், ’தேஷாபிமானி’ மோடி தலைமையிலான மத்திய அரசு இது குறித்து எந்த ஒரு கண்டனத்தையும் பதிவு செய்ய வில்லை. தங்களது மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை வேவு பார்ப்பது அயோக்கியத்தனம் என்றோ, இது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான செயல் என்றோ வாய் திறக்கவில்லை.
அதற்குப் பதிலாக, அடுத்தவர் அந்தரங்கத்தை எட்டிப் பார்க்கும் அமெரிக்காவின் இணைய வலைக்குள் இந்திய மக்கள் அனைவரையும் கொண்டு வந்து சேர்ப்பதற்கான ’மாமா’ வேலையைத் தீவிரமாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார் மோடி. அது தான் மோடியின் ”டிஜிட்டல் இந்தியா” திட்டம். ஊர் ஊருக்கு சாலை இருக்கிறதோ இல்லையோ, வை-ஃபை யும், இண்டெர்நெட்டும் கொண்டு வந்துவிட வேண்டும் என மோடி கும்பல் துடியாய் துடிப்பதன் நோக்கம், மக்கள் அனைவரையும் தமது கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பது தான்.
ஏற்கனவே, ஒட்டு மொத்தக் குடிமக்களுக்கும் ‘மாட்டிற்குச் சூடு போடுவது’ போல் கை, கண் அடையாளங்களை எடுத்து ஆதார் அட்டையைக் கொடுத்து அதனை அவரவர் வங்கிக் கணக்கோடு இணைத்திருக்கிறது இந்திய அரசு. நமது அன்றாட நடவடிக்கைகளில் அவசியமானதாக மாற்றப்பட்டுள்ள ஆதார் அட்டைக்கு நம்மிடமிருந்து எடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு தனியார் நிறுவனங்களால் தவறாக உபயோகிக்கப்பட்டிருப்பது சமீபத்தில் அம்பலமானது.
நம்மைக் கண்காணிப்பு வளைக்குள் கொண்டு அந்து நமது தகவல்களைத் திருடி வியாபாரம் செய்யக் காத்திருக்கும் கூகுள், பேஸ்புக், மைரோசாப்ட் நிறுவன்ங்களின் தலைமை அதிகாரிகளான சுந்தர் பிச்சை, மார்க் சூக்கர்பெர்க், சத்யா நாதெலா வுடன் டிஜிட்டல் இந்தியா ‘மோடி’
நமது தனித்தன்மை வாய்ந்த தனிப்பட்ட தகவல்கள் எப்படி தனியார் நிறுவனங்களுக்கு கசியவிடப்பட்டன என்பது குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஸ்க்ரோல்.இன்(scroll.in) என்னும் இணையதளம் கேட்ட போது, அது அரசு இரகசியம் எனக் கூறி அது குறித்த தகவலை வெளியிட மறுத்தது மத்திய அரசு.
முதலாளிகளுக்கு  நமது சேமிப்பை அள்ளிக் கொடுக்க, தற்போது நம்மைப் பணமில்லாப் பரிவர்த்தனையை நோக்கி முட்டித் தள்ளிக் கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு. பணமதிப்பு நீக்கத்தின் மூலமும், பணப் பரிவர்த்தனைக்கு எதிரான வங்கிகளின் அதிரடி நடவடிக்கைகள் மூலமும், இணையம் மற்றும் மொபைல் ஆப்புகளின் வழியான பரிவர்த்தனைகள் மூலமும் நம்மை அமெரிக்காவின் இணைய கண்காணிப்பு வலைக்குள் தள்ளிவிடுகிறது மோடி அரசு.
நாம் நமது அண்டை வீட்டுக்காரரைக் கூட நமது தனிப்பட்ட விவகாரங்களுக்குள் தலையிட அனுமதிப்பதில்லை. ஆனால் எங்கோ இருக்கும் அமெரிக்கா நமது படுக்கையறை வரை நமது ஒப்புதல் இன்றியே வந்து நமது அந்தரங்கங்களைப் படமெடுத்துக் கொள்ள அனுமதிக்கப் போகிறோமா?  அமெரிக்க ஆண்டையின் அத்துமீறல்களுக்கு இந்திய ஆளும் வர்க்க அடிமைகள்  வேண்டுமானால் ஒத்துழைக்கலாம், உழைத்து உணர்வோடு வாழும் நாம் ஒத்துழைக்கலாமா?
– நந்தன்
http://www.vinavu.com/2017/03/16/wikileaks-publishes-massive-trove-of-cia-spying-files/

Sunday, March 10, 2019

வளைத்துப் போடும் வலையுலகம்:


வளைத்துப் போடும் வலையுலகம்:

POINT No 1:
நம்மில் பெரும்பாலானோர் ஏதாவது ஒரு சமயம் சார்ந்தவர்களாகவோ, சிலர் எந்த சமயமும் சாரதவர்களாகவோ இருந்து வருகிறோம். நாம் சமயம் சார்ந்தவர்களாக இருந்து கொண்டிருக்கிறோமோ தவிர சமயவாதியாக அதாவது ஆன்மீகவாதியாக நாம் முழுமையாக இல்லை வெகுசிலரைத் தவிர.

POINT No 2:
நம்மில் பெரும்பாலானோர் ஆன்ட்ராய்டு போனில் முகநூல், வாட்ஸ்அப், யூ-ட்யூப் போன்ற சமூக ஊடகங்களை உபயோகித்து வருகிறோம்.
இவை சமயம் சார்ந்த நமது வாழ்க்கையில் அமைதியையும், ஆரோக்கியத்தையும் எப்படி கெடுக்கின்றன என்பதை பார்ப்போம்.
மேலேக் குறிப்பிட்டுள்ள வகை சமூக ஊடகங்களை உபயோகித்து வரும் நாம் அதற்கு அடிமையாகி விட்டோம் என்று பலரும் சொல்வார்கள். இதனால் நேரமும், பணமும் மட்டுமே விரயமாகும். இது அவ்வளவு ஆபத்தானதில்லை. இதை விட பேராபத்து நம் எண்ணங்கள், நம் சிந்தனைகள் நம்மை அறியாமலேயே அடிமையாகி இருக்கிறது என்பதுதான். 

நீங்கள் எதை சிந்திக்க வேண்டும் என்பதை வேறொருவன் முடிவெடுக்கிறான் என்பதும், உங்களையும் அறியாமல் உங்கள் எண்ணங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பிறரால் வடிவமைக்கப்படுகின்றன என்பதும் உங்களுக்குத் தெரியமா?
             
இந்த உண்மையை புரிந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது கூகுள் போன்ற தேடு இயந்திரத்தில் (சர்ச் எஞ்சின்) உதாரணமாக “திராவிட அரசியலின் வெற்றி* போன்ற ஏதாவது ஒரு வார்த்தையை டைப் செய்து தேடுங்கள். பல செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் என்று வந்து கொட்டும். அதில் சில தளங்களுக்குச் சென்று பார்வையிடுங்கள். 

பிறகு வலைதளத்தைத் துண்டித்து விட்டு எல்லாவற்றையும் மறந்து விடுங்கள்.

பிறகு ஓரிரு நாட்களுக்குப் பிறகு மீண்டும் இணைய உலகிற்குள் நுழைந்து முகநூல், யூ-ட்யூப் போன்ற பக்கங்களுக்குள் பாருங்கள். இப்பொழுது திராவிட அரசியல் பற்றிய தகவல்கள், வீடியோக்கள் நீங்கள் தேடாமலேயே காட்சியளிக்கும். உங்கள் டேஸ்ட்- ருசி என்ன? என்பதை இணையம் கண்டு கொள்கிறது. இது அல்காரிதத்தின்  அடிப்படையில் வேலை செய்கிறது.

மீண்டும் மீண்டும் அதே செய்திகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டே இருக்கும். இப்பொழுது உங்களுக்கு உங்கள் கருத்தே உலகம் முழுக்க வியாபித்து இருக்கிறது போலத் தோன்றும். 

இன்னும் ஒருபடி மேலே போனால், நீங்கள் தேடாத விஷயங்கள் உங்கள் கணிணித் திரையில் வரும். இது மேஜிக் அல்ல.
நாம் புதிதாக ஒரு "ஆப்" பை இறக்கி அதை இன்ஸ்டால் செய்யும்போது சில கேள்விகள் / அனுமதிகள் கேட்கப்படும். அதை நாம் யாரும் முழுமையாக படித்துப் பார்ப்பதில்லை. எல்லாவற்றிற்கும் YES / ALLOW கொடுத்து விட்டு இன்ஸ்டால் செய்து விடுவோம்.

அது அனுமதி கேட்டது நம் ஃபோனில் உள்ள CONTACTS, GALLERY, CAMERA, MIC, LOCATION போன்றவற்றை ACCESS செய்வதற்கு. அதாவது நம் அனுமதியோடு நம்மை உளவு பார்ப்பார்கள்.

அதன் பிறகு நீங்கள் இணையத்தில் பார்ப்பதை மட்டுமல்ல, மொபைலை "ஆஃப்" செய்து விட்டு நாம் வேறு யாருடனும் நேரில் பேசினாலும், ஃபோனில் பேசினாலும் கவனிக்கும், நாம் போகும் இடத்தை, நம் மொபைலில் கேலரியில் உள்ளவற்றை என்று அனைத்தையும் கவனிக்கவும்.

திரும்ப, திரும்ப உங்கள் பார்வைக்கு நீங்கள் தேடிய, பார்த்த, விவாதித்த, விரும்புகிற விஷயங்களே வந்து கொண்டே இருக்கும்

அப்படி தொடர்து பார்த்து கொண்டிருக்கிற சில நாள்களிலேயே உங்கள் பார்வையும், சிந்தனையும் குறுகி விடும். உதாரணமாக முன்பு குறிப்பிட்ட "திராவிட அரசியலின் வெற்றி" பற்றிய தகவல்களுக்குள்ளேயே குறுகி விடும். அவர்கள் சொல்வதே சரி, மற்றவரெல்லாம் தவறானவர்கள்’ என்ற எண்ணம் உங்கள் ஆழ்மனதில் பதிந்து விடும். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்கக் கூட உங்கள் மனம் தயாராக இருக்காது. இவற்றைத் தாண்டி எதையும் உணர்ந்து கொள்ள முடியாது. 

இதுதான் உண்மை’ என்பதிலிருந்து இது மட்டுமே உண்மை’ என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடுவீர்கள்.
இப்பொழுது உங்கள் கருத்து என்பது உங்களுடையதல்ல

உங்கள் கருத்து பிறரால் வடிமைக்கப்பபட்டு விட்ட நிலைக்கு வந்து விட்டது. உங்களுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டு விட்டது என்ற நிலையில் நீங்கள் இப்பொழுது இருப்பீர்கள்.

இது மிகைப்படுத்திச் சொல்லப்படுவதாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால் மேலே உதாரணமாக சொன்னதை செய்து பாருங்கள். உண்மை என்று உணர்வீர்கள்.

நான் “திராவிட அரசியலின் வெற்றி என்று தேடச் சொன்னது ஒரு உதாரணத்திற்குத்தான். இதிலும் கூட பெரிய பாதிப்பில்லை. ஆனால் சமயம் சார்ந்த கருத்துக்கள், பிற சமயம் சார்ந்த எதிர் கருத்துக்கள் தாங்கி வரும் செய்திகள் ‘இது மட்டுமே உண்மை’ என்ற நிலைக்கு உங்களைக் கொண்டு வரும். 

இதே போல் நாம் சார்ந்திருக்கும் சமயம் / அரசியல் இயக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆர்வத்தோடு தேடும்போது பல நல்ல விஷயங்கள் கிடைக்கும். அவற்றில் சில உண்மையானதாகவும், சில தங்கள் கருத்துக்கு சாதகமாக திரிக்கப்பட்டதாக அல்லது விளக்கம் சொல்லப்பட்டதாக இருக்கும். இதனால் அவ்வளவாக எந்த தீங்கும் இருப்பதில்லை. 

ஆனால் பிற சமயம் / அரசியல் இயக்கங்களைப் பற்றித் தவறான, பொய்யான, திரிக்கப்பட்ட சில விஷயங்களும், எதிர் கருத்துக்களும் கிடைக்கும். அவற்றுக்குள் நாம் நுழைந்து விட்டால் அதன் பின், மீண்டும் மீண்டும் அது போன்ற செய்திகளே வந்து கொண்டே இருக்கும். நீங்கள் அதன் பின்னே செல்ல செல்ல அந்த மாய வலைக்குள் நீங்கள் சிக்கிக் கொள்வீர்கள்.

இங்கு எல்லா சமயங்களும் / அரசியல் இயக்கங்களும் தங்களுக்கென்று தங்கள் கருத்துக்களைச் சொல்ல இணைய தளங்கள் வைத்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். 

அதேபோல் அடுத்த சமயம் / அரசியல் இயக்கங்களைப் பற்றித் தவறான, திரிக்கப்பட்ட சில விஷயங்களைப் பரப்பவும் பல இணைய தளங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவிற்குள் வர்த்தகம் செய்வதற்காக வந்த கிழக்கிந்தியக் கம்பெனி நம் நாட்டை கைப்பற்ற பல வழிகளைக் மேற்கொண்டார்கள். நம் மக்களைக் கொண்டே நம் வளங்களை சுரண்டி, நம் நாட்டு மக்களையே தங்களின் படைக்குப் போர்வீரர்களாகக் கொண்டு ஆட்சி செய்தார்கள். அப்பொழுது அவர்கள் மேற்கொண்ட முக்கியமான திட்டம் “*பிரித்தாளும் சூழ்ச்சி*”. நம்மை மதத்தாலும், இனத்தாலும், மொழியாலும் பிரித்து எளிதில் நம்மை அடக்கி ஆண்டார்கள்.

அது இன்னமும் தொடர்கிறது. அதன் நீட்சியாகத்தான் நமக்குள் பகையை மூட்டிக் கொண்டே இருக்கிறார்கள். பிறரின் குறைகளைத் தோண்டித் துருவி எடுத்துக் காட்ட பல இணைய தளங்கள் நடத்தப்படுகின்றன. அவற்றை இயக்குவது மேலோட்டமான பார்வைக்கு அந்தந்த சமய / இயக்கங்களின் நிர்வாகிகள் தென்படுவார்கள். ஆனால் அவர்களை நியமிப்பதும், பின்னாலிருந்து நிர்வாகிப்பதும் யாரென்று *யாருக்குமே தெரியாது*. ஒருவொருக்கொருவர் வம்பிழுத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோள். உங்கள் கவனங்கள் திசை திருப்ப இவை போதும். அவர்கள் அவர்களுக்கான் காரியங்களை சாதித்துக் கொண்டே இருப்பார்கள்.

இப்படி அவர்கள் விரித்திருக்கும் “மாயவலை”க்குள் அகப்பட்டுக் கொண்ட நீங்கள் உணர்ச்சி வசப்படுவீர்கள்.

உங்களுக்கு வந்த செய்தியை அது உண்மையா, பொய்யா என்பதை அறியாமலே அடுத்தவருக்குக் கடத்துவீர்கள்.

அவர்களும் பொறுப்பாக அவர்கள் பங்குக்கு அந்தக் கருத்தை அடுத்தவருக்குக் கடத்துவார்கள். 

இப்படி ஒரு செய்தி ஒரு சமுதாயம் முழுக்க பரவும். நமக்குள் சண்டையும், சச்சரவும் பெருகும். 

இதனால் சமுதாயத்தில் அமைதி கெடுமென்பதை சொல்ல வேண்டியதில்லை. இதுதான் அவர்கள் எதிர்பார்ப்பது.

அவரவர் சமயத்தைப் பற்றி ஓரளவிற்காவது முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் அடுத்தவர் சமயங்களைக் குறை கூறி நமக்கு வந்த செய்திகளை நாம் பரப்புகிறோம். 

தவறாகத் திரிக்கப்பட்ட இத்தகைய செய்திகள் உங்களை சில சமயம் உணர்ச்சி வசப்பட வைக்கும். உங்கள் அமைதியைக் கெடுக்கும். உங்கள் மனம் அமைதியை இழந்தால், நிச்சயம் உங்கள் உடலின் ஆரோக்கியம் கெடும்.

அவரவர் கடவுளையும், கடவுளின் ஆலயங்களையும் ‘நாங்கள் காப்போம்என்று கூறிக் கொள்வது, இந்த பிரபஞ்சத்தையே படைத்து காப்பதாக நாம் நம்பும் கடவுளையும், கடவுளின் செயல்பாட்டையும் நாமே நம்பாதது போல் இருக்கிறது. வணங்கும் கடவுளையே அவமதிப்பது போன்றது.

இதனைத் தவிர்க்க நாம் என்ன செய்யலாம்?


1. உங்களுக்கு வரும் செய்திகளை அது *உண்மையானதா? அல்லது பொய்யானதா?* என்பதை வேறு பல இணய தளங்களுக்குச் சென்று ஆராயலாம். ஆனால் பலருக்கும் இது போன்ற தேடலுக்கான ஆர்வமோ, நேரமோ இருப்பதில்லை. அப்படி முடியாதவர்கள் தங்களுக்கு வந்த செய்தியை உறுதிப்படுத்தாமல் அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

2. உறுதியான செய்தியாக இருந்தாலும் அதனால் பொது சமுதாயத்திற்கு ஊறு விளைவிக்குமெனில் தங்களுக்குத் தாங்களே தணிக்கையாளர்களாக இருந்து அவற்றைப் பரப்புவதை தவிர்க்க வேண்டும். 

எறும்புகள் இனிப்பையும், உப்பையும் வைத்தால் இனிப்பை மட்டுமே எடுத்துச் செல்கின்றன. அவை தம் *உள்ளுணர்வு* சொல்லும் வழியில் செயல்படுகின்றன. ஆனால் நாமோ *பகுத்தறியும் புத்தி*யைக் கொண்டு நமக்குள் வழிகாட்டும் உள்ளுணர்வுக்கு மதிப்புக் கொடுக்காமல் தப்புத் தப்பாய் பல முடிவுகள் எடுத்து விடுகிறோம். *உள்ளுணர்வுக்கு மதிப்புக் கொடுத்து யோசித்தால் போதும்*.  

3. உங்களுக்கு காட்டப்படும் கருத்துகளுக்கு நேர் எதிரான கருத்துக்களை ‘சர்ச்’ என்னும் தேடு பொறியில் கொடுத்து தேடி உண்மைகளை அறியலாம். தொடர்ந்து நேர் எதிரான கருத்துக்களைத் தேட பிறகு அந்த கருத்துக்கள் உங்கள் திரைக்கு வர ஆரம்பிக்கும். நேர் எதிரான இன்னொரு உலகம் உங்களுக்கு புலப்படும்.

4. இவற்றை செய்ய முடியாதவர்கள், முகநூல், யூ-ட்யூப் பக்கங்களில் இது போன்ற செய்திகள் தென்பட்டால் அவற்றில் ஆர்வமோ, முக்கியத்துவமோ காட்டாமல் பகவத் ஐயா சொல்வது போல் வெறுமனே பார்வையாளராக இருந்து விட்டுப் போகலாம்.

நான் மட்டும் இதைச் செய்வதால் எல்லாம் சரியாகி விடுமா? என நினைக்காதீர்கள். 
எண்ணம் போல் வாழ்க்கை” – தனி மனிதராக இருந்து ஹீலர் பாஸ்கர் நான்கைந்து வருடங்களுக்கு முன்னர் செக்கு எண்ணெயை உபயோகிக்கத் தூண்டினார். 
இன்று எங்கு பார்த்தாலும் செக்கு எண்ணெய் விளம்பரங்கள்.. அதன் உபயோகம் பெருகி விட்டது. இதற்கு பெரு முயற்சி செய்தவர் ஹீலர் பாஸ்கர்தான். ஆகவே தனி மனித முயற்சி என்பது சமுதாய மாற்றத்திற்கு அடித்தளம்.

“தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்” என்கிறார் திருவள்ளுவர்.

உலக அமைதிக்கு உண்மையாய் முயற்சிப்போம். 

வெற்றி பெறுவோம்.

வாழ்க வையகம்  வாழ்க வளமுடன்.

விடை தெரியா வினாக்களும், விளக்கங்களும் :


விடை தெரியா வினாக்களும், விளக்கங்களும் :

 1. வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பல சினிமாக்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இது வரை இந்த வருடத்தில் 160 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கின்றன. ஒவ்வொரு படத்திற்கும் தயாரிப்புச் செலவு குறைந்த பட்சம் இன்றைய தேதியில் ஒன்றிரண்டு கோடிகளாவது ஆகும். பெரிய படங்கள் (மெகா பட்ஜெட்) என்றால் பலபல கோடிகள் ஆகும். இப்படி பலபல கோடிகள் செலவு செய்து எடுக்கப்படும் படங்கள் ஓடும் திரையரங்குகளில் கூடும் கூட்டத்தைப் பார்த்தால் பெரும்பாலான படங்களுக்கு சொற்ப எண்ணிக்கையிலேயே பார்வையாளர்கள் வருகிறார்கள்


சுமார் இருபது பேருக்காக ஓடும் காட்சிகளும், பத்துப் பேர் கூட தேறவில்லை என்று வந்தவர்களையும் திருப்பி அனுப்பி விட்டு காட்சியை ரத்து செய்து விடும் சம்பவங்களும் தமிழ் நாட்டின் உள் மாவட்டங்களில் இன்றும் நடக்கிறது.
முதல் நான்கு அல்லது ஐந்து நாட்களில் வசூல் செய்து சம்பாதித்தால்தான் உண்டு என்கிற நிலை இன்று. அதன் பின் கூட்டம் படம் மிக நன்றாக இருந்தாலே தவிர வருவதில்லை. இன்னும் அந்தப் படம் பற்றி சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எதிர்மாறாக வந்து விடலாம். இன்னும் அதற்குள் அடுத்த வெள்ளிக்கிழமை அடுத்த படம் வெளியாகி விடும்.
இன்னும் இலவசமாகப் பார்க்க அந்தப் படமே திருட்டுத்தனமாக வலையுலகில் வெளியாகிவிடும்
நகரங்களில் ஒரு சினிமாவை திரையரங்கிற்கு சென்று ஒரு குடும்பம் பார்க்க இன்றைக்கு சுமார் ஆயிரம் ரூபாயாவது ஆகிறது.அதனால் செல்போனிலேயே டவுன்லோடு செய்து குறைந்த செலவில் குடும்பமே பார்த்து விடுகிறது  
நிலைமை இப்படி இருக்க ஒவ்வொரு படமும் இவ்வளவு கோடி வசூல் செய்தது, வசூலில் முந்தைய படத்தின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தது, இத்தனை கோடி இலாபம் சம்பாதித்தது என்று சம்பந்தமே இல்லாத புள்ளி விபரங்கள் சொல்கிறார்களே ! இந்த வசூல் தகவல்கள் உண்மையா? உண்மையிலேயே இலாபம் வருகிறதா?
இலாபம் வருவதால்தான் அடுத்தடுத்த படங்களை எடுக்கிறார்கள் என்று சொல்பவர்கள் இந்த கேள்விக்கு பதில் தேட மறுப்பவர்கள் என்று கருதப்படுகிறார்கள். அவர்கள் இந்தக் கேள்வியை யோசிப்பவர்களுக்கு வழி விட்டு ஒதுங்கிக் கொள்ளலாம்.

கேள்விகள்:

1. 1 GB இண்டர்நெட்டை (2G , 3G) மாதத்திற்கு சராசரியாக 250 ரூபாய்க்கு வழங்கிக் கொண்டிருந்த செல்போன் நிறுவனங்கள் திடீரென போட்டி போட்டுக் கொண்டு மலிவாக்கிக் கொண்டிருக்கின்றன. 84 நாட்களுக்கு அளவின்றி பேசவும், தினமும் 1 GB வீதம் 84 GB - 4G இண்டர்நெட்டை உபயோகிக்கவும்  அதுவும் வெறும் 399 ரூபாய்க்கு அனுமதிக்கின்றன. இந்தக் கட்டணக் குறைப்பு எதற்காக?

2. இரயில் நிலையம், ஷாப்பிங் மால்கள் போன்ற பொது இடங்களில் அதிவேக WIFI வசதியை செய்து கொடுத்து இலவசமாக பொது மக்களை உபயோகிக்க அனுமதிப்பது எதற்காக? 

3. சில,பல கோடிகள் செலவழிக்கப்பட்டு தயாரிக்கப்படும் பல படங்கள் ஒடுவதில்லை ஆனாலும் பெரும் இலாபம் சம்பாதித்துக் கொடுப்பதாக செய்திகள் வெளியாகிறதே. இது உண்மையான தகவல்களா? உண்மையிலேயே இலாபம் கிடைக்கிறதா?

4. சினிமா தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெரும் நிறுவனங்கள் எல்லாம் ஒதுங்கிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் கோடிக்கணக்கான பணத்துடன் புதிது புதிதாக தயாரிப்பாளர்கள் வருகிறார்களே. அவர்கள் யார்?  அவர்களுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வருகிறது? 

5. திரையரங்குகளில் ஓடினாலும், ஓடாவிட்டாலும் அந்தப் படங்கள் சீக்கிரமாகவே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறதே? ஓடாத படத்தைக்கூட நஷ்டத்திற்கு வாங்கி ஏன் ஒளிபரப்ப வேண்டும்? 

6. பெரும்பாலான புதுப் படங்கள், படம் வெளியான அன்றே அல்லது சில நாட்களிலேயே பல  வெப்சைட்டுகளில் வெளியாகின்றனவே. அவற்றை கட்டுப்படுத்த முடிவதில்லையே ஏன்?

7. பெரும்பாலான திரைப்படங்கள், பாடல்கள், பெரிய திரை, சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு வகை வீடியோக்கள், ஆடியோக்கள், புத்தகங்கள், கட்டுரைகள், நல்லவைகள், கெட்டவைகள் என வலைதளங்களில் கொட்டிக் கிடக்கிறதே, அதுவும் இலவசமாக தரவிறக்கிக் கொள்ள அனுமதிக்கிறார்களே. இதனால் அவர்களுக்கு என்ன இலாபம்?

8. இண்டர் நெட் வசதிக்காகவே விதவிதமாய் ஆண்ட்ராய்டு செல்போன்கள், குறைந்த விலையில் விற்பனைக்கு வந்து கொண்டே இருக்கின்றனவே? வியாபார நோக்கம் மட்டும்தான் காரணமா?

9. நடப்பு நிகழ்வுகளைக் கலாய்த்து மீம்ஸ்கள் என்ற பெயரில் பலர் ஃபேஸ்புக், ட்வீட்டர் போன்ற வலை தளங்களில் செயல்படுகிறார்களே? அவர்கள் யார்? அவர்கள் நோக்கம் கலாய்ப்பது மட்டும்தானா? இது அவர்களுக்கு பொழுது போக்கா? வருமானமா? சமூக அக்கறையா? 


 10. பலப்பல வெப்சைட்டுக்கள் ஆபாச செய்திகளை, படங்களை, வீடியோக்களை பலரும் பார்ப்பதற்காக இலவசமாக உலாவ விடுகின்றனவே. இவற்றால் அவர்களுக்கு என்ன இலாபம்?

11. நாம் ஏதாவது ஒன்றைத் தேடி கூகுளில் டைப் செய்தால் நாம் கேட்காத பல ஆபாச வெப்சைட்டுக்களின் விளம்பரங்கள், முகவரிகள் எதற்காக வர வேண்டும்? நாம் ஒரு முறை தேடிய விஷயம், நாம் போகும் வெவ்வேறு தளங்களிலும் திரும்பத் திரும்ப காட்சியளிக்கிறதே. நம் சுவையறிந்த் நம்மைத் தொடருவது எதற்காக?

12. மது அருந்துவது, குடித்து விட்டு ஆடிப் பாடுவது என்று சமீபகாலமாய் வரும் எல்லாப் படங்களிலும் சில காட்சிகள் கட்டாயம் வைக்கப்படுவது தற்செயலா? அல்லது திட்டமிடலா?

13. தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள், செய்திகள், தொ.கா.தொடர்கள் இவற்றிற்கான நேரங்கள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு விளம்பரங்களுக்கான நேரங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. எத்தனை பேர் இந்த நேர ஒதுக்கீட்டிற்கான மாற்றத்தைக் கவனிக்கிறார்கள்? விளம்பரங்களை எத்தனை பேர் கவனித்துப் பார்க்கிறார்கள்? எல்லா விளம்பரங்களும் சிறுவர், சிறுமியர்களை ஈர்க்கும் வகையிலேயே அமைக்கப்படுகின்றதே. ஏன்?
 

14.மாலை, இரவு நேரங்களில் மட்டுமே ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்த தொ.கா. தொடர்கள் இப்பொழுதெல்லாம் காலையிலேயே ஆரம்பித்து  நள்ளிரவு வரை தொடருகிறதே! எதற்காக இவ்வளவு தொலைக்காட்சி நிறுவனங்கள் ? இத்தனை தொடர்கள் ?

இத்தனைக்கும் ஒரே விடைதான்.

நம்மை அறியாமல் நம் ஆழ்மனதிற்குள் எதிர்மறை எண்ணங்களை குடியேற்ற வேண்டும் என்பதே இல்லுமினாட்டிகளின் குறிக்கோள். அதற்காகத்தான்இவ்வளவும் நிகழ்த்தப்படுகின்றன.

·            ஊடகங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தங்கள் திட்டங்களுக்குத் தகுந்தாற்போல் பிரச்சாரம் செய்ய வேண்டும்

·            கல்வித் திட்டத்தைக் கட்டுப்படுத்தி, மக்களின் சிந்தனையை மழுங்கடிக்க வேண்டும்.

·            வரலாற்றை தம் வசதிக்கு ஏற்றாற்போல் திரித்து எழுத வேண்டும்.

·            பேராசை, சுகபோக வாழ்க்கை, பொழுதுபோக்கு ஆகியவற்றில் மக்களை மூழ்கடிக்க வேண்டும்.

·            சிறு குறு நிறுவனங்களுக்கு வேட்டு வைத்து, பெரு நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும்”

இவையெல்லாம் அவர்களின் திட்டங்கள் என ‘புரோட்டோகால்ஸ் - யுதப் பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை என்ற புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கின்றவை

‘மக்களை முற்றிலுமாக அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்க, அவர்களை அதிலிருந்து திசை திருப்ப வேண்டும். அதற்காக, கேளிக்கைகள், விளையாட்டுப் போட்டிகள், பொழுது போக்குகள், புதுப்புது ஆசைகள், சொகுசு வீடுகள் என என்னவெல்லாம் இருக்கின்றனவோ, அவற்றில் எல்லாம் அவர்களை ஈடுபடுத்தலாம். பல்வேறு விளையாட்டுக்களிலும், கலை-நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வருமாறு ஊடகங்கள் மூலம் மக்களைத் தூண்டி விடலாம். இவ்வகையான விஷயங்கள், மக்களை நமக்கு எதிரான கேள்விகளிலிருந்து திசை திருப்பும்.’     (புரோட்டோகால்ஸ் - யுதப் பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை நூலிலிருந்து பக்கம் 63) 


நாம் இதனைப் புரிந்து கொள்ளாமல் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?
மலிவாய் / இலவசமாய் இண்டர்நெட் கிடைக்கிறது என்பதற்காக , ஒவ்வொரு நாளும் 1.5 GB யைக் காலி செய்வதற்காகவே எதையாவது டவுன் லோடு செய்ய நள்ளிரவு வரை விழித்திருந்து நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கின்றோம்.

 நல்லவைகள், பல தொலை தொடர்பு வசதிகள் எனப் பலவும் உண்டுதான், ஆனால் அவற்றை தேடித் தேடித்தான் எடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் நல்லவையல்லாதவைகளே நாம் தேடாமலே நம் திரையில் வந்து குவிகின்றன. நாமும் அதற்குள் விழுந்து மயங்கிக் கிடக்கிறோம்.

 சொந்த,பந்தங்கள் கூடத் தேவையில்லை. அடையாளமே தெரியாத முகநூல் நட்பு  போன்றவற்றிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

இது பற்றி ஹீலர் பாஸ்கர் அவர்களின்உலக அரசியல்ஆடியோவை முழுமையாகக்  கேட்டால் இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
 

இப்பொழுது நாம் என்ன செய்யவேண்டும்?

1. நமக்கும், பிறருக்கும் பயன் தரும் நல்ல விஷயங்களுக்காக மட்டுமே இணைய தளங்களை உபயோகிக்க வேண்டும், கேளிக்கைகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், அவசியமற்ற கைபேசி வழி இணைய உபயோகங்கள் – இவற்றைத் தவிர்க்க வெண்டும் அல்லது குறைந்த பட்சம் குறைத்துக் கொள்ள வேண்டும்




2. அனைவரும் ஆரோக்கியத்தோடு வாழ பெருநிறுவனங்களின் பிராண்டட் வகைப் பொருட்களை முடிந்தவரை புறக்கணிக்க வேண்டும்.. தற்சார்பு வாழ்க்கையை மேற்கொண்டு வாழ அவரவருக்குத் தேவையான பொருட்களை அவரவரே தயாரித்துக் கொள்ள வேண்டும். இயலாத பட்சத்தில் உள்ளூர் தயாரிப்புக்களை ஆதரித்து உபயோகித்து அவர்களை ஊக்குவிக்க  வேண்டும் 

தொலைக்காட்சிகளில் விளம்பரங்களில் காட்டப்படும் பொருட்களை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்.

3. நல்ல எண்ணங்கள் தரும் மனிதர்களோடு தொடர்பில் இருங்கள். நல்ல விஷயங்களுக்காக மட்டும் செயல்படுங்கள். உண்மை செய்திகள் எனத் தெரிந்தாலும் நமக்கோ அல்லது பெறுபவர்களுக்கோ நன்மை தரும் செய்திகளை மட்டும் அடுத்தவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

4. உலக அமைதி, ஒற்றுமை என்கிற விஷயங்களுக்காக உண்மையாகவே இருந்தாலும் கூட பிறரைக் குறை கூறும் செய்திகளை பரப்புவதைத் தவிர்த்திடுங்கள்.

கெட்ட எண்ணத்தில் செயல்படும் சில பல மனிதர்களுக்கே உதவும் இறையாற்றல், நல்ல எண்ணம் கொண்டு செயல்படும் நம் குரலுக்கு செவி சாய்க்காமலா போய் விடும்?

கெட்ட எண்ணத்தில் செயல்படும் சில பல மனிதர்களுக்கே உதவும் இறையாற்றல், நல்ல எண்ணம் கொண்டு செயல்படும் நம் குரலுக்கு செவி சாய்க்காமலா போய் விடும்? 

நல்லவை நிச்சயம் நிகழும் என்ற நம்பிக்கை கொள்வோம்.

உலக அமைதிக்கு உண்மையாய் முயற்சிப்போம். வெற்றி பெறுவோம்.


வாழ்க வையகம்  வாழ்க வளமுடன்