Friday, January 9, 2015

ஜெயலலிதாவுக்கு எதிராக அளிக்கப்பட்ட தண்டனையில் உலக அரசியல்.

  உலக அரசியல்- ஒரு தொடர் பார்வை 

ஜெயலலிதாவுக்கு எதிராக அளிக்கப்பட்ட தண்டனையில்  அரசியல் பின்னணியை கொண்டது.
- உலக தமிழர் பாதுகாப்பு மையம்- இங்கிலாந்து

ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக அளிக்கப்பட தண்டனை அரசியல் பின்னணியை கொண்டது. - உலக தமிழர் பாதுகாப்பு மையம்- இங்கிலாந்து

இதற்கு பின்னால்   இன்று   ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி ஒரு காரணம் என்பதை ஆழமாக சிந்தித்தால் புரியும்.

இன்று ஆட்சியை கைப்பற்றி இருக்கும் பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில்  அணைத்து  மாநிலங்களிலும் பெரும் பான்மையை பெற்று இருந்த போதிலும் தமிழ் தேசிய உணர்வுடைய தமிழ்நாட்டை மட்டும் வெல்ல முடியவில்லை, தமிழ் நாடே இந்தி மொழி பரவலாகத்திட்கும் தடையாக இருக்கிறது - தமிழ் தேசிய சிந்தனை வளர்ந்து நிற்கும் பிரதேசமாக இந்த தமிழகம் இருக்கிறது,

இந்த மாநிலத்தை தமது கைக்குள் கொண்டுவருவது எப்படி என்ற திட்டத்தின் ஒரு படியே செல்வி ஜெயலலிதா மற்றும் அவருடன் நெருக்கிய உறவில் இருந்தவர்களுக்கு அளிக்கப்பட தண்டனை

அண்ணா ஹசாரே டெல்லியில் இந்தியாவில் சகல அரச - சட்ட மட்டத்தில் புறையோடி இருக்கும்  ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த போது, அந்த ஊழல் வட இந்திய அரச மட்டத்தில் தான் அதிகம் இருந்ததால் அந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார், ஆனால் இதில் தண்டிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டு இருக்கும் ஒரு சிலரை பார்த்தால், அரசில் நோக்கத்திற்காக கட்சி நோக்கத்திற்காக சிறை வைக்கப்பட்டவர்கள் அதிகம். அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது திரண்டு எழுந்தது வட மாநிலங்களே அதிகம், காரணம் இந்த மாநிலங்களில் தான் ஊழல் பல மட்டங்களில் புறை ஓடிக்கொண்டு இருந்தது.

அதற்காக தமிழகத்தில் ஊழல் இல்லை என்று கூறவில்லை, ஆனால் இந்த விடயத்தில் தண்டனை அளிப்பதிலும் கூட அரசியல், தேர்தல் நோக்கம் தான் முன்னிற்கிறது என்பதை வலியுறுத்த வேண்டி இருக்கிறது.

இன்று வட இந்திய அரசியலில் இருப்பவர்கள் எல்லோரையும் எடுத்து பார்த்தால் - அவர்களின் ஆரம்ப வாழ்க்கைக்கும் - இன்று வாழும் வாழ்க்கைக்கும் வித்தியாசம் இருக்கும். மண்ணில் இருந்து வானத்தை எவ்வாறு திடீரென்று தொடார்கள் என்பது கேள்விக்குறி.

இன்று முக்கியமாக அடுத்த பேசப்படும் 2 ஜி விவகாரத்தை எடுத்து பார்த்தால் - தமிழக முக்கிய கட்சியாகத் தான் இருக்கிறது. இந்த விவகாரத்தில் பங்குதாரர் ஆக இருந்ததாக கூறப்பட்டும் அல்லியான்ஸ், அல்லது டாடா போன்ற நிறுவனங்களை பற்றி அதிகமாக பேசப்படுவதாக தெரியவில்லை.

தமிழகத்தில் நடைபெறும் அரசியல் பழிவாங்கலின்  எதிரொலி தான் இதே வொளியே வேறு எதுவும் இல்லை.

இதை வட இந்திய அரசியல் கட்சிகள் தமிழகத்தை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் பயன்படுத்துகின்றன என்பது தான் நாம் எல்லோரும்   புரிந்து கொள்ளவேண்டும்

- உலக தமிழர் பாதுகாப்பு மையம்- இங்கிலாந்து

இந்திய அழகிகள். ஒரு உலக அரசியல்!

 உலக அரசியல் - ஒரு தொடர் பார்வை 

இந்திய அழகிகள். ஒரு உலக அரசியல்!

 தொண்ணூறுகளின் தொடக்கத்தில் உலக காஸ்மெடிக் நிறுவனங்கள் இந்தியாவைக்குறிவைத்தன – உடனே 1994ல் ஐஸ்வர்யாவுக்கும், சுஸ்மிதாவுக்கும் உலக அழகி பட்டங்கள் கொடுத்து இந்தியப்பெண்களை கவிழ்த்தன.

1994, 1996, 1997, 1999, 2000 ம் என தொடர்ந்து லாரா தத்தா, டயான ஹெய்டன், யுக்தா, பிரியங்கா என தேர்வு செய்து இந்தியாவில் அழகு சாதனப்பொருட்களை ஆழமாக கால் ஊன்றச்செய்து இந்தியப்பெண்களை மயக்கி கோடிகளை குவித்தது.

2000த்திற்க்குப்பிறகு முதல் 20 இடங்களில் கூட இந்திய அழகிகள் வந்ததில்லை. காரணம் இனி இந்தியப்பெண்கள் அழகு சாதனப்பொருட்களை கைவிடமாட்டார்கள் என்று புரிந்துக்கொண்டதால் மற்ற நாட்டுப்பெண்களை கவர சென்றுவிட்டார்கள்.

ஆனால் தொண்ணூறுகளிலிருந்து நாம் இன்னும் ஏமாந்து கொண்டிருக்கிறோம். 

 இதுவும் ஒரு உலக அரசியல் என்பதை எப்போதுதான் புரிந்துக்கொள்ளப்போகிறோம்???

பிக் டேட்டா: அந்தரங்கமும் அம்பலமாகும்!

உலக அரசியல்- ஒரு தொடர் பார்வை

பிக் டேட்டா: அந்தரங்கமும் அம்பலமாகும்!

ரவி சின்னதம்பி

சென்ற வாரம் தி இந்து தமிழ் வாசகர் ஒருவர், ``என் மனைவிக்குத் தெரியாத என்னைப் பற்றிய விஷயங்களைக்கூட 'கூகுள்' தெரிந்து வைத்திருக்கிறது’’ என்று கமெண்ட் போட மற்றொருவரோ `எனக்கே தெரியாத என்னைப் பற்றிய விஷயங்களைக்கூட 'கூகுள்' தெரிந்து வைத்திருக்கிறது’ என்று ஒரு காமெடி கமெண்ட்டை போஸ்ட் செய்திருந்தார். அது காமெடியல்ல. அப்பட்டமான உண்மை என்பதை நாம் உணராமலேயே அலைந்து கொண்டிருக்கின்றோம். அது என்ன அலைந்து கொண்டிருக்கின்றோம் என்று கிண்டல்? நாம நம்மளுடைய பிழைப்பையல்லவா பார்க்கின்றோம் என்று நீங்கள் சொல்லலாம். பிழைப்புக்காக நாம் சுற்றித்திரியும் போது நாம் விட்டுச்செல்லும் தடயங்களை வைத்து தொழிலுக்கும், தனி மனிதனுக்கும் உபயோகப்படுமளவிற்கு மாற்ற உதவுவதுதான் அனலிடிக்ஸ்.
கடந்த சில வருடங்களில் எற்பட்டுள்ள தொலைத்தொடர்பு சார்ந்த அறிவியல், தொழில்நுட்பம், இன்டெர்நெட் முன்னேற்றங்களினால், நாம் செய்யும் பெரும்பாலான காரியங்களினால் நமக்கே தெரியாமல் உருவாகும் பல டிஜிட்டல் தடயங்கள் (digital traces) ஆங்காங்கே ஆவிகள் போல உலாவிக்கொண்டிருக்கின்றன.
நீங்கள் ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோருக்குச் சென்று பொருட்கள் வாங்கும் போது, மாணவர்கள் கல்லூரி வகுப்புகளை கட் அடித்து விட்டு ஏதாவது ஒரு மாலில் (Mall) உள்ள சினிமா தியேட்டருக்குச் செல்லும்போது, நவீன ஒப்பனை நிலையத்தில் ஹேர் ஸ்டைல் செய்து கொள்ளும்போது, மொபைல் போனில் பேசும் போது, பிரவுசிங் செய்யும் போது, நண்பர்களுடன் ஜாலியாய் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் போது - இப்படி எங்கு போனாலும், என்ன செய்தாலும் அந்தந்த இடங்களில் உருவாகும் டிஜிட்டல் தடயங்களை எல்லாம் கூட்டி ஒன்று சேர்த்தால் அவைகள் உங்களைப் பற்றியும், உங்கள் எண்ணங்களைப் பற்றியும், உங்கள் விருப்பங்கள், வெறுப்புகள், நிறைவேறாத, மனதில் அடக்கி வைத்திருக்கும் ஆசைகள்(!) என்று உங்களைப் பற்றிய ஒரு அழகான உண்மைக் கதையையே சொல்லக்கூடும்.

இப்படி ஒவ்வொருத்தரைப் பற்றியும் சேர்க்கப்படும் விஷயங்கள் கற்பனைக்கெட்டாத, எண்ணில் அடங்காத அளவு பூதாகரமானவை. இதில் பயம் கலத்த உண்மை, அதே சமயம் புல்லரிக்கும் விஷயம் என்னவென்று தெரியுமா? இது மனித இயல்பை, மனித உணர்வுகளை, மிக ஆழமாகவும், முழுமையாகவும் அப்பட்டமாகவும் HD தரத்தில் படம் பிடித்து காட்டும் சகலகலா வல்லமை படைத்தது அனலிடிக்ஸ். நம்மை பற்றிய, நாம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாத பல உண்மைகளும் அடங்கியது என்பதுதான் அது. இந்தத் தடயங்களை எந்த ரப்பரையும் வைத்து அழிக்க முடியாது. நாம் கவனமாக இல்லா விட்டால் இனி வரும் காலங்களில் அந்தரங்கம் (பிரைவசி) என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகத்தான் இருக்கப்போகின்றது எனலாம்.
அந்தரங்கத்தன்மை போகின்றது என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் இந்த டிஜிட்டல் தடயங்கள் நமக்கு எப்படியெல்லாம் உதவி செய்யமுடியும் என்பதுதான் ஆச்சரியம்தரும் ஒரு விஷயம்.
கோடம்பாக்கத்திலிருந்து தினமும் இந்து அலுவலகத்திற்கு ஒருவர் செல்ல வேண்டும் என்றால் கோடம்பாக்கம் சாலையில் நீண்ட தூரம் பயணித்தாக வேண்டும். காலையில் வேலைக்கு கிளம்பும் போது மட்டும் நாம் அனைவரும் எப்படி தினமும் லேட்டாக கிளம்ப முடிகிறது என்பது புரியாத விஷயம். அப்படி ஏற்கனவே லேட்டாக வீட்டிலிருந்து கிளம்பும் போதே கோடம்பாக்கம் சாலையில் ஒரு பிரச்சினையினால் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு டிராபிக் ஜாம் ஆகி எல்லோரும் மாட்டிக்கொண்டு, பொறுமை இல்லாமல் ஹார்ன் அடித்து நின்று கொண்டு இருந்தால் அது நமக்கு தெரிய வாய்ப்பே இல்லை. தெரியாமல் நாமும் போய் மாட்டிக்கொண்டு முழிக்காமல், வீட்டில் கிளம்பும் போதே ‘பிரதர், அந்த ரோடில் போக வேண்டாம், ட்ராபிக் ஜாம் பயங்கரமாக இருக்கிறது. ஓரு மணி நேரத்திற்கு மேல் லேட்டாகி விடும். வேற வழியில் ஓடிப்போயிடு’ என்று எச்சரிக்கக்கூடியது அனலிடிக்ஸ். கூடவே போவதற்கு எது சரியான வழி என்றும் காட்டக் கூடியது.
அதே போல், நீங்கள் வழக்கமாக அலுவலகம் செல்லும் டவுன் பஸ், எங்கோ ஒரு இடத்தில் ரிப்பேராகி நின்று கொண்டிருப்பது தெரியாமல் நீங்கள் பஸ் ஸ்டாப்பில் கடிகாரத்தையும் ரோட்டையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருக்கும் போது, ‘உன் பஸ் வரும்! ஆனா, இப்போதைக்கு வராது! ஆட்டோவோ அல்லது கால் டேக்ஸியோ பிடித்து ஆபீஸ் போறதுதான் நல்லது’ என்று சொல்லக்கூடியது. எந்தெந்த சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும், எந்தெந்த இடங்களில் கழுத்தில் இருக்கும் செயின் அறுக்கப்படும் வாய்ப்புள்ளது என்று அறிவுறுத்தும்.
மற்றுமொறு மிக அற்புதமான ஒரு விஷயம், நமக்குத் தெரியாமல் நம்மில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து தகுந்த சமயத்தில் உஷார் படுத்தவும் கூடும். திடீரென்று அடிக்கடி வெளியில் வழக்கமாக செல்வதைத் தவிர்த்து, அலுவலக விஷயங்களைத் தவிர்த்து முக்கிய நண்பர்களுக்கு அடிக்கடி போன் செய்தால், உங்களுக்கு ஏதோ பிரச்சனை உள்ளது என்றறிந்து உடனே டாக்டரை சென்று பாருங்கள் என்று கூடச் சொல்லும் வாய்ப்புள்ளது. இரும்பிலே ஒரு இருதயத்தை டைரக்டர் ஷங்கர் முளைக்க வைத்ததைப் போல, செல்போனில் ஒரு சினேகிதனை அனலெடிக்ஸ் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பது உறுதி.
பிசினஸிற்கு இது எப்படி உதவும் என்கின்றது என்பதைக் கேட்டால் உங்களின் ஆச்சரியம் உச்சத்துக்கு செல்லும். தீபாவளி ரிலிஸ் படத்துக்கு தியேட்டருக்கு ஒருவாரம் கழித்துப்போனாலுமே துணிக்கடை விளம்பரம் திரையில் வருவதை இப்போது நாம் பார்க்கின்றோம். வரும் காலத்தில் பகல் காட்சிக்கு கல்லூரி மாணவர்கள் கூட்டமாக வந்தால் அவர்களுடைய செல்போன் பதிவுகளை அலசி பேஸ்புக்கில் அவர்களில் பெரும்பாலானோர் லைக் செய்திருக்கும் அயிட்டங்களின் விளம்பரம் மட்டுமே திரையிடப்பட்டு அந்த நிறுவனங்களிடம் மட்டுமே பணம் வசூலிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. திரையரங்கின் உள்ளே இருக்கும் கூட்டத்தின் பல்ஸைப் பார்த்து விளம்பரம் போடும் உத்தி வெற்றியளிக்கவே செய்யும் இல்லையா? வெட்டியாய் பல்லே இல்லாதவர்கள் கூட்டத்துக்கு பக்கோடா விளம்பரத்தை காண்பிப்பதில் பிரயோஜனம் எதுவுமில்லையே!

- Thanks to The Hindu Tamil

வலைதளங்களில் நாம் உலா வரும் நிகழ்வுகள் எல்லாமே ரகசியமானது அல்ல.பிறரால் கவனிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன
இரகசியங்களை வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளாதீர்.
தொழில் நுட்பம் வளர வளர பிரைவசி என்பது காணாமல் போய்விடும்

Wednesday, January 7, 2015

அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் - அமெரிக்க சதிகார கும்பல்கள்

  உலக அரசியல் - ஒரு தொடர் பார்வை 

அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் - அமெரிக்க சதிகார கும்பல்கள்


 பொதுவில் சந்தர்ப்பவாதமும், சரணடைவும் கோலோச்சும் இன்றைய அரசியல் வாழ்வில் என்ஜிவோக்கள் எனும் அரசு சாரா நிறுவனங்கள் அறிவையும், கலையையும், அரசியலையும் ஏகாதிபத்திய தொண்டூழியத்திற்கு ஏற்றதாக மாற்றி விட்டன.
அருந்ததி ராய் எழுதிய இந்தக் கட்டுரை இதை ஆணித்தரமாக நிறுவுகிறது. ராக்ஃபெல்லர் அறக்கட்டளை, ஃபோர்டு அறக்கட்டளை, லில்லி அறக்கட்டளை, பில்கேட்ஸ் அறக்கட்டளை உள்ளிட்ட அனைத்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் புரவலர்களும் என்ன செய்கிறார்கள்? இவர்களின் பணி கம்யூனிசத்தை முறியடிப்பதில் ஆரம்பித்து பின்னர் முதலாளித்துவத்தின் கொடூரங்களை மறைத்து நியாயப்படுத்தி, ஒட்டு மொத்தமாக இந்த உலகை அமெரிக்காவின் காலடியில் கிடத்துவதே  என்பதை ராய் தரவுகளுடன் எடுத்துரைக்கிறார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏவல் நாய்களாக, மூன்றாம் உலக நாடுகளின் மேட்டுக்குடி மற்றும்  கலை இலக்கியவாதிகளை   எலும்புத் துண்டு போட்டு வளர்க்கின்றன இந்த அறக்கட்டளைகள். 
பில்கேட்சின் அறக்கட்டளை கல்விக்கும், எய்ட்ஸ் ஒழிப்பிற்கும் நிதி உதவி அளிக்கிறது என்று எளிமைப்படுத்தி புரிந்து கொள்ளும் ‘அறிஞர்’கள், இதே பில்கேட்ஸ்தான் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை அதாவது ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக் கொள்கையை பரப்பும் கிளப்புகளில் உட்கார்ந்திருக்கிறார், அதற்காகவே இந்த பிச்சையை செய்து வருகிறார் என்பதை பார்ப்பதில்லை. இது பில்கேட்ஸுக்கு மட்டுமல்ல, ஃபோர்டு, ராக்பெல்லர் உள்ளிட்ட ஏனைய நிதி அறங்காவலர் நிறுவனங்களுக்கும் பொருந்தும். அந்த வகையில் அனைத்து அறக்கட்டளைகளும் ஏகாதிபத்தியத்தின் பசு வேடம் போர்த்திய டிராகுலாக்களே!
நோபல் பரிசு அமெரிக்க நலனுக்காக கொடுக்கப்படுகிறது என்றால், மகசேசே விருதை நேரடியாக அமெரிக்க அறக்கட்டளைகளே ஸ்பான்சர் செய்கின்றன. இந்த மகசேசே விருதை பத்திரிகையாளர் சாய்நாத், அண்ணா ஹசாரே, அரவிந்த கேஜ்ரிவால் உள்ளிட்டு பலரும் வாங்கியிருக்கின்றனர்.  என் ஜி வோக்களின் வலைப்பின்னலும், அதன் சதித்தனங்களும் யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பிரம்மாண்டமானவை. அந்த வகையில் இவர்கள் நம்மைப் போன்ற நாட்டு மக்களின் உரிமைப் போராட்டங்களுக்கு இழைத்து வரும் தீங்கும் அளவற்றவை.
ஆம் ஆத்மியோ, கூத்துப்பட்டறையோ, கிரண்பேடியின் தொண்டு நிறுவனமோ, ஜெர்மன் ஏகாதிபத்தியத்திடமிருந்த நிதியுதவி பெறும் இறந்து போன காந்தியவாதி ஜெகந்நாதனின் கிராம சுயராஜ்ஜிய இயக்கமோ (லாஃப்டி), ஹென்றி திபேனின் மனித உரிமை அமைப்போ, டாடாவுக்கு கலைச் சேவை புரிந்த லீனா மணிமேகலையோ, கலை இலக்கியத்திற்கு மட்டும் அமெரிக்க அறக்கட்டளைகளில் காசு வாங்கி நக்கலாம் என்று முழங்கும் ஜெயமோகனோ, குண்டு பல்பை தடை செய்யக் கோரும் சுற்றுச் சூழல் இயக்கங்களோ அனைவரும் அமெரிக்கா வடித்திருக்கும் ஏகாதிபத்திய நலனுக்காக உழைக்கின்றனர். 

கார்னஜி ஸ்டீல் கம்பெனியின் லாபத்தில் இருந்து 1911-ல் தொடங்கப்பட்ட கார்னஜி கார்ப்பரேஷன்தான் அமெரிக்காவின் முதல் அறக்கட்டளை. ஸ்டேண்டர்டு ஆயில் கம்பெனியின் நிறுவனர் ஜே.டி. ராக்பெல்லரால் 1914-ல் ராக்பெல்லர் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் தொடங்கப்பட்ட அறக்கட்டளைகளில் இதுவே முதன்மையானது. இவர்களே அந்தக் கால அமெரிக்காவின் டாடா, அம்பானிகள்.
ராக்பெல்லர் அறக்கட்டளையின் நிதி, துவக்க மூலதனம் (seed money) மற்றும் ஆதரவு பெற்ற நிறுவனங்கள் ஏராளம். ஐ.நா சபை, அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ, அயலுறவு மன்றம் (சி.எஃப்.ஆர்), நியூயார்க்கின் நேர்த்திமிகு நவீன கலை அருங்காட்சியகம் மற்றும் ராக்பெல்லர் மையம் ஆகியவை அவற்றுள் சில.
1920-களில் அமெரிக்க முதலாளித்துவம் கச்சாப்பொருட்களுக்காகவும், சந்தைக்காகவும் பிற நாடுகளை நோக்கித் தமது பார்வையைத் திருப்பத் தொடங்கியது. அறக்கட்டளைகள் உலகளாவிய கார்ப்பரேட் ஆளுகை பற்றிய கருத்துருவாக்கத்தை செய்யத் தொடங்கின. அன்று, 1924-ல் ராக்பெல்லர் அறக்கட்டளையும், கார்னிஜி அறக்கட்டளையும் இணைந்து தொடங்கிய அயலுறவு மன்றம்தான் (சி.எஃப்.ஆர்) இன்று உலக நாடுகளின் அயலுறவுக் கொள்கைகள் மீது அழுத்தம் கொடுத்து தமக்கேற்ப வளைப்பதில் மிகவும் வலிமையான அமைப்பாக திகழ்கிறது. பின்னர் ஃபோர்டு அறக்கட்டளையும் அதற்கு நிதி அளிக்கத் தொடங்கியது. 1947-ம் ஆண்டு புதிதாகத் தொடங்கப்பட்ட அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ, அயலுறவு மன்றத்தின் ஆதரவைப் பெற்று அதனுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டது. காலப்போக்கில், சி.எஃப்.ஆர் உறுப்பினர் பட்டியலில் 22 அமெரிக்க அரசுச் செயலர்களும் இடம்பெற்றனர். 1943-ம் ஆண்டு ஐ.நா. சபையை நிறுவுவதற்கான வழிநடத்தும் கமிட்டியில் (steering committee) ஐந்து சி.எஃப்.ஆர் உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர். ஜே.டி. ராக்பெல்லர் அளித்த 8.5 மில்லியன் டாலர்கள் கொடையில் வாங்கிய நிலத்தில்தான் இன்று ஐ.நா.வின் நியூயார்க் தலைமையகம் நின்று கொண்டிருக்கிறது.
1946-ம் ஆண்டு முதல் உலக வங்கியின் தலைவர்களாக இருந்த ஏழைகளின் மீட்பர்களாக தம்மைக் காட்டிக் கொண்ட மொத்தம் பதினோரு பேருமே சி.எஃப்.ஆர் உறுப்பினர்கள்தான். (மேற்படி 11 பேரில் ஒரே விதிவிலக்கு ஜார்ஜ் உட்ஸ் மட்டுமே. இவரும் ராக்பெல்லர் அறக்கட்டளையின் ஒரு தாளாளராகவும், ராக்பெல்லருடைய சேஸ்-மன்ஹாட்டன் வங்கியின் துணைத் தலைவராகவும் இருந்தவராவார்).
உலகின் பொதுச் செலாவணியாக (reserve currency) அமெரிக்க டாலர்தான் இருக்க வேண்டும் என்றும், மூலதனத்தின் உலகளாவிய ஊடுருவலை விரிவாக்க, கட்டற்ற சந்தை செயல்பாட்டின் அடிப்படையில் அனைத்து நாடுகளின் வர்த்தக நடவடிக்கைகளையும் உலகளவில் பொதுமைப்படுத்தலுக்கும் தரப்படுத்தலுக்கும் உட்படுத்த வேண்டியது அவசியம் என்றும் உலக வங்கியும் ஐ.எம்.எஃப்பும் அமெரிக்காவின் பிரட்டன் வுட்ஸ் நகரத்தில் கூடி முடிவு செய்தன. இந்த இலக்கை அடைவதற்காகத்தான், சிறந்த அரசாளுமை அமைய உதவுவதற்கும் (மூக்கணாங்கயிறு தம் கையில் இருக்கும் வரை), சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் (சட்டம் இயற்றுவதில் தமக்கு அதிகாரம் உள்ளவரை), நூற்றுக்கணக்கான ஊழல் ஒழிப்புத் திட்டங்களை ஊக்குவிப்பதற்கும் (தங்கள் உருவாக்கியிருக்கும் ஆட்சி முறையை ஒழுங்கு செய்வதற்காக) அவர்கள் ஏராளமான பணத்தை வாரியிறைக்கிறார்கள். உலகிலேயே பெரியவையும் ரகசியமானவையும், தம் செயல்களுக்காக யாருக்கும் பதிலளிக்க வேண்டாதவையுமான இந்த இரண்டு நிறுவனங்கள்தான் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புணர்ச்சியையும் கோரி ஏழை நாடுகளின் அரசுகளிடம் மல்லுக்கட்டுகின்றன.
கிட்டத்தட்ட அனைத்து மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகளையும் உலக வங்கி வழிநடத்துகிறது. ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து நாடுகளையும் நிர்ப்பந்தித்து அவற்றின் சந்தையை சர்வதேச மூலதனத்திற்கு அகலத் திறந்து விட்டிருக்கிறது. இந்தச் சாதனைகளை எல்லாம் கணக்கில் கொண்டு பார்ப்பீர்களேயானால், தொலைநோக்கு கொண்ட வணிக நடவடிக்கைகள் அனைத்திலும் முதலிடம் வகிப்பது இந்த கார்ப்பரேட் தர்மகர்த்தா முறைதான் என்று நீங்கள் அறுதியிட்டுச் சொல்லிவிட முடியும்.
அமெரிக்க அயலுறவு மன்றத்துக்கு (சி.எஃப்.ஆர்) இணையான தேசங்கடந்த அமைப்பு, முத்தரப்பு ஆணையம் ஆகும். இந்த ஆணையம் 1973-ம் ஆண்டு டேவிட் ராக்பெல்லர், முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஸ்பிக்நியூ ப்ரிசென்ஸ்கி  (இவர் இன்றைய தாலிபான்களின் பாட்டன்களான ஆப்கான் முஜாகிதீன் அமைப்பின் நிறுவன-உறுப்பினர்), சேஸ் மன்ஹாட்டன் வங்கி மற்றும் சமூகத்தில் உயர்நிலை வகிக்கும் சில தனிநபர்கள் ஆகியோரைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. வட அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய மேட்டுக்குடிகளிடையே நீடித்து நிலைக்கும் நட்புறவையும், ஒத்துழைப்பையும் உருவாக்குவதே இதன் நோக்கமாகும். தற்போது சீனர்களும், இந்தியர்களும் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டு இது ஐந்தரப்பு ஆணயமாக மாற்றப்பட்டிருக்கிறது. (இந்திய தொழிற்கூட்டமைப்பின் தருண் தாஸ், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அலுவலர் (சி.இ.ஓ) என்.ஆர். நாராயணமூர்த்தி, கோத்ரெஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜாம்ஷெட் என். கோத்ரெஜ், டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஜாம்ஷெட் ஜெ இரானி மற்றும் அவந்தா குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் கௌதம் தபார் ஆகியோர் இதன் இந்தியப் பிரதிநிதிகள் ஆவர்.)
ஆசியாவின் சிறந்த சமூகத் தலைவர்களுக்கான ராமன் மக்சேசே பரிசை 1957-ல் ராக்பெல்லர் அறக்கட்டளை நிறுவியது. தெற்காசிய நாடுகளில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான அமெரிக்காவின் திட்டமிட்ட தொடர் நடவடிக்கைகளில் அதன் அத்தியாவசிய கூட்டாளியாக இருந்த பிலிப்பைன்ஸ் அதிபர் ராமன் மக்சேசேயின் நினைவாக இவ்விருதுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. பரிணமிக்கும் புதிய தலைமைக்கான ராமன் மக்சேசே விருதை 2000 ஆண்டில் ஃபோர்டு அறக்கட்டளை நிறுவியது. மக்சேசே விருது என்பது இந்தியக் கலைஞர்கள், செயல் வீரர்கள், சமூகத் தொண்டர்கள் மத்தியில் பெருமைக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. எம்.எஸ். சுப்புலெட்சுமியும் சத்யஜித் ரேயும் இவ்விருதை வென்றனர். அதுபோலவே ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் மிகச் சிறந்த இந்திய இதழியலாளர்களில் ஒருவரான பி. சாய்நாத் ஆகியோரும் இவ்விருதுகளை வென்றிருக்கின்றனர். ஆனால், இந்த விருது இவர்களுக்குச் சேர்த்த பெருமையைவிட இவர்கள் இவ்விருதுக்குச் சேர்த்த பெருமையே அதிகம். பொதுவாக பார்க்குமிடத்து, எந்த விதமான செயல்முனைப்பு ‘ஏற்புடையது’ எது ‘ஏற்புடையதல்ல’ என்ற புரிதலை வழங்கும் ஒரு நாசூக்கான நடுவராகியிருக்கிறது இவ்விருது.
ஒரு வேடிக்கை என்னவென்றால்,  அண்ணா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் முன்னணித் தளபதிகளான அன்னா ஹசாரே, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கிரண் பேடி ஆகிய மூவருமே மக்சேசே விருது வென்றவர்கள். அரவிந்த் கெஜ்ரிவால் நடத்தும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் ஒன்று ஃபோர்டு அறக்கட்டளையில் இருந்து ஏராளமான நிதி பெறுகிறது. கிரண் பேடியின் தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்கு கொக்கோ-கோலா மற்றும் லேமன் பிரதர்ஸ் நிறுவனங்களால் நிதியளிக்கப்படுகிறது.

உலக மூலதனம் பாய்கின்ற பாதைகள் அனைத்திலும் மைய நரம்பு மண்டலத்தின் முடிச்சுக்கள் போல இந்த என்.ஜி.ஓக்கள் அமர்ந்திருக்கிறார்கள். செய்தி அனுப்புவோராக, சேகரிப்போராக, அதிர்வு தாங்கிகளாக, இப்பாதையில் ஏற்படும் ஒரு சிறிய துடிப்பைப் பற்றியும் எச்சரிப்பவராக, அதே சமயம் தமக்கு இடமளித்த நாடுகளின் அரசுகளுக்கு எரிச்சலூட்டக் கூடாது என்பதில் கவனம் நிறைந்தவர்களாக் என்.ஜி.ஓக்கள் பணி செய்கிறார்கள். (ஃபோர்டு அறக்கட்டளை மேற்படி செயல்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் பிரமாணப்பத்திரத்தில் நிதி பெறும் அமைப்புகளிடம் கையெழுத்து வாங்குகிறது.) இந்த என்.ஜி.ஓ-க்கள் தங்களது அறிக்கைகள், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் சேவை நடவடிக்கைகள் மூலமாக மென்மேலும் கடுமையாகி வரும் அரசுகளின் மென்மேலும் மூர்க்கமாகி வரும் உளவுத் துறையினரின் ஒட்டுக் கேட்கும் கருவிகளாக சில வேளைகளில் தெரிந்தும் சில வேளைகளில் தெரியாமலும் செயல்படுகிறார்கள். எந்த அளவுக்கு ஒரு பகுதி கலவரம் நிறைந்ததாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஏராளமான என்.ஜி.ஓ-க்கள் அதனை மொய்க்கிறார்கள்.
நர்மதா பள்ளத்தாக்கு பாதுகாப்புப் போராட்டம், கூடங்குளம் அணுவுலை எதிர்ப்புப் போராட்டம் போன்ற ஒரு உண்மையான மக்கள் இயக்கத்தின் மீது சேறடிப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட இந்த அரசோ, கார்ப்பரேட் செய்தி ஊடகங்களின் ஒரு பிரிவினரோ விரும்பும்போது, அவற்றை வெளிநாட்டில் இருந்து காசு வாங்கும் என்.ஜி.ஓ-க்கள் என்று நயவஞ்சகமான முறையில் அவதூறு செய்கிறார்கள். ஆனால், பெரும்பான்மையான என்.ஜி.ஓ-க்களுக்கு, அதிலும் குறிப்பாக ஏராளமான அன்னிய நிதி பெறும் என்.ஜி.ஓ-க்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடமை கார்ப்பரேட்டுகளின் உலகமயமாக்கத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே அன்றி தடுத்து நிறுத்துவதல்ல என்பது இவர்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
கார்ப்பரேட் அறக்கட்டளைகளின் பண மூட்டைகளால் ஆயுதபாணியாக்கப்பட்ட இந்த என்.ஜி.ஓ-க்கள் உலகின் மூலை முடுக்கெல்லாம் சிரமப்பட்டு ஊடுருவியிருக்கின்றனர். புரட்சியாளர்களாக உருவாகும் ஆற்றல் கொண்டவர்களை சம்பளம் வாங்கும் களப்பணியாளர்களாக மாற்றினர். கலைஞர்கள், அறிவுஜீவிகள், மற்றும் திரைத்துறைக் கலைஞர்களை நிதியால் வருடிக்கொடுத்து, முற்போக்கான கருத்துகள், விவாதங்களில் இருந்து திசை திருப்பினர். அடையாள அரசியல், மனித உரிமைகள் எனும் மொழியில் முன்வைக்கப்படும் பன்மைப் பண்பாட்டுவாதம், பெண்ணியம், சமூக (சாதி) முன்னேற்றம் போன்ற கருத்தாக்கங்களை நோக்கி அவர்களை அழைத்துச் சென்றனர்.

நன்றி - வினவு   April 4, 2014





தன்னார்வக் குழுக்கள்: வல்லரசுகளின் வல்லூறுகள்!

தன்னார்வக் குழுக்கள்: வல்லரசுகளின் வல்லூறுகள்!

களப்பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வக் குழுக்கள் போலல்ல ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், அவை தங்கள் அடையாளம், பணிகளை மறைத்துக் கொண்டு, அரசுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் சேவை செய்பவை, மிகவும் ஆபத்தானவை.

”டி.வி.எஸ். நிறுவனத்தில் ஒரு தொழிற்சங்கத்தை ஏற்படுத்த நான் பெரிதும் முயற்சி எடுத்தேன். அதன்படி நாங்களே ஐ.என்.டி.யு.சி. சங்கத்தை இங்கே நிறுவினோம்… எப்படியும் ஒரு தொழிற்சங்கம் உருவாகத்தானே போகிறது. அது நமக்கு விசுவாசமான சங்கமாக இருந்தால் நல்லதல்லவா” – இப்படிக் கேட்டார் ஓர் அமெரிக்க ஆராய்ச்சியாளரிடம் டி.வி.எஸ். முதலாளி. (ஆதாரம்: பிசினஸ்இந்தியா, மார்ச் – ஏப்ரல், 1986).
ngo-cartoon 
இதே கொள்கையின் அடிப்படையில் ஏகாதிபத்தியங்களால் தோற்றுவிக்கப்பட்டு எண்ணிக்கையில் அடங்காத அளவு இயங்கி வருகின்றவை தாம் தன்னார்வக் குழுக்கள்.
நாடு முழுவதும் ஆங்காங்கே சமூக சேவை உணர்வு ஊற்றெடுக்க அப்படியே அதிலிருந்து தோன்றியவை அல்ல இந்த அமைப்புகள். மாறாக உலக அளவில், மையப்படுத்தப்பட்ட முறையில் ஏகாதிபத்திய சிந்தனையாளர்களாலும், வல்லுநர்களாலும் நன்கு திட்டமிடப்பட்டு, பல ஆயிரம் கோடி டாலர் நிதி ஒதுக்கப்பட்டு கட்டமைக்கப்படும் வலைப்பின்னலின் சிறு சிறு அங்கங்கள் தாம் இந்த ”தன்னார்வக் குழுக்கள்”
எங்கெல்லாம் சுரண்டலும், ஒடுக்குமுறையும் அவலவாழ்வும் தலைவிரித்தாடுகிறதோ அங்கெல்லாம் அவற்றுக்கு எதிராக மக்கள் இயக்கங்களும் அமைப்புகளும், முற்போக்கு சிந்தனையுள்ள இளைஞர் எழுச்சிகளும் தோன்றும். அவை பாட்டாளிகளின் புரட்சி, தேசிய விடுதலை இயக்கங்களின் பால் ஈர்க்கப்படுவதும் இயல்பே. ஆனால் அவற்றை இடைமறித்து தம் பக்கம் ஈர்த்து, நிறுவனமயமாக்கிக் கொள்ளும் மாற்று மையங்களாகவே இந்த அரசு சாரா – தன்னார்வக் குழுக்கள் இயங்கி வருகின்றன.
அன்றாட வாழ்வில் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகளிலும் அதிருப்தி, ஆத்திரமடைந்துள்ள மக்களின் உணர்வுகளை நெறிப்படுத்தி, பதப்படுத்தி, அதிகாரபூர்வ, சட்டவரம்புக்குள் அவர்கள் செயல்பாடுகளை முடக்கி வைப்பதற்கு மாற்று அமைப்புக்களும், வழிமுறைகளும், சித்தாந்த விளக்கங்களும் ஏற்படுத்தித் தந்துகொண்டே இருக்க வேண்டும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகின் மிகப்பெரிய சுரண்டல் – ஒடுக்குமுறை ஏகாதிபத்தியமாக முன்னுக்கு வந்த அமெரிக்காவை ”உலகின் மிகப்பெரிய கொடை வள்ளல் நாடு” என்று பீற்றிக் கொண்டு, அதன் புதிய காலனிய ஆதிக்கத்தை மூடிமறைக்க இந்தத் தன்னார்வக் குழுக்கள் பெரிதும் பயன்பட்டன.
அன்றைய அமெரிக்க அதிபர் ட்ரூமன், ”உலகை சிவப்பு அபாயத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு” முன்வைத்த ”அமெரிக்க அமைதிப் பேரரசு” திட்டத்தில் மனித நேய நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்கள் முக்கிய இடம் பெற்றன. ஃபோர்டு அறக்கட்டளையோடு, கேர், வோர்ல்டு விஷன் போன்றவையும் சேர்ந்து ஆண்டுக்குப் பலநூறு கோடிடாலர்கள் இந்த ”சமூக சேவைக்காக” செலவிட்டன.
இவை நேரடியாகவும், பின்தங்கிய ஏழை நாடுகளின் கிராமப்புற வளர்ச்சி மற்றும் சமூக நல அமைச்சகங்களின் மூலமும் பல ஆயிரக்கணக்கான அரசு சாரா நிறுவனங்களை நிறுவி, நிதியுதவி செய்து, கண்காணித்து இயக்கின. 1960களில் உலகம் முழுவதும் உள்ள அரசுசாரா நிறுவனங்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்ட சர்வதேச தன்னார்வக் குழுக்களின் கவுன்சில் நிறுவப்பட்டது. இதனுடன் ஏகாதிபத்திய ஆய்வு நிறுவனங்களும், சிந்தனையாளர் குழுக்களும் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கின.
இப்போது அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்கள் இரண்டு மட்டங்களில் பணிபுரிகின்றன. ஒன்று நகர்ப்புறங்களிலும் கிராமப்  புறங்களிலும் நேரடியாக மக்களிடம் சென்று ”சமூக சேவைகள்” புரிவது; இன்னொன்று பிரதானமாக நகர்ப்புறங்களில் தமது தலைமையகங்களை நிறுவி, படித்த அறிவுஜீவிப் பிரிவினரிடையே சமூக பொருளாதார அரசியல், பண்பாட்டு ஆய்வுகளை – பயிற்சி, கருத்தரங்குகளை நடத்துவது.
காலனிய காலத்திலும் அதற்குப் பிறகு சிலகாலமும் மதப் பிரச்சாரத்துடன் இணைத்து கல்வி – வேலைவாய்ப்பு, சுகாதாரம் – சத்துணவு, கைத்தொழில்கள் என்று பல்வேறு இலவசத் திட்டங்களை நடத்துவதே தன்னார்வக் குழுக்களின் பிரதானப் பணிகளாக இருந்தன.
ஆனால் 1960களின் பிற்பகுதியில் இந்தத் தன்னார்வக் குழுக்களின் செயல்பாடுளுக்கு ”முற்றிலும் புதிய கோட்பாட்டு அடிப்படைகள்” வகுத்துத் தரப்பட்டன. இனி மேலும் தன்னார்வக் குழுக்கள் மக்களுக்கான ”இலவசத்திட்டங்கள்” மேற்கொள்ள வேண்டியதில்லை, அதற்கான அளவு வசதியும் கிடையாது. மக்கள் தமது கோரிக்கைகளுக்காகவும் உரிமைக்காகவும்” போராடும் வகையில் விழிப்புணர்வு பெறச் செய்வதும் அவர்களுக்கான செயற்பாட்டுக் குழுக்களை அமைப்பதும் தான் இனித் தன்னார்வக் குழுக்களின் பணியாக இருக்க வேண்டும் என்று உலக அளவில் முடிவு செய்யப்பட்டது.
பிரேசிலைச் சேர்ந்த பவுலோ பீரியனின் ”சுரண்டப்படுவோருக்கான கல்வியியல்”, பிலிப்பைன்சினுடைய பவுல் அபின்ஸ்கியின் ”அதிகாரத்தின் தத்துவம்” ”சிறியதே அழகு”, கிட் டியர்சின் ”விடுதலை இறையியல்” (சூமேக்கரின்) ஆப்பிரிக்காவில் ”கறுப்பின விழிப்புணர்வு இயக்கம்”, ஆசியாவில் புதிய காந்திய, புதிய புத்த மதக் கோட்பாடுகள் ஐரோப்பா, அமெரிக்காவில் ”புதிய இடதுகள்” ”இளைஞர் அரசியல் மற்றும் பசுமை இயக்கங்கள்” ஆகியன தன்னார்வக் குழுக்களின் வழிகாட்டும் கோட்பாடுகளாகின.
இக்கோட்பாடுகளின்படி மதப்பிரச்சார, மதமாற்ற முயற்சிகள் கைவிடப்பட்டு ”மக்கள் பங்கேற்பு அல்லது அடிமட்ட மக்கள் அமைப்புகள்” மூலம் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே தமது குறிக்கோள்கள் என்று அறிவித்துக் கொண்டன.
மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் – குறிப்பாக அமைப்பு ரீதியில் திரட்டப்படாத உழைப்பாளிகள், விவசாயிகள், தாழ்த்தப்பட்டவர்களிடையே போய் அவர்களது வாழ்வியல் – சமூக உரிமைகள், மனித உரிமைகள், சுற்றுச் சூழல் – பண்பாட்டுப் பதுகாப்பு இன்னும் இதுபோன்ற பிரச்சினைகளுக்காக போராடும் ”நடவடிக்கைக் குழுக்கள்” அமைக்கப்பட்டன.
”மக்களை அணிதிரட்டுவது”, ”அதிகாரம் பெறுதல்” ”ஒடுக்கப்படுவோரின் விடுதலை” என்று தீவிரச் சவடால்கள் அடித்த போதும் வர்க்கக அணுகுமுறை வர்க்கப் போராட்டம் வர்க்க சித்தாந்தத்தை (திட்டமிட்டு, உணர்வுபூர்வமாகவே) விலக்கி வைப்பதில் குறியாக உள்ளன, இத்தன்னார்வக் குழுக்கள். இத்தகைய நடவடிக்கைக் குழுக்களைத்தான் உண்மையான அடிமட்ட மக்கள் இயக்கங்கள் என்றும் ”புதிய சமூகப் புரட்சியின் முன்னோடிகள்” என்றும் ஆளும் வர்க்கப் பத்திரிக்கைகள் புகழ்கின்றன.
இவை ”வரலாற்றின் நிகழ்ச்சிப் போக்கில் உணர்வு பூர்வமாகத் தலையிடும் செயற்போக்கு” என்று தன்னார்வக் குழுக்களின் சித்தாந்தவாதிகள் கூறுகின்றனர் (கோத்தாரி). இவை ”மாற்று வளர்ச்சிக்கான முழுமைபெற்ற இயக்கமாக மலரும் சாத்தியக் கூறு உடையவை” என்கின்றார் (டி.எல்.சேத்).
இவையெல்லாம் காட்டுவது என்ன? மக்கள் தமது விடுதலை, உரிமைக்கான கோரிக்கைகளுக்காகப் போராடும் மையங்களாக, கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையிலான வர்க்க அமைப்புகளை மட்டுமே இனிமேலும் நம்பியிருக்க தேவையில்லை.
அவற்றுக்கு மாற்று மையங்களாக இதோ அரசு சாரா, கட்சிசாரா, வர்க்கம் – அரசியல் சாரா நிறுவனங்கள் இருக்கின்றன என ”மாற்றுக்களை” வைப்பதுதான். இதன் மூலம் பாலோடீரியர், பவுன் அலின்ஸ்கி, கிட்டியர்சி, சூமேக்கர் போன்றவர்களின் கோட்பாடுகளை முன்வைத்து, மார்க்சிய சொற்களைப் பிரயோகிப்பது, பல்வேறு மக்கள் பிரச்சினைகளைக் கையிலெடுப்பதால் இந்த அமைப்புகள் இடதுசாரித் தோற்றம் தருகின்றன.
இந்த அமைப்புகள் தமது களப்பணியிலும் கூட ஒருவித இரகசிய – சதிகார அணுகுமுறையைக் கையாள்வதால் அந்நிய உளவாளிகளும் நாச வேலைக்காரர்களும் ஊடுருவுவதற்கும், அதற்காக ஆட்களைத் தெரிவு செய்து கொள்வதற்கும் இவை பயன்படுகின்றன.
1960-களில் இருந்தே ஏகாதிபத்திய வல்லரசுகளின் புதிய காலனிய தேவைகளுக்காக மேற்கத்திய சமூகவியல், அரசியல், பண்பாட்டு சிந்தனையாளர்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆய்வுக் கழகங்கள் கீழை நாடுகளின் தமது சகபாடி நிறுவனங்களுடன் இணைந்து கம்யூனிய சித்தாந்தத்துக்கு எதிராக ”புரட்சிகர மாற்றுகளை” உருவாக்கும் பணியில் இறங்கினர்.
”இடது – வலது, முற்போக்கு – பிற்போக்கு என்கிற சித்தாந்த வேறுபாடுகள் அடிப்படையில் தீர்வுகள் முன் வைக்கப்படுவது இனிமேலும் அவசியமில்லை என்பதை முன் வைக்கும் ”சித்தாந்தத்தின் முடிவு” முதலிய கருத்தாக்கங்கள் பிரச்சாரம் செய்யப்பட்டன. பிரான்சிஸ் புக்குயோமாவின் ”வரலாற்றின் முடிவு” என்கிற கோட்பாடு பிறகு வந்தது.
வர்க்கம், வர்க்கப் போராட்டம் மற்றும் வர்க்க சித்தாந்தக் காலகட்டம் இனிமேலும் சாத்தியமில்லை, காலாவதியாகிவிட்டது என்று ஏகாதிபத்திய சித்தாந்தவாதிகள் பிரச்சாரம் செய்தனர். இவர்கள் ”ஸ்டாலினிசம்”, ”மரபுவழி மார்க்சிசம்” என்பதாகக் கற்பனை செய்து கொண்ட தத்துவத்தையும் போலிக் கம்யூனிஸ்டுகளின் சமரச செயல்பாடுகளையும் முன்னிறுத்தி  மார்க்சிய – லெனினிய சித்தாந்தத்தின் மீதே அவதூறு பரப்பினர்.
புறநிலை யதார்த்தத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை முன்னிறுத்தி மார்க்சிய லெனினியத்தைச் செழுமைப்படுத்துவதாகப் புளுகினர்; மார்க்சிய – லெனினியக் கோட்பாடுகள் ஐரோப்பிய முதலாளத்துவத்தை மட்டுமே ஆய்வுக்கெடுத்துக் கொண்டது என்றும் தாம் மண்ணுக்கேற்ற மார்க்சியம் படைப்பதாகவும் சொல்லி அதைப் பகுதியாகவோ, முழுமையாகவோ நிராகரிக்கும்படி தூண்டினர்.
தாமும் மார்க்சியப் புரட்சியாளர்கள் என்று சொல்லிக் கொண்டு கீழை மார்க்சியம் – மேலை மார்க்சியம், இளைய மார்க்ஸ் – முதிய மார்க்ஸ், ஐரோப்பிய கம்யூனிசம், அந்நியமாதல், இருத்தலியல், நவீனத்துவம், அமைப்பியல் வாதம், புதிய இடது சிந்தனைகள் போன்ற பல பிறழ்வுக் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் பரப்பினர். இதற்காக சார்த்தர், கிராம்சி, மார்க்யூஸ், அல்தூஸ்யர், கெம்யூ, பிராங்ஃபர்ட் சிந்தனையாளர்கள் போன்ற வகுப்பறை ”மார்க்சியக் கோட்பாட்டாளர்”களின் படைப்புகளைக் கடத்தி வந்தார்கள்.
இவர்களின் நோக்கமெல்லாம் ஒன்றுதான். மார்க்சிய – லெனினியம், வர்க்கம், வர்க்கப் போராட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக வர்க்க சமரசத்தையும் பல்வேறு வகை திரிபுகளையும் முன்வைத்து மார்க்கிய லெனினியத்தின் மீதும், புரட்சிகர அமைப்புகளின் மீதும், பாட்டாளி வர்க்க இயக்கத்தின் மீதும் பரந்துபட்ட மக்களை நம்பிக்கை இழக்கச் செய்வதே, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது உண்மையில் கட்சியின் தனிநபரின் சர்வாதிகாரம், எல்லாவற்றையும் உற்பத்தி பொருளாதாரம், வர்க்கம் என்று குறுக்கிச் சுருக்கிப் பேசும் வறட்டுத்தனம் என்று முத்திரை குத்தி கொச்சைப்படுத்தி அதை நிராகரிக்கத் தூண்டுவதே.
இந்திய அரசு சாரா நிறுவனங்களின் சித்தாந்த குரு ரஜினி கோத்தாரி, மார்க்சியம் – தொழிலாளி வர்க்க சித்தாந்தம் வழக்கிழந்து விட்டது என்று வாதம் புரிந்து வந்தார். ”உலகத் தொழிலாளி வர்க்கம் ஒன்றுபடுவதற்கு பதில் சர்வதேச நடுத்தர வர்க்கமே தனது விடுதலையைப் பற்றிய உணர்வுகளைக் கொண்டதாக மாறிவருகிறது” என்று இவர் பிரகடனம் செய்தார்.
இவரும் பிற அரசு சாரா நிறுவன சித்தாந்திகளும் அப்போது வாதிட்டது என்னவென்றால் கம்யூனிசக் கட்சியால் தலைமை தாங்கப்படும் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்குப் பதிலாக உணர்வூட்டப்பட்ட நடுத்தர வர்க்கத் தொழில் முறைத் தலைவர்களால் கட்சிசாரா அரசியல் நிகழ்ச்சிப் போக்கில் மக்கள் திரளால் வழிநடத்தப்படும் இயக்கம் கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதுதான்.
டவடிக்கைக் குழுக்களை உருவாக்கி, இயக்கும் அடிமட்டக் களப்பணியிலுள்ள அரசுசாரா நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்கள் வேண்டுமானால் ஊடுருவல், உளவு, சதி, நாசவேலை, மக்கள் இயக்கங்களை சீர்குலைவு செய்வது போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படலாம். அத்தகைய அமைப்புகளை அம்பலப்படுத்துவதும் எதிர்ப்பதும் சரிதான்.”
”ஆனால் சி.டி.ஆர்.ஏ., ஐ.எஸ்.ஐ., ஐ.டி.யாஸ், மிட்ஸ், சாமிநாதன் ஃபவுண்டேசன் போன்ற ஆவணப் பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான அரை அரசு சார் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்கள், அந்நிய நிதியுதவி பெற்ற பல்கலைக் கழக அரங்கங்கள் அப்படிப்பட்டவை அல்ல. விவரங்களை சேகரிக்கவும் ஆய்வுகளை நடத்தவும் முற்போக்கு இயக்கத்தவரும் பயன்படுத்தலாம்” என்று அவற்றுடன் தொடர்புடைய பலரும் நியாயம் கற்பிக்கின்றனர்.
களப்பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வக்குழுக்கள் நேரடியாக மக்கள் முன் வேலை செய்வதால் இன்றோ நாளையோ அம்பலப்பட்டுப் போவது சாத்தியம். ஆனால் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் அடையாளம், பணிகளை மறைத்துக் கொண்டு, அரசுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் சேவை செய்பவை, மிகவும் ஆபத்தானவை.
அரசு சாரா தன்னார்வக் குழுக்களின் பணிகளை மதிப்பீடு செய்து கண்காணிப்பது; பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுப் போக்குகளைப் பற்றிய விவரங்கள் சேகரித்து, ஆய்வு செய்து அறிக்கைகள் சமர்ப்பிப்பது, அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்குத் திட்டப் பணிகளைப் பரிந்துரை செயவது போன்ற வேலைகளை இந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் செய்கின்றன.
உதாரணமாக, இந்தியாவிலுள்ள பல ஆயிரக்கணக்கான நெல் மூலக்கூறு (ஜீன்ஸ்)களைக் கடத்திக் கொண்டு போய் ஏகாதிபத்திய பன்னாட்டு விதை, உரம், பூச்சி மருந்து, இரசாயன ஊக்கி உற்பத்தித் தொழில்கள் புரியும் பன்னாட்டு தேசங்கடந்த தொழில் நிறுவனங்களுக்கு விற்பது முதல் நாட்டுப்புற கலை – இலக்கிய மரபுகளைக் கொள்ளையிடுவது வரை சாமிநாதன் ஃபவுண்டேசன் செய்கிறது.
இதேபோல மொழி, மரபுகள், தொற்று நோய்கள் பரவுதல், சிறுவர் – கொத்தடிமை உழைப்பு போன்ற பல ஆராய்ச்சிகளும் ஏகாதிபத்திய பன்னாட்டு தேசங்கடந்த தொழிற்கழகங்களுக்குப் பயன்படுகின்றன. இவையெல்லாம் எப்படி அவற்றின் தொழில்களுக்கும் அரசியல் பொருளாதாரத் திட்டமிடுதலுக்கும், இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராக எப்படிப் பயன்படுகின்றன என்பது நேரடியாகத் தெரிவதில்லை.
குறிப்பாக, ஏகாதிபத்திய உலகமயமாக்கம், மறுகாலனியாக்கம் என்ற கொள்கையின் கீழ் தாராளமயமாக்கம், தனியார்மயமாக்கம் ஆகிய கட்டுமான மறு சீரமைப்புத் திட்டத்தில் இத்தகைய நிறுவனங்கள் மேலும் புதிய தகுதிகளைப் பெற்றுள்ளன.
ngo-cartoonகட்டுமான மறுசீரமைப்புத திட்டங்களால் உலகின் பல நாடுகளில் பஞ்சம் – பசி – பட்டினிச் சாவுகள், ஆலைகள் மூடி வேலை இழப்பு – வேலையில்லாத் திண்டாட்டம் பன்மடங்கு பெருகி பரந்துபட்ட மக்கள் ஆத்திரமும் கோபமும் கொண்டுள்ள இந்தச் சமயத்தில் அவர்கள் போராட்டத்தில் கிளர்ந்தெழுவதை திசை திருப்புவதற்கு  அரசு சாரா நிறுவனங்கள் முக்கியக் கருவிகளாகப் பயன்படுகின்றன.
80 நாடுகளின் அரசு சாரா நிறுவனங்களுக்குப் பல ஆயிரம் கோடி நிதியுதவி செய்து, ”பசி, உலக வறுமையின் அடிப்படைக் காரணங்கள் குறித்து விவாதங்கள் புரியவும், ஒரு பொதுத்துறை தனியார் வளர்ச்சி உதவித் திட்டத்துக்கான தொகுதியை விரிவுப்பத்தவும், உறுதியூட்டவும்,இந்த வளர்ச்சித் திட்டக் கல்வியில் ஈடுபடும் நிறுவனங்களின் வலைப்பின்னலை வளர்க்கவும் அமெரிக்க சர்வதேச வளர்ச்சிக்கான நிறுவனம் பணியாற்றியது. (வளர்ச்சிக்கான வழிகாட்டும் கல்வித்திட்ட உதவிகள், 1987 பொருளியல் ஆண்டு அறிக்கை)
கட்டுமான மறு சீரமைப்புத் திட்டத்தில் அரசுகளின் பங்கு – பாத்திரங்களை வெட்டிவிட்டு அதற்கு மாற்றாக ”சமூகப் பங்கேற்பு” ”அடிமட்டத் திட்டமிடுதல்” ”வளர்ச்சியில் பங்குதார்கள்” என்ற பெயரில் அரசு சாரா நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. சமூக நலப்பணிகளுக்கு இனியும் அரசு அதிகாரபூர்வ சட்டபூர்வ அமைப்புகள் பொறுப்பல்ல; அவை மக்களின் சொந்தப் பொறுப்புதான் என சுமையை – பழியை மக்கள் மீதே மாற்றுவதுதான் இதன் நோக்கம்.
அவை மாற்றுப் பொருளாதாரத்திட்ட உருவரைகள் – வரவு செலவுத் திட்டங்கள், மாற்றுப் பொருளாதார உச்சி மாநாடுகள் நடத்துகின்றன. ஐ.எம்.எஃப் – உலக வங்கி ஆகியவை இணைந்து நடத்தும் ஆண்டுக் கூட்டங்களுக்குப் ”போட்டி”க் கூட்டங்கள் நடத்துகின்றன. சூழலுக்குத் தகுந்த பாரிய மதிப்புகளின் அடிப்படையிலான மாற்றுப் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து நீடித்து நிற்கும் வாய்ப்புடைய வளர்ச்சி திட்டங்கள் மூலம் கட்டுமான மறுசீரமைப்பு, உலகமயமாக்குதலை எதிர்ப்பதாக நாடகமாடுகின்றன.
ஆனால் இந்த அரசு சாரா நிறுவனங்கள் இயங்குவதற்கே கூட அதே ஏகாதிபத்திய நிறுவனங்கள் தாம் நிதியுதவி செய்கின்றன. அதனால்தான், இந்த அரசு சாரா நிறுவனங்கள் இயங்கும் எல்லா நாடுகளிலும் அரசியல் – பொருளாதார நெருக்கடிகள் மேலும் மேலும் முற்றி மீளமுடியாத கட்டத்தை எட்டிய போதும், இந்த நாடுகளில் அரசியல் வாழ்வில் பண்பாட்டுச் சீரழிவும், கிரிமினல் மயமாவதும், இலஞ்ச ஊழலும் தலைவிரித்தாடிய போதும், அந்தந்த நாட்டு அரசுகளைத் தகர்ப்பது, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது பற்றி இந்த அரசு சாரா நிறுவனங்கள் தப்பித் தவறி மேலெழுந்த வாரியாகக் கூட மூச்சு விடுவதே கிடையாது.
”மதபோதனையோ, மத மாற்றமோ கண்காணிப்பும் கிடையாது. ஏராளமான ஆய்வு வசதிகளும், நிதியும் கணிசமான ஆள்பலமும் உள்ள அரசு சாரா – தன்னார்வக் குழுக்களை ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது, திறந்த மனதுடன் இருக்கும் தங்களிடம் ஒரு உரையாடலை ஏன் நடத்தக் கூடாது” என்று புரட்சி சக்திகளுக்கு இந்தக்குழுக்கள் தூண்டில் வீசுகின்றன. நடுத்தர வர்க்க ஊசலாட்ட நபர்கள் ஓடிப் போய் அந்தத் தூண்டிலைக் கவ்விக் கொள்கின்றனர்.
புரட்சிகர அறிவுஜீவிகளைக் கூட நிரந்தர உரையாடலில் நிறுத்தி வைப்பதுதான் அக்குழுக்களின் நோக்கம். புரட்சியின் மீதும் கட்சியின் மீதும் ஐயவாதத்தை விதைத்து செயலிழக்க வைப்பதுதான் அவற்றின் இலக்கு.
இறுதியாக, அவை அரசு சாரா நிறுவனங்கள் என்று தான் சொல்லிக் கொள்கின்றனவே தவிர அரசு எதிர்ப்பு நிறுவனங்கள் அல்ல என்கிற ஒரு உண்மையே போதும், – அவை மண் குதிரைகள் தாம் என்பதைப் புரிந்து கொள்வதற்கு!

நன்றி - புதிய கலாச்சாரம், மே 1997



ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம் - பாகம் 1


ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம் - பாகம் 1


அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊட்டி வளர்த்துள்ள அரசுசாரா நிறுவனங்களின், குடிமை சமூகங்களின் கூட்டணிதான் ஆம் ஆத்மி கட்சி, லோக்சத்தா கட்சி, இன்னபிற அமைப்புகள்.
ரசியலையும் வரலாற்றையும் ஆழமாகப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு ஆம் ஆத்மி கட்சியின் திடீர்த் தோற்றமும் தேர்தல் வெற்றியும் அதிசயக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் பின்னணியைப் புரிந்து கொள்ளாத பல அரசியல் விமர்சகர்கள் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டிலும் என்.டி.ஆர். ஆந்திரத்திலும் திடீரென்று அரசியல் கட்சிகளைத் தொடங்கி, குறுகிய காலத்திலேயே – 16 மாதங்களிலேயே – ஆட்சியைப் பிடித்ததை ஆம் ஆத்மி கட்சியின் “சாதனை”யோடு ஒப்பிடுகிறார்கள்.

ஆனால், பலரும் காணத் தவறிய, ஒரு உண்மை உண்டு. ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசு கட்சியும் அந்நிய சக்திகளின் தூண்டுதலினால், ஒரே காரணத்தால், ஒரே வகையான வரலாற்றுப் பின்னணியில் தோற்றமெடுத்தவை என்பது மறுக்க முடியாது. இந்திய தேசியக் காங்கிரசுக் கட்சி 1885-ம் ஆண்டு டிசம்பரில், ஆங்கிலேயக் காலனிய ஆட்சியில் விவசாயம் மற்றும் வருவாய்த்துறை செயலராக இருந்த ஆலன் ஆக்டேவியன் ஹுயூம் என்ற வெள்ளை அதிகாரியின் முயற்சியால் உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராகக் குமுறிக்கொண்டிருந்த இந்திய மக்கள் கொந்தளிப்பில் இருப்பதாக, உளவுத்துறையின் ஏழு தொகுப்பு இரகசிய அறிக்கைகள் ஹுயூமிடம் கையளிக்கப்பட்டு, அதைக் காப்பதற்கான வடிகாலாகத்தான் இந்திய தேசியக் காங்கிரசுக் கட்சியை ஆங்கிலேயர்கள் தோற்றுவித்தார்கள் என்பது இப்போது பலரும் ஏற்றுக் கொள்ளும் வரலாற்று உண்மை.

இப்போது இந்திய மக்கள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் கொந்தளித்து வெடிப்பதற்கான தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஓட்டுக் கட்சிகள், அரசியல்வாதிகள் மீது மட்டுமல்ல; செயலிழந்துவரும் அரசு, அதிகரித்துவரும் சட்டமீறல்கள், கொள்கைகளின் இடத்தில் வெறும் கவர்ச்சித் திட்டங்கள், அரசியல் கிரிமினல்மயமாதல், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல், போலீசு அராஜகங்கள், நீதித்துறை ஊழல்கள், அதிகரித்துவரும் விதவிதமான கிரிமினல் குற்றங்கள், சமூகப் பாதுகாப்பின்மை என்று மொத்த அரசமைப்பும், சமூகமும் பாரதூரமான நெருக்கடியில் சிக்கி நொறுங்கிச் சரிந்து வருகின்றது என்பதுடன், பலவிதமான முயற்சிகளுக்குப் பின்னரும் அதனை முட்டுக் கொடுத்து நிறுத்த முடியவில்லை.
இந்த நிலையில்தான் அமெரிக்காவின் ஃபோர்டு ஃபவுண்டேசன் நிறுவனத்தின் நிதியளிப்பில் இயங்கி வரும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களை நடத்தும் அரவிந்த் கேஜரிவால், மனிஷ் சிசோதியா, யோகேந்திர யாதவ் முதலானவர்கள் ஆம் ஆத்மி கட்சியை 2012-ம் ஆண்டு தோற்றுவித்தார்கள். பின்னாளில் நாடுமுழுவதும் உள்ள இலட்சக்கணக்காண அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் – இப்போது அவர்கள் குடிமைச் சமூகம் என்று தமக்குப் பெயர் சூட்டிக் கொண்டுள்ளனர் – இந்தக் கட்சியில் இணைந்துக் கொண்டுள்ளன.

இந்த விவரம் பலருக்கும் தெரிந்திருந்தாலும் ஆம் ஆத்மி கட்சியின் பூர்வீகம், அடிப்படை, நோக்கம், எதிர்கால இலட்சியம் போன்றவை அவர்களுக்குத் தெரியா. அரசியல் கட்சிகள் தமது அரசியல் நோக்கத்துக்காகவும் ஆதாயத்துக்காகவும் எதிராளிகள் மீது “அந்நிய (குறிப்பாக அமெரிக்க) நிதி உதவி பெறும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பு-சதி” என்ற குற்றச்சாட்டைப் பயன்படுத்தி வருகின்றன. அது ஒருபுறமிருக்க, உலகமயமாக்கமும் மறுகாலனியாதிக்கமும் ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்பட்டதில் இருந்து நமது நாட்டின் அரசியல் அமைப்பில் அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் பங்கேற்பு அதிகாரபூர்வமாகவே அதிகரித்து வந்திருக்கிறது.

மறுகாலனியாக்க கொள்கைகள் அமலாகத் தொடங்கிய காலம் முதல், மாவட்ட, வட்ட ஆட்சியர் அலுவலகங்களின் மக்கள் நலப்பணிகள் திட்டமிடுதல்களில், அமலாக்கங்களில் அரசுசாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டன. அந்த மட்டங்களில் இருந்து பிரதமர், அமைச்சகங்களுக்கு ஆலோசனைகள் வழங்குவது வரை அவற்றுக்கு அரசுடன் கலந்துறவாட இடமளிக்கப்பட்டது. அரசு அமைப்பில் உயரதிகாரிகளாக இருந்து கொண்டே, அந்நிய, குறிப்பாக அமெரிக்க நிதி உதவி பெறும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களைத் தலைமை தாங்கி நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டனர். அவற்றுக்கு அரசே நிதியளிக்கவும் செய்தது.

இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்? ஏகாதிபத்திய உலகமயமாக்கம் திணித்த புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கை, அரசியல் கட்டுமானச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாகத்தான் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. “இனி நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக, மருத்துவம்-சுகாதாரம், கல்வி-பண்பாடு உட்பட அனைத்துத் துறைகளிலும் சட்ட திட்டங்கள் எதுவானாலும், அரசின் முறைசார்ந்த அமைப்புகள் மட்டும் தீர்மானிப்பதாகவும் செயல்படுத்துவதாகவும் இருக்கக் கூடாது. அப்படியான சட்ட திட்டங்கள் மக்களுக்கு ஏற்புடையவைதானா என்று அறியவும் அல்லது மாற்றுக்களைப் பரிந்துரைக்கவும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய குடிமைச் சமூக அமைப்புகளும் சேர்ந்துதான் தீர்மானிக்க வேண்டும்” என்பது கடந்த 25 ஆண்டுகளாக இந்திய அரசு – அது எதுவானாலும் – அமலாக்கிவரும் புதிய பொருளாதார, புதிய கட்டுமானச் சீரமைப்பின் முக்கியமான கூறு ஆகும். அரசின் முறைசார்ந்த அமைப்புகளான தேர்தல் அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கத்தினர் முதலானவர்களின் இலஞ்ச-ஊழல், அதிகார முறைகேடுகள், கிரிமினல் குற்றச்செயல்கள் காரணமாக அவற்றின்மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பு, அவநம்பிக்கை ஆகியவை இதற்குச் சாதகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இது, மேற்பார்வைக்கு மிகவும் ஜனநாயகபூர்வமானதாகத் தோன்றும். இதைத்தான் ‘அடிமட்ட/ வேர்வரையிலான ஜனநாயகம் (grassroot democracy); மக்களுக்கு அதிகாரத்தைக் கொண்டு சேர்ப்பது (Empowerment of people)’ என்கிறார்கள். இது உண்மையில் ஒரு மாபெரும் சதி/தந்திரம். அரசுத்துறை, பொதுத்துறைத் தொழில்கள், நிறுவனங்கள் திறமையான நிர்வாகம், முன்முயற்சி, அக்கறை, பொறுப்பு இல்லாததால்தான் நட்டமடைந்து, நலிந்துபோய்விட்டன; அவற்றைத் தனியாரிடம் ஒப்படைத்தால் அவர்களின் திறமையான நிர்வாகம், முன்முயற்சி, அக்கறை, பொறுப்பு காரணமாக தொழிலும் பொருளாதாரமும் செழித்து வளரும் என்று சொல்லித்தான் அவற்றை கார்ப்பரேட் தரகு முதலாளிகள் கைப்பற்றிக் கொண்டு, பொதுச்சொத்தைச் சூறையாடினர்.
அதேசமயம், அரசின் முறைசார்ந்த அமைப்புகளின் மிக முக்கிய அங்கமாகவும் ஊழலின் ஊற்றுக் கண்ணாகவும் இருக்கும் அதிகார வர்க்கத்தைக் கட்டுமானச் சீரமைப்பு ஒழிப்பதில்லை. மாறாக, அதற்கு மேலும் அதிகாரம் கொடுக்கச் சொல்லுகிறது. ஓய்வுபெற்ற அதிகார வர்க்க நபர்கள் ஒழுங்குமுறை ஆணையங்கள், சிறப்பு ஆலோசகர்கள், நிபுணர் குழுக்கள் என்ற பெயரில் சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்துக்கு மேல் நிறுத்தப்படுகிறார்கள். மேலும், பல முன்னாள் அரசு அதிகார வர்க்கத்தினர் தரகு முதலாளிகளின், பன்னாட்டுத் தொழிற்கழகங்களின் கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளாகவும், ஆலோசகர்களாகவும் பதவியளிக்கப்படுகிறார்கள். இவ்வாறு ஓய்வுபெற்ற பிறகும் அரசுக்குள்ளும் வெளியிலும் இருந்து கார்ப்பரேட் தரகு முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்தியப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஊழியம் செய்து, எல்லா இலஞ்ச-ஊழல், அதிகார முறைகேடுகளுக்குமான ஊடகமாகச்செயல்படுகிறார்கள். தூய்மையான அரசு நிர்வாகத்துக்காகப் ‘மாபெரும்’ போராட்டங்கள் நடத்தும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களும் அவற்றை உள்ளடக்கிய குடிமைச் சமூக அமைப்புகளும் இதைக் கண்டுகொள்வதில்லை. காரணம், மேட்டுக்குடி வர்க்க சகோதர பாசம்தான்.
இலஞ்ச-ஊழல், அதிகார முறைகேடுகளுக்கு எதிராகத் தூய்மையான அரசு நிர்வாகத்துக்காகப் ‘மாபெரும்’ போராட்டங்கள் நடத்தும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களையும் அவற்றை உள்ளடக்கிய குடிமைச் சமூக அமைப்புகளையும் நடத்திவரும் அதே நபர்கள்தாம், நாட்டின் தற்போதைய எல்லா அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கேடுகளுக்கும் காரணமாகவுள்ள புதிய பொருளாதார, புதிய கட்டுமானச் சீரமைப்புக் கொள்கைகளை அரசுக்குள்ளும் வெளியிலும் இருந்து வகுத்து அமலாக்குகிறார்கள்.

மத்திய, மாநில அரசுகளின் அரசியல், பொருளாதாரம், சமூக, மருத்துவம்-சுகாதாரம், கல்வி-பண்பாடு உட்பட அனைத்து அரசுத் துறைகளிலும் “கொள்கை” முடிவெடுக்கவும் “திட்டங்கள்” வகுக்கவும் பொறுப்பேற்கும் மந்திரிகளில் ஏறக்குறைய எவருக்குமே அந்தத் “தகுதி” கிடையாது என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்தக் காலியிடத்தை நிரப்புவதுடன், இந்த உண்மையை இப்போது அப்பட்டமாகவே ஒப்புக்கொள்ளும் வகையில் உருவாகியிருக்கின்றன, சிந்தனைக் குழாம்கள் (“திங்க் டாங்க்ஸ்”) என்ற ஏற்பாடுகள். அதாவது, ஆலோசனை வியாபாரிகள். ஒரு சிந்தனைக் குழாம் (அல்லது ஒரு கொள்கை வகுப்புக் கழகம், ஆய்வுக் கழகம் மற்றும் பிற) என்பது சமூகக் கொள்கைகள், அரசியல் போர்த்தந்திரம், பொருளாதாரம், இராணுவம், தொழில்நுட்பம், பண்பாடு முதலான துறைகளில் ஆய்வுகளையும் பரிந்துரைகளையும் செய்யும் ஒரு அமைப்பாகும். அரசுக்கும், தொழிலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் தேவையான ஆய்வுகளும், ஆலோசனைகளும் கட்டணம் பெற்றுக்கொண்டு வழங்கும் சேவை நிறுவனங்கள்.
ரக்-ஷக் ஃபவுண்டேசன், விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேசன், இந்தியன் கவுன்சில் ஆன் குளோபல் ரிலேஷன்ஸ் போன்றவை இந்தியாவிலுள்ள சிந்தனைக் குழாம்களில் சில. மொத்தம் 269 சிந்தனைக் குழாம்களைக் கொண்டுள்ள நமது நாடு, அவற்றின் எண்ணிக்கையில் உலகிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்திய அரசின் அயலுறவுத்துறை, போலீசு, இராணுவத்துறை, பல்கலைக்கழகக் கல்வி, உணவு பதனிடும் திட்டங்கள், வேலைவாய்ப்புத் திட்டங்கள், சட்டச் சீர்திருத்தங்கள், தொழிலுறவு, அரசு நிர்வாகச் சீர்திருத்தங்கள், அவற்றைக் கணினிமயமாக்கம்-நவீனமயமாக்கம் செய்தல் – இப்படிப் பன்முகப் பணிகளில் இந்தச் சிந்தனைக் குழாம்கள் ஈடுபடுகின்றன.

இந்தப் பன்முகப் பணிகளில் சிந்தனைக் குழாம்கள் எப்போதும் தனித்துச் செயல்படுவதில்லை. சிந்தனைக் குழாம்களும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய குடிமை சமூக அமைப்புகளும் சேர்ந்துதான் செயல்படுகின்றன. சிந்தனைக் குழாம்களுக்குத் தேவையான கள ஆய்வுகள் செய்வது, தகவல்களைத் திரட்டித் தருவது, அவை பரிந்துரைக்கும் கொள்கை களையும், திட்டங்களையும் அரசை ஏற்கச் செய்யும், அழுத்தம்கொடுக்கும் இயக்கங்களைக் கட்டமைப்பது, அவற்றின் அமலாக்கத்தில் பங்கேற்பது மற்றும் அந்த அடிப்படையிலான அரசின் சட்ட திட்டங்கள் மக்களுக்கு ஏற்புடையவைதானா, இல்லையென்றால் மாற்றுக்களைப் பரிந்துரைப்பது என்று பலவாறு அரசுசாரா தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய குடிமைச் சமூக அமைப்புகளும் சேர்ந்துதான் இயங்குகின்றன.
சிந்தனைக் குழாம்கள் மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய குடிமைச் சமூக அமைப்புகள் பற்றி இங்கே, இதுவரை சொல்லப்பட்டிருப்பவை எதுவும் ஆதாரமற்ற, கற்பனையான கோட்பாடுகள் அல்ல. அவை ஆதாரபூர்வமானவைதாம். “சிந்தனைக் குழாம்கள் -குடிமைச் சமூகங்கள் நிறுவனங்களின் திட்டம்” (TTCSP)என்ற இணையத்தளத்தில் பின்வரும் செய்தி கூறப்பட்டிருக்கிறது:

“உலகம் முழுவதுமுள்ள அரசாங்கங்கள் மற்றும் குடிமைச் சமூகங்கள் மீது கொள்கை நிறுவனங்கள் எவ்வாறு பங்காற்றுகின்றன என்பது பற்றி அமெரிக்கப் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் திட்டத்தின் கீழ் ‘சிந்தனைக் குழாம்கள்-குடிமைச் சமூகங்கள் நிறுவனங்களின் திட்டம்’ (TTCSP) ஆய்வுகள் நடத்துகிறது. அமெரிக்காவின் ஃபிலடெல்பியாவில் உள்ள அயலுறவுக் கொள்கை ஆய்வகத்தில் 1989-ம் ஆண்டு ‘சிந்தனைக் குழாம்கள்-குடிமைச் சமூகங்கள் நிறுவனங்களின் திட்டம்’ (TTCSP) அமைக்கப்பட்டது; அது, 2008-ம் ஆண்டு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் திட்டத்துக்கு மாற்றப்பட்டது. பெரும்பாலும் சிந்தனைக் குழாம்கள் (திங்க் டாங்க்ஸ்) என்று சொல்லப்படும் Kசிந்தனைக் குழாம்கள்-குடிமை சமூகங்கள் நிறுவனங்களின் திட்டம் (TTCSP)” பொதுத் துறைகளின் கொள்கை ஆய்வு அமைப்புகளுடைய பரிணாம வளர்ச்சி மற்றும் பங்கு பாத்திரத்தைப் பரிசீலிக்கின்றது. சர்வதேச அமைதி-பாதுகாப்பு, உலகமயமாக்கம்-ஆட்சி நிர்வாகம், சர்வதேசப் பெருமாதாரங்கள், சுற்றுச்சூழல், சமூகம் – தகவல், வறுமைக்குறைப்பு மற்றும் சுகாதாரம் போன்றவற்றின் பாரிய கொள்கைத் தளங்களுக்கும் திட்டங்கள்-கொள்கைளுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்பி ஒரு உலக முன்முயற்சிக்கான அடித்தளமிடுவதைக் கடந்த 20 ஆண்டுகளாக சிந்தனைக் குழாம்களும் மற்றும் குடிமை சமூகங்கள் நிறுவனங்களின் திட்டம் (TTCSP) கட்டமைத்து வருகிறது. இந்தச் சர்வதேசக் கூட்டுறவு முயற்சி பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான கொள்கை நிறுவனங்கள் மற்றும் சமூகங்கள் அடங்கிய ஒரு வலைப்பின்னலை நிறுவும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது; அந்த வலைப்பின்னல் உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக நிறுவனங்கள், சமூகங்களின் கொள்கை உருவாக்கத்தை முன்னேற்றி அவற்றுக்கிடையிலான உறவுகளைப் பலப்படுத்தும்”.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஏழாண்டுகள் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு, இந்தியாவின் பொருளாதார, சமூக, அரசியல் சுதந்திரத்துக்காக இரண்டாவது விடுதலை இயக்கம் நடத்தப் போவதாகக் கூறிக்கொண்டு 1997-ல் நாடு திரும்பினார், குஜராத்தைச் சேர்ந்த பார்த்தா ஜெ. ஷா. அவர் இப்போது தில்லியில் “குடிமைச் சமூகங்கள் மையம்” என்ற பெயரில் ஒரு சிந்தனைக் குழாமை நடத்தி வருகிறார். அது இந்திய மற்றும் குஜராத் அரசுகளுக்காக பல துறைகளில் பணியாற்றுகிறது. அது, பென்சில்வேனியா பல்கலைக்கழகச் சிந்தனைக் குழாம்கள்-குடிமை சமூகங்கள் நிறுவனங்களின் திட்டம் (TTCSP) 2012-ம் ஆண்டு மதிப்பீட்டின்படி உலகிலேயே 55-வது இடத்தில் இருக்கிறது. இப்படிப் பல பார்த்தா ஜெ.ஷாக்கள் அமெரிக்கா மற்றும் மேலைநாடுகளில் இருந்து கடந்த 10, 15 ஆண்டுளில் இந்தியா வந்திறங்கினார்கள்.

அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளடங்கிய குடிமைச் சமூகங்கள் நேரடியாக அரசியலில் ஈடுபட வேண்டுமா, கூடாதா என்பது குறித்து 2000 -ம் ஆண்டில் இருந்தே சிந்தனைக்குழாம்களின் மத்தியில் விவாதங்களும் ஆய்வுகளும் நடந்து வந்தன. இந்த விவாதங்கள், ஆய்வுகளில் பிறந்தவைதாம் ஆந்திராவில் லோக்சத்தா கட்சியும், தில்லியில் ஆம் ஆத்மி கட்சியும். பலரும் எண்ணுவதைப்போல அன்னா ஹசாரே தலைமையிலான Kஊழல் எதிர்ப்பு இந்தியா” இயக்கம் பிளவுபட்டு அரவிந்த் கேஜரிவால் கும்பல் திடீரென்று உருவாக்கியதல்ல, ஆம் ஆத்மி கட்சி.

நன்றி - புதிய ஜனநாயகம் – மே 2014






Monday, January 5, 2015


விலை, எடை... நிறுவனங்களின் உத்தி!

 
கிட்டத்தட்ட நமது கண்ணை மறைக்கும் சாதனையை செய்து வருகின்றன நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள். நுகர் வோராக நீங்கள் இந்த வித்தியா சத்தை உணர்ந்திருக்கக்கூடும். அதை உணராதவர்கள் இதை படித்த பிறகு இன்னும் எச்சரிக்கையாக இருக்கலாமே?
நாம் வழக்கமாகப் பயன்படுத்தும், சோப், பற்பசை, ஷாம்பு மற்றும் தினசரி பயன்படுத்தும் இதர பொருட்களின் விலையை ஏற்றிவிட்டால் என்ன செய்வோம். அந்தப் பொருளை பயன் படுத்துவதை விட்டுவிடுவோம். அல்லது அந்த பொருளுக்கு நிகரான தரத்தோடு குறைந்த விலையில் வேறு நிறுவனப் பொருளை பயன்படுத்த தொடங்குவோம். பிராண்டை மாற்ற முடியாத அளவுக்கு பழகிவிட்டோம் என்றால் மட்டுமே அந்த பொருளைத் தொடர்ந்து வாங்குவோம். 

பொருளுக்கான விலையை ஏற்றும் உத்தி என்பது நிறுவனங்கள் கடைபிடிக்கும் உத்திகளில் ஒன்று. இது அவர்களின் உரிமை. பொருளுக்கான தயாரிப்பு செலவுக்கு ஏற்ப விலையைத் தீர்மானிக்க சட்டம் அவர்களுக்கு இந்த உரிமையை கொடுத்துள்ளது. ஆனால் இந்த உத்தியால் வாடிக்கையாளர்களை இழக்கும் அபாயமும் நிறுவனங்களுக்கு இருக்கிறது. இந்த அபாயத்தைச் சந்திக்க தயாராக இல்லாத நிறுவனங்கள் குறுக்கு வழியில் கண்டுபிடித்த உத்திதான் விலையை ஏற்றாமல், அளவு அல்லது எடையைக் குறைக்கும் உத்தி. 

இந்த எடைக்குறைப்பை அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. பளிச்சென்று எந்த வித்தியாசமும் தெரியாது. நீங்கள் உன்னிப்பாகக் கவனித்தால் மட்டுமே இதைக் கண்டு பிடிக்க முடியும். எந்த அறிவிப்பும் இல்லாமல் இப்படிச் செய்வது வாடிக்கை யாளர்களை ஏமாற்றும் உத்தி ஆகிவிடாதா? இது குறித்து ஒரு நிறுவனத்தின் விற்பனை மேலதிகாரியிடம் கேட்டோம்.
``எடை குறைப்பு செய்வதால் வாடிக்கையாளரை நாங்கள் ஏமாற்று வதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அந்த பொருளின் எடை, அளவு அதற் கான விலை போன்ற விவரங்களை வழக்கம் போல பொருளின் பேக்கிங்கில் தெளிவாக அச்சடித்துதான் தருகிறோம். வாடிக்கையாளர்கள் அதைப் பார்த்து விட்டுத்தான் வாங்குகின்றனர். 

பொருளும் தேவை, விலையும் வாங்குவதுபோல இருக்க வேண்டும் இதுதான் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விஷயம். எடை கொஞ்சம் குறைந்தாலும் பராவாயில்லை என்பதுதான் மக்கள் எண்ணம். அவர்களை ஏமாற்றும் எண்ணம் எங்களுக்கு அறவே இல்லை’’ என்றார். நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் இந்த விஷயம் குறித்து என்ன நினைக்கின்றன என்பதற்காக அவர்களையும் தொடர்பு கொண்டோம். 

கலப்படப் பொருட்கள் மற்றும் தரமற்ற பொருட்களால் ஏமாறும் மக்களை முன்னணி நிறுவனங்களும் தங்கள் பங்குக்கு இதுபோன்று எடை குறைப்பு செய்து ஏமாற்றுகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. இது போன்ற எடை குறைப்பு சமாசாரங்களை மக்கள் கண்டுகொள்வதில்லை என்று நிறுவனங்கள் நம்புகின்றன. மூலப் பொருட்களின் விலை ஏறுவதும், போக்குவரத்து மற்றும் விநியோக செலவுகள் அதிகரிப்பதும் நிறுவனங்களுக்கு விலை ஏற்ற வேண்டிய கட்டாயத்தை உருவாக்குகிறது என்றால் அதை மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை நிறுவனங்களுக்கு இருக்கிறது. 

தவிர முன் அறிவிப்பு இல்லாமல் எடை குறைப்பதற்கு சட்டமும் அனுமதிக்கிறது. முன்பு 25 கிராம் 50 கிராம் என்று ரவுண்டாகத்தான் எடை இருக்க வேண்டும் என்று இருந்த சட்ட விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. 7 கிராம், 14கிராம், 48 கிராம் என பேக்கிங் செய்து கொள்வதற்கு ஏற்ப சட்டமும் சாதகமாக உள்ளது. இதை பேக்கிங்கில் அச்சடித்தால் போதும் என்பதுதான் நிலைமை. எனவே நுகர்வோர் கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டியிருக்கிறது என்கின்றனர்.
சில பிராண்டு பொருட்களில் எடை குறைத்தது மட்டுமல்ல, விலையையும் அதிகரித்து விட்டனர். உதாரணமாக ஒரு முன்னணி பிராண்ட் சோப் முன்பு 100 கிராம் இருந்தது என்றால் இப்போது 90 கிராம்தான் உள்ளது. விலையையும் உயர்த்தி உள்ளனர். வழக்கமாக வாங்கும் பொருள், பழக்கப்பட்ட பிராண்ட் என்கிற நம்பிக்கையில்தான் அந்த பொருட்கள் நுகர்வோரை ஈர்க்கிறது. 

சோப்பு, ஷாம்பு, எண்ணெய் போன்ற தினசரி பயன்படுத்தும் பொருட்களில் குறிப்பிட்ட பிராண்டுக்கு பழகிவிட்டால் மாறுவதற்கு மனசு இருப்பதில்லை. விலை ஏறினாலும் அதே பொருட்களைத்தான் விரும்புகின்றனர் நுகர்வோர்கள்.
அவர்களின் கேள்வி இதுதான். சலுகை என்றால் டமாரம் அடிப்பதும், எடை குறைப்பை வெளியில் சொல்லாமல் கமுக்கமாக செய்வதும் ஏன்? நுகர்வோர்கள் விழிப்போடு இருப்பது ஒன்றுதான் இதற்கு ஒரே வழி. 

எப்படி கண்டுபிடிப்பது?
வழக்கமாக 100 கிராம் சோப் என்று நினைத்து வாங்குவோம். 90 கிராம்தான் இருக்கும். 50 கிராம் பேஸ்ட் என்று நம்பி வாங்கினால் 40 கிராம்தான் பேக் செய்யப்பட்டிருக்கும். அதற்குத்தான் விலை குறிப்பிட்டிருப்பார்கள். இதற்கு முன்பு 100 கிராமும், 50 கிராமும் என்ன விலையில் விற்பனை ஆனதோ அதே விலையில் தற்போது 40 கிராமும், 90 கிராமும் விற்பனை செய்யப்படுகிறது.
சோப்பு, பேஸ்ட், டீ தூள், பிஸ்கட் முதல் மசாலா பொருட்கள் வரை அனைத்திலும் இந்த வகையிலான எடை குறைப்பு வித்தை சத்தமில்லாமல் நடந்து வருகிறது. இதில் நிறுவன பேதமே கிடையாது. பெரும்பாலும் அனைத்து நிறுவனங்களுமே இந்த உத்தியைக் கடைபிடிக்கின்றன. 

ஏமாற்றும் உத்தியா?
விலை ஏற்றினால் வாடிக்கையாளரை இழக்கலாம் என நினைக்கும் நிறுவனங்கள் இந்த உத்தியை நேரடியாக நுகர்வோரிடத்தில் சொல்லலாமே என்கிற கேள்வி எழுகிறது. 50 காசு விலை குறைத்தால் பல லட்சம் செலவு செய்து விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் இந்த விஷயத்தை மட்டும் ஏன் இருட்டடிப்பு செய்கின்றன. 

இருக்கும்... ஆனா இருக்காது...
விலையும் ஏற்றக்கூடாது, லாபமும் குறையக்கூடாது, தரத்திலும் சறுக்கக் கூடாது, வாடிக்கையாளர்களையும் இழக்கக்கூடாது என்கிற பலமுனை யோசனைகளிலிருந்து நிறுவனங்கள் இந்த உத்தியை கடைப் பிடிக்கின்றன. பிஸ்கட்டின் வழக்கமான அளவை விட சற்று சிறிய சைஸ் ஆக இருக்கிறது என்று தோன்றுகிறதா... இதுதான் அந்த இருக்கும்... ஆனா இருக்காது...
நிறுவனங்கள் குறுக்கு வழியில் கண்டுபிடித்த உத்திதான் விலையை ஏற்றாமல், அளவு அல்லது எடையைக் குறைக்கும் உத்தி. 

நன்றி : தி இந்து 05.01.2015

இவை அனைத்துமே பன்னாட்டுக் கம்பெனிகளின் திட்டங்களே.
நம் கையில் காசை நமக்கே தெரியாமல் உருவும் உத்தி.

 அந்நிய முதலீடுகள் இந்திய நிறுவனங்களில் 

இது அந்நியம் அல்ல..!

இவை இந்தியக் கம்பெனிகள்தான் ஆனால் இதன் பெரும்பாலான பங்குகள் அந்நிய நிறுவனங்களிடம்தான் இருக்கின்றன.

இவை சாம்பிள்தான்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ்  (05.01.2015)

Friday, January 2, 2015

அடையாள அட்டை திட்டம்.

அடையாள அட்டை திட்டம்.


இந்த  உலகம் எவர்களுடைய கைகளில் இருக்கிறதோ அவர்கள் உலக மக்கள் அனைவரையும் கண்காணிக்க, கொண்டு வந்து கொண்டிருக்கிற திட்டம்தான் அடையாள அட்டை திட்டம்.
நம் நாட்டில் இதற்குப் பெயர் ஆதார் அடையாள அட்டை.
ஒரு மனிதன்இந்த நாட்டில் வாழ வேண்டுமென்றால் அவனுக்கு அவசியம் தேவை ஆதார் அட்டை என்கிற இந்த திட்டம் காங்கிரஸ், பா.ஜ.க வை சார்ந்தது இல்லை. பின்னணியில் பாஸ்கர் ஐயா அடையாளம் காட்டும் ஆசாமிகள்தான் இருக்கிறார்கள்.

வருங்காலத்தில் இந்த அட்டை அவர்களுக்கு எப்படி உபயோகமாகப் போகிறது என்பதை கற்பனையில் வடிவமைத்து இணைய உலகில் பரவ விட்டிருக்கிறார்கள் சிலர். இது ரசிக்க மட்டும் அல்ல. கவலை கொள்ளவும் வைக்கிறது.

அந்தப் பதிவு இதோ -

ஆதார் அட்டை பிற்காலத்தில் எந்த மாதிரியான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று வாட்ஸ் அப்பில் ஒரு ஜோக் வேகமாக பகிரப்பட்டுக்கொண்டிருக்கிறது. அது இங்கே...
2020 ஆம் வருடத்தில் இருந்து ஒரு காட்சி..

(போன் மணி அடிக்கிறது ) 
ஆப்பரேட்டர்: ஹலோ.. பிஸ்ஸா ஹட்..
கஸ்டமர்: என்னோட ஆர்டரை எடுத்துக்குறீங்களா ப்ளீஸ்..?

ஆப்பரேட்டர்: முதல்ல உங்க ஆதார் கார்டு நம்பரை சொல்றீங்களா சார்..?

கஸ்டமர் :ஒரே நிமிஷம்.. என்னோட ஆதார் கார்டு நம்பர் 889861356102049998-45-54610

ஆப்பரேட்டர்: ஸோ.. நீங்கதான் மிஸ்டர் சிங்.. நம்பர் 17 மல்லிகை தெரு, காந்தி நகர்ல இருந்து கூப்புடுறீங்க.. உங்க வீட்டு நம்பர் 40942366, ஆஃபீஸ் நம்பர் 76452302 மொபைல் நம்பர் 0142662566. இப்ப நீங்க உங்க மொபைல்ல இருந்து எங்களுக்கு கால் பண்ணி இருக்கீங்க..

கஸ்டமர் : வாவ்.. இத்தனை நம்பரையும் எப்புடி சார் புடிச்சீங்க..? 
ஆப்பரேட்டர்: நாங்க மெயின் சிஸ்டத்தோட கனெக்ட்டடா இருக்கோம் சார்..

கஸ்டமர்: வெல்.. எனக்கு ஒரு இறால் பிஸ்ஸா ஆர்டர் எடுத்துக்க முடியுமா..?

ஆப்பரேட்டர்: என்னைக் கேட்டா அது வேணாம்னுதான் சொல்லுவேன் சார்..

கஸ்டமர்: வாட்..? எதுக்குங்க..?

ஆப்பரேட்டர்: உங்க மெடிக்கல் ரெக்கார்ட்ஸ்படி உங்களுக்கு ஹை பிபி இருக்கு.. அதுவுமில்லாம உங்களோட கொலஸ்ட்ரால் லெவலும் அதிகமா இருக்கு..

கஸ்டமர்: வாட்..? அப்ப நான் என்னதான்ய்யா சாப்புடுறது..?

ஆப்பரேட்டர்: எங்களோட லோ ஃபேட் ஹெக்கியன் மீ பிஸ்ஸாவை ட்ரை பண்ணிப் பாருங்க.. அது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..

கஸ்டமர்: எனக்கு புடிக்கும்னு உங்களுக்கு எப்புடிப்பா தெரியும்..?

ஆப்பரேட்டர்: போன வாரம் நேஷனல் லைப்ரரில இருந்து பாப்புலர் ஹெக்கியன் உணவுகள்ன்ற புத்தகத்தை நீங்க எடுத்திருக்கீங்க சார்..

கஸ்டமர்: மை காட்.. போதும்ய்யா.. அப்பன்னா நீங்க சொன்னதையே மூணு பிஸ்ஸா ஃபேமிலி சைஸ்ல குடுத்துருங்க..

ஆப்பரேட்டர்: நிச்சயமா சார்.. பத்து பேரு கொண்ட உங்களோட குடும்பத்துக்கு அது நிச்சயமா போதுமானதா இருக்கும்.. பில் அமௌண்ட் 2450 ரூபா சார்..

கஸ்டமர்: என் கார்டுலயே நான் பே பண்ணிறலாமா..?

ஆப்பரேட்டர்: இல்ல சார்.. நீங்க கேஷாத்தான் தர வேண்டி இருக்கும். உங்க கிரெடிட் கார்டு லெவலை நீங்க க்ராஸ் பண்ணிட்டீங்க. அது மட்டும் இல்லாம போன அக்டோபர்ல இருந்து 1,51,748 ரூபா க்ரெடிட் கார்டு பாக்கி வச்சிருக்கீங்க.. அதுல நீங்க கட்டாம விட்ட உங்க ஹவுசிங் லோனை நான் சேக்கலை..

கஸ்டமர்: சரி. அப்பன்னா உங்காளு வர்றதுக்குள்ள நான் பக்கத்துல இருக்குற ஏடிஎம்முக்கு போயி கேஷ் எடுத்து வச்சுர்றேன்..

ஆப்பரேட்டர்: அதுவும் முடியாது சார்.. இந்த ரெக்கார்டுபடி உங்க ஏடிஎம் ஓவர்டிராஃப்பட்ட லெவலையும் நீங்க தாண்டிட்டீங்க..

கஸ்டமர: ப்ச்.. நான் எப்புடியாவது கேஷ் ரெடி பண்ணி வச்சுர்றேன்.. நீங்க பிஸ்ஸாவை அனுப்புங்க.. எவ்வளவு நேரத்துல வரும்..?

ஆப்பரேட்டர்: 45 நிமிஷம் ஆகும்.. அவ்வளவு நேரம் வெய்ட் பண்ண முடியாதுன்னா உங்கக பைக்ல வந்து நீங்களே கூட வாங்கிட்டு போயிறலாம் சார்..

கஸ்டமர்: வாட்..?

ஆப்பரேட்டர்: எங்க சிஸ்டத்துல இருக்குற தகவல்படி உங்ககிட்ட ஒரு பைக் இருக்கு. அதோட நம்பர் 1122 சார்..

கஸ்டமர் : ?? (இந்த படுபாவிக என் பைக் நம்பரை கூட தெரிஞ்சு வச்சிருக்கானுகளே..)

ஆப்பரேட்டர்: வேற எதாவது வேணுமா சார்..?

கஸ்டமர் : ஒண்ணும் வேணாம்ப்பா.. நீங்க விளம்பரத்துல சொன்னா மாதிரி அந்த மூணு ஃப்ரீ கோக் பாட்டிலையும் சேத்து அனுப்பிருவீங்கள்ல..?

ஆப்பரேட்டர்: நார்மலா குடுப்போம் சார்.. ஆனா உங்க மெடிக்கல் ரெக்கார்டுப்படி உங்களுக்கு சுகர் இருக்கு.. அதனால உங்க ஹெல்த்தை மனசுல வச்சு நாங்க அந்த ஆஃபரை உங்களுக்கு தரமுடியாது. சாரி சார்..

கஸ்டமர் : ***%&$%%### You $##$%%@!))) (உங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை ரீப்ளேஸ் செய்து கொள்க)

ஆப்பரேட்டர்: சார்.. வார்த்தைகளை கவனமா பேசுங்க சார்.. இப்புடிதான் ஒரு போலீஸ்காரரை கெட்ட வார்த்தைல திட்டினதுக்காக 2012 மார்ச்ல உங்களுக்கு ரெண்டு மாச சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் கிடைச்சதுங்குறதை மறந்துறாதீங்க..

கஸ்டமர் : (மயக்கம் போட்டு விழுகிறார்)

படித்துப் பாரக்கும்போது இது வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் ஆதார் அட்டை வினியோகிக்கும் அரசின் உள் நோக்கம் இதுதான்.


இவ்வாறு முடிகிறது அந்த பகிர்வு!
நன்றி : ஒன் இந்தியா , தி இந்து

கபளீகரம்

கபளீகரம்

கடந்த சில வருடங்களாக மந்தமாக இருந்த நிறுவனங்கள் கையகப்படுத்துதல் நடவடிக்கை கடந்த வாரத்தில் சூடு பிடித்தது. கடந்த வாரத்தில் மட்டும் ஆறுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைக்கப்பட்டன.
ரீடெய்ல்
மும்பையை சேர்ந்த பியூச்சர் கன்ஸ்யூமர் என்டர்பிரைஸஸ் நிறுவனம், பெங்களூருவை மையமாக கொண்டு செயல்படும் நீல்கிரிஸ் நிறுவனத்தை வாங்கியது. 300 கோடி ரூபாய் கொடுத்து நீல்கிரிஸை வாங்கியது பியூச்சர் குழுமம்.
வங்கி
ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை கோடக் மஹிந்திரா வங்கி வாங்கியது. 1000 ஐஎன்ஜி வைஸ்யா பங்குக்கு 725 கோடக் பங்கு கிடைக்கும். இதன் மூலம் நான்காவது பெரிய தனியார் வங்கியாக கோடக் மாறும். இதன் மதிப்பு 15033 கோடி ரூபாய்.
தகவல் தொழில்நுட்பம்
டெக் மஹிந்திரா நிறுவனம் அமெரிக்காவின் லைட்பிரிட்ஜ் கம்யூனிகேஷன்ஸ் (எல்சிசி) நிறுவனத்தை வாங்கியது. இந்த மதிப்பு ரூ.1486 கோடி, எல்சிசி நிறுவனத்துக்கு 8.5 கோடி டாலர் கடன் இருக்கிறது. எல்சிசி நிறுவனத்துக்கு 5 கண்டங்களில் 5700 பணியாளர்கள் இருக்கிறார்கள்.
மின்சாரம்
ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி நிறுவனம் ஜெய்பிரகாஷ் பவர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் 2 நீர் மின் நிலையங்களை வாங்கியது. இதற்காக ரூ.9,700 கோடி செலவிட்டது. ரிலையன்ஸ் பவர் இந்த நிறுவனத்தை வாங்குவதாக இருந்தத திட்டத்தை கைவிட்ட பிறகு ஜே.எஸ்.டபிள்யூ வாங்கியது.

நன்றி : தி இந்து (தமிழ்) 02.12.2014

மருத்துவ உலகம் கார்பரேட் கம்பெனிகளின் கையில்



மருத்துவ உலகம் முழுக்க முழுக்க உலகை ஆண்டு கொண்டிருக்கிற கார்பரேட் கம்பெனிகளின் கையில்தான் உள்ளது. அதைத்தான் ஹீலர் பாஸ்கர் ஐயாவும் தனது "உலக அரசியல்" என்ற தனது உரையில் விளக்குகிறார்.

இவர்களை எதிர்ப்பவர்களை ஏதாவது ஒரு வகையில் அவர்களை கிரிமினல்கள், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், தவறான நடத்தை உள்ளவர்கள் என்று முத்திரை குத்தி உலகை நம்ப வைப்பார்கள்.

இதோ இன்னொரு ஆதாரம் : பிஹாரின் எம்.பி பப்பு யாதவ் கிரிமினல் குற்றம்  சாட்டப்பட்டவர். அவரின் பேட்டியை படியுங்கள். இது தி இந்து பத்திரிகையில் 11.12.2014 அன்று வெளியாகியுள்ளது.

பிஹாரில், கிரிமினல் அரசியல்வாதிகள் என குறிப்பிடப்படுபவர்களில் ராஜீவ் ரஞ்சன் யாதவ் எனப்படும் பப்பு யாதவுக்கு முதன்மையான இடமுண்டு. சுயேச்சை மற்றும் வெவ்வேறு கட்சிகள் சார்பில் நான்கு முறை எம்.பி.யாக இருந்தவர். தற்போது ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் மதேபுரா தொகுதி எம்.பி.யாக உள்ளார்.
‘பிஹாரில் மருத்துவர்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். தேவையற்ற மருத்துவப் பரிசோதனைகளை எழுதிக் கொடுத்தும், தேவைக்கு அதிக மாக மருந்துகளை எழுதிக் கொடுத்தும் மக்களிடமிருந்து கொள்ளையடிக் கின்றனர்’ எனக் குற்றம்சாட்டும் இவர், தனது தொகுதியில் மருத்துவர்கள் குறைந்தபட்ச கட்டணம்தான் வசூலிக்க வேண்டும் என ‘மிரட்டி’ வைத்தி ருக்கிறார்.
மருத்துவர்கள் ’பணத்துக்காக உயிர்களை கொல்பவர்கள்’, ‘மனித சதைகளை உண்ணும் பேய்கள்’ என கடுமையாக விமர்சிக்கும் பப்பு மீது இந்திய மருத்துவர் சங்கம், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனிடம் புகார் அளித்துள்ளது.
இந்நிலையில், ‘தி இந்து’ சார்பில் அவரிடம் பேசியதிலிருந்து

திடீரென மருத்துவர்களுக்கு எதிரான போராட்டம் ஏன்?
1990-ல் பிஹார் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து மருத்து வர்கள் அதிகபட்ச கட்டணத்தைக் குறைத்துக் கொள்ள வலியுறுத்தி வருகிறேன்.
1994-ல் ஒருமுறை மருத்துவர்களுடன் எனக்கு நேரடி மோதல் ஏற்பட்டது. அப்போது மருத்துவர்கள் அதிக மருந்துகள், தேவையற்ற மருத்துவப் பரிசோதனைகளுக்கு பரிந்துரைப்பதை எனது தொகுதியில் குறைத்தனர். எனது சொந்தக் காரணங்களினால் ஏற்பட்ட அரசியல் இடைவெளியில் (அப்போது கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருந்தார்) மருத்துவர்கள் மீண்டும் அதிக கட்டணம் வசூலிக்கத் தொடங்கினர். 

நீங்கள் அரசிடம் வைக்கும் கோரிக்கை என்ன?
நம் நாட்டில் 45 சதவிகித மருத்துவர்கள் தவறான முறையில் செயல்பட்டு வருகிறார்கள்.
நர்சிங் ஹோம்களுக்கான சட்டத்தை இன்று வரை அமல்படுத்த முடியவில்லை. மருத்துவர்கள் செய்யும் முறைகேடுகள் பலவும் ஊடகங்களில் ஆதாரங்களுடன் அடிக்கடி வெளி யாகியும் அரசால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. மருத்துவர்களில் பலரும் வரம்புமீறி ஆலோசனைக் கட்டணம் வாங்குகின்றனர்.
மருத்துவர்களை கண்காணிக்க அரசு ஆணையம் அமைக்கப்பட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் குணப் படுத்த முடியாத ஒரு வியாதி தனியார் மருத்துவமனையில் குணப்படுத்தப்படுவது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். 

கிரிமினல் அரசியல்வாதிகளில் ஒருவர் எனக் கருதப்படும் நீங்கள் சட்டவிரோதமாக மருத்துவர்களை மிரட்டுவது சரியா?
(உடன் கோபமானவர் அதை கட்டுப்படுத்த சில நிமிடங்கள் மௌனமானார்) நாட்டை சூறையாடு பவர்களை தட்டிக் கேட்டு, ஊழல் அரசியல்வாதிகளை எதிர்த்தால் கிரிமினல் என்கிறார்கள்.
மருத்துவர்கள் எவ்வளவு முறை கேடாக சம்பாதிக்கிறார்களோ அவ்வளவு பணத்தை எனது சிறுவயது முதல் மக்களுக்கு உதவியாக அளிக்கிறேன். பிஹார் அரசியல்வாதிகள் மக்கள் பணத்தை எவ்வளவு கொள்ளை அடிக்கிறார்களோ அந்த அளவுக்கு மக்களுக்கு தனி ஒருவனாக அள்ளித் தரும் நான் கிரிமினலா.
மருத்துவம் என்ற பெயரில் பாலியல் குற்றங்கள் செய்யும் மருத்துவர்கள் கிரிமினலா அல்லது மக்களுக்காக தொடர்ந்து தடியடிகள் பெறும் நான் கிரிமினலா? 

நீங்கள் சார்ந்துள்ள ராஷ்ட்ரீரிய ஜனதா தளம் உங்களுக்கு ஆதரவு அளிக்கிறதா?
இந்த விஷயத்தில் கட்சி எனக்கு ஆதரவளிப்பதில்லை என்றாலும், லாலுவின் தார்மீக ஒத்துழைப்பு எனக்கு கிடைக்கிறது. ஒரு பாமர மனிதனுக்கான மகிழ்ச்சி மற்றும் சுயமரியாதைக்கான போராட்டத்தை யார் சொன்னாலும் கைவிட மாட்டேன். 

உங்கள் கோரிக்கைக்கு மற்ற அரசியல் கட்சிகளின் ஆதரவு உள்ளதா?
பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் பெரும் பணக் காரர்களின் தரகர்கள். ஊழலை எதிர்த்து போராடுவதாகக் கூறும் ஆம் ஆத்மி கட்சியினரும் மருத்துவர்கள் பிரச்சினையில் அமைதி காக்கின்றனர்.
இந்த பிரச்சினையில் பிஹாரை சரி செய்து விட்டு, வேற்று மாநிலங் களுக்கும் போராட வருவேன். இந்தப் பிரச்சினைக்காக தமிழகத்தின் அமைப்புகள் என்னை குரல் கொடுக்க அழைத்தால் அங்கும் வந்து போராடத் தயாராக இருக்கிறேன். 

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ்

உலக அரசியல் - ஒரு தொடர் பார்வை



 

உலக அரசியல் - ஒரு தொடர் பார்வை

ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்கள் ஏப்ரல் 1, 2014 அன்று உலக அரசியல் என்ற தலைப்பில் தான் பேசிய ஒரு உரையை அல்ல பேருரையை வெளியிட்டார். (பார்க்க: http://anatomictherapy.org/tworld-poltics.php )

அதில் அதிர வைக்கும் பல உண்மைகளை வெளியிட்டார். இந்த உலகின் பெரும்பாலான ஆட்சி, அதிகாரங்கள் இப்பொழுது யார் கையில் இருக்கிறது என்ற விஷயத்தை புட்டு புட்டு அந்த உரையில் வைத்தார்.

அவர் சொல்கிறார் :

“நாமெல்லாம் சுதந்திர நாட்டின் அடிமைகளாக இ௫க்கிறோம். நம்மை இப்படி அடிமைப்படுத்தி வைத்தி௫ப்பவா்களை அடையாளம் கண்டு முகத்திரையைக் கிழிக்க வேண்டாமா?



வியாபாரம் செய்ய வந்தவா்கள் பொ௫ளை விற்று நம் சுதந்திரத்தை வாங்கிக் கொண்டார்கள். அவா்கள் யாரென்று தெரியாமலேயே நாம் அவா்களிடம் அடிமைபட்டு இ௫க்கிறோம். இந்த நிலை மாற வேண்டாமா?
ஜாதி, இனம், மொழி, மதம், தேசம் என்று நம்மைப் பிரித்து சூழ்ச்சியால் நம்மை முட்டாளாக்கிக் கொண்டு இ௫ப்பவா்களை அடையாளம் காணவேண்டாமா?


.
நீங்களும் உங்கள் சந்ததிகளும் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் அதன் முழுபலனும் உங்களுக்கு இல்லை. உங்களுக்கு எதுவும் சொந்தமாக போவதில்லை. பின் யா௫க்காக உழைக்கிறீா்கள்? சிந்தியுங்கள்

750 கோடி உலக மக்களின் நலனில் அக்கறை கொள்வோம்
.


உலக மக்களின் நன்மைக்காக நம் கரங்களை ஒன்றினணப்போம். நன்மையை எங்கும் பரவச் செய்வோம். தீமையை இல்லாமல் செய்வோம்.
அறியாமை விலங்கினை உடைத்து தெளிவு பெறுவோம்.”




அவரின் இந்த முழு உரையயும் (10 பாகங்கள்) கேட்டு உள்வாங்கிக் கொண்ட பிறகு அவர் சொன்னது மாதிரியே டி.வி, பேப்பர், மீடியாவில் வரும் எல்லா செய்திகளும் புதிய பார்வையில் தெரிகிறது.

அப்படி அவ்வப்போது கிடைக்கும் தகவல்களை, ஆதாரங்களை இனி இங்கே பதிக்கிறேன்.