Sunday, November 27, 2016

அரசாங்கத்தை திட்டாதீர்


அரசாங்கத்தை திட்டாதீர்
ஆட்சியாளர்களை ஏசாதீர் 
 
‘நடப்பவை எல்லாம் அவன் செயல்’. இல்லையில்லை ‘அவர்கள்’ செயல்.
யார் அவர்கள்? அவர்கள் என்ன செய்கிறார்கள்?
 
ஆட்டுவிப்போர் அவர்கள். ஆடுகிறவர்கள் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள்.
இந்த பரந்த பூமியில் பெரும்பாலான தேசங்களை அவர்கள்தான் ஆளுகிறார்கள் - மறைமுகமாக.
 
ஒரு நாட்டின் ஆட்சியாளர்களை அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். ஒரு தலைவனை உருவாக்குவதும், உயர்த்துவதும், அழிப்பதும் அவர்களே.
 
புதிய பொருளாதாரக் கொள்கை,, தாராளமயமாக்கல் என்ற பெயர்களில் உள்நாட்டு கனிம வளங்களைச் சுரண்டி தங்கள் நாடுகளுக்கு எடுத்துக் கொண்டு போவார்கள். 

நம் பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்து நமக்கே 40 மடங்காக விலை உயர்த்தி நம்மிடமே, நம் ஆட்களைக் கொண்டே விற்பார்கள்.
காலை எழுந்ததும் எடுக்கும் பற்பசை முதல் படுக்கப் போகும்போது ‘ஆன்’ செய்யும் கொசுவர்த்தித் திரவம் வரை அத்தனையும் அவர்களின் தயாரிப்புக்களே. 

அவர்களை நிராகரித்து மனித குலம் வாழ முடியாத மாய வலைக்குள் நம்மை வீழ்த்தி இருப்பதும் அவர்களே.
 
மனிதர்கள் சிந்தனையை மழுங்கடிக்கும் போதை வஸ்துக்கள், தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவை கொண்டு நம் சிந்தனையை அடிமைப்படுத்தி வைத்திருப்பதும் அவர்களே.
பண்டைய சமூகத்தின் ஆணிவேர்களாக விளங்கிய பாரம்பரிய கல்வி முறையை ஒழித்து மெக்காலே என்னும் கல்வித் திட்டத்தையும்,
நம்முடைய கலாச்சாரத்தை அடியோடு மாற்றி மேற்கத்திய கலாச்சாரத்தையும் சிந்தனையையும், 
நம் மரபு வகை மருத்துவத்தைப் பின் தள்ளி கொள்ளையடிக்கும் ஆங்கில மருத்துவத்தையும்  
தொன்று தொட்டு செய்து வந்த நம் வேளாண்மையை பசுமைப் புரட்சி என்னும் பெயரில் நஞ்சு கலந்த விவசாயமாகவும்,
மாற்றி, மறக்கடித்து, தங்களை மேலானவர்களாகக் காட்டி நம்ப வைத்து நம்மை மன அளவிலும், உடல் அளவிலும் அவர்களின் அடிமைகளாக வாழ வைத்துக் கொண்டிருப்பவர்களும் அவர்களே.
 
வெறும் காகிதங்களுக்கு பணம் என்ற மதிப்புக் கொடுக்க வைத்து நம்மை அதன் அடிமைகளாக்கி வைத்திருப்பதும், திடுமென அதை நிராகரித்து இன்றைக்கு மக்களை அலைய விட்டுகொண்டிருப்பதும் அவர்களே.
 
எல்லா அரசாங்கங்களும், கட்சிகளும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவையே. எல்லா வங்கிகளும் அவர்களால் நடத்தப்படுபவையே.
 
எல்லா பன்னாட்டு நிறுவனங்களும் அவர்களுக்கு சொந்தமானதே. அதன் பெரும்பங்குகள் அவர்கள் கைகளில்தான் இருக்கின்றன.
 
மனிதர்களைக் கட்டுப்படுத்த சட்டங்கள், அந்த சட்டங்களை உருவாக்கவும், கண்காணிக்கவும் அரசாங்கம், அந்த அரசைக் கட்டுப்படுத்த உலக வங்கி, ஐ.நா.சபை, உலக வர்த்தக ஒப்பந்தம் போன்றவை. இவற்றை நிர்வாகிப்பது இவர்களே.
 
எல்லா செய்தி நிறுவனங்களும் இவர்களால் நடத்தப்படுபவையே (BBC, CNN, RAITER). உள்ளூர் மற்றும் உள் நாட்டு செய்தி ஊடகங்களும் அவர்களை அண்டிப் பிழைப்பவையே. 

இந்த ஊடகங்களைக் கொண்டே நாட்டில் குழப்பம் ஏற்படுத்துவதும், சில இடங்களில் அமைதி நிலவுவதாகக் காட்டுவதும் இவர்களே. இந்த ஊடகங்களைக் கொண்டே தங்களின் தயாரிப்புக்களை நம் மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் இவர்களே
.
‘நம் உழைப்பைச் சுரண்டி, உழைப்புக்கு ஊதியம் என்பதாய் காகிதத்தை செல்வமெனச் சொல்லிக் கொடுத்து, அதை நாம் முழுமையாக அனுபவிக்கும் முன்னரே ஏதாவது ஒரு வழியில் பிடுங்கிக் கொண்டு, மீண்டும் மீண்டும் நம்மை உழைக்க வைப்பது அவர்களே
 
உங்கள் பணம் உங்கள் பையில்’ என்று வங்கிகளுக்கு வரவேற்றார் முன்னர் ஆட்சி செய்தவர். அதுவும் அவர்கள் செயலே. இப்பொழுது அதுவும் தாண்டி ‘உங்கள் பணம் உங்களுக்கு சொந்தமில்லை’ என்னும் நிலைக்கு நம்மை தள்ளி வைத்திருப்பதும் அவர்களே.
.அவர்களின் ஒரே ஒரு அறிவிப்பால் நம்மை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதே இன்றைக்கு நாம் காண்பது.
 
உங்கள் பணம் இனி உங்கள் கையில் இருக்காது. உங்கள் கணக்கில் வங்கிகளில் இருக்கும் எண் மற்றும் எழுத்து வடிவில்.. 
வங்கிகள் ரிசர்வ் பேங்க் கட்டுப்பாட்டில், 
ரிசர்வ் பேங்க் அவர்கள் கட்டுப்பாட்டில்.. 
நாளை வங்கியில் இருக்கும் உங்கள் பணத்துக்கு வட்டி கொடுப்பதைக் குறைக்கலாம். வாடகை கூட கேட்கலாம். ஏன் அவர்கள் நினைத்தால் ஒரு நாள் வங்கிகள் திவாலாகிப் போனதாகக் கூட அறிவிக்கலாம். 
இது கற்பனையல்ல. பல நாடுகளில் நடந்த உண்மை. 
 
உங்களிடமுள்ள பணத்தை எப்படி எல்லாம் பிடுங்கலாம் என்றுதான் ஒவ்வொரு திட்டமும் தீட்டுகிறார்கள். புதிய வரிகளை கொண்டு வருவது, இருக்கும் வரிகளை சீரமைப்பதும் எல்லாம் நமக்கு நல்லது செய்ய அல்ல. நம்மை சுரண்டவே.
 
ஆதார் கார்டைக் கொண்டு வந்தது முன்னர் இருந்த அரசு. அதில் குறைகள் உள்ளதாக எதிர்த்தது இப்போதைய ஆட்சியாளர்கள். ஆட்சி மாறியது. அப்பொழுது எதிர்த்தவர்களும் இன்று அதை நிறைவேற்றுகிறார்கள்.
 
இன்றைக்கு உங்கள் ஆதார் கார்டு உங்கள் சரித்திரத்தையே சொல்லும் கார்டாகி விட்டது
.
உங்கள் ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டு இணைக்கப்பட்டு விட்டது..
உங்கள் வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டு விட்டது.
உங்கள் பான் கார்டு இணைக்கப்பட்டு விட்டது.
உங்கள் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கப்ப்ட்டு விட்டது
உங்கள் எரிவாயு இணைப்புக் கணக்கு இணைக்கப்பட்டு விட்டது.
உங்கள் கடன் அட்டை கணக்குகள் இணைக்கப்பட்டு விட்டது.
நீங்கள் பணிபுரியும் நிறுவனங்களில் உங்கள் ஆதார் கார்டு இணைக்கப்பட்டு விட்டது.
உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் உங்கள் ஆதார் கார்டு இணைக்கப்பட்டு விட்டது.
உங்கள் ஜாதகம் மட்டும்தான் பாக்கி. விரைவில் அதையும் இணைத்து விடலாம்.
 
உங்கள் வருமானம், உங்கள் செலவு அனைத்தும் கண்காணிக்கப்படும். ‘நாம் ஒன்றும் தவறு செய்யவில்லையே. தவறு செய்வோர்தானே பயப்பட வேண்டும்’ என நீங்கள் நினைக்கலாம். தவறு செய்வதைக் கண்காணிப்பதில் தவறில்லை. நம் தனிப்பட்ட அந்தரங்கத்திலும் நுழைந்து  நம்மைக் கட்டுப்படுத்துவார்கள். வரிகள் என்ற பெயரிலோ இன்னும் வெவ்வேறு வடிவங்களிலோ உங்களை சுரண்டுவார்கள்.
 
இப்பொழுதே வருமான வரி, வீட்டு வரி,  நில வரி, தண்ணீர் வரி, விற்பனை வரி, மதிப்புக் கூட்டப்பட்ட வரி, வாகன வரி, நுழைவு வரி, சாலை வரி, என ஏகப்பட்ட வரிகளைக் கட்டி அழுது கொண்டுதான் உள்ளோம். அவை சரியான முறையில் நாட்டுக்கு அல்லது நமக்கு செலவழிக்கப்படுவதில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இன்னும் எல்லா வரிகளையும் உள்ளடக்கி ஜி.எஸ்.டி என்ற பெயரில் புதி வடிவில் ஒரு வரி நம்மை சந்திக்க இருக்கிறது.
இவை எல்லாமே அவர்கள் திட்டமே.

மக்களை கட்டுப்படுத்த சட்டங்களை அரசாங்கங்கள் இயற்றுகின்றன.
அரசாங்கங்களை கார்பரேட்டுகள் எனும் பெரு வணிகர்கள், மாஃபியாக்கள் கட்டுப்படுத்துகின்றனர். இதில் ஒரு வேடிக்கை நம்மை யார் வேலை செய்யச் சொல்கிறார்கள், யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதே பல நேரங்களில் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளவர்கள், அரசியல்வாதிகள் யாவருமே அறியாதவாறு அவர்கள் செயல்படுகிறார்கள்.


சிறு வணிகங்களை ஒழித்து பெரு வணிகங்களுக்கு வர்த்தகத்தை மடை மாற்றும் செயல்கள்தான் இவை
.
எனக்கு இரு கண் போனாலும் பரவாயில்லை என் எதிரிக்கு அல்ல சக தோழனுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்கிற நம் எண்ணத்தைக் கொண்டு நம் சேமிப்பை நம்மைக் கொண்டே அள்ளிக் கொண்டு போவது அவர்களே
.
இவை எல்லாம் எதற்காக எனும் கேள்வி யாவர்க்கும் வரும்
.
அவர்கள் ஆளுகையின் கீழ் நாம் எந்த கேள்விகளும் கேட்காமல் அடிமைகளாய், அவர்களுக்கு சேவகர்களாய்  வாழவும்
முழு உலகையும் ‘புதிய உலக சகாப்தம்’ என்ற பெயரில் ஒரு குடையின் கீழ் அவர்கள் ஆளுவதற்காகவும் இந்த செயல்பாடுகள்..
 
இவற்றை செய்யும் இவர்களின் பெயர் ‘இல்லுமினாட்டிகள்’’
 
இவர்கள் 17 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இப்பொழுது சுமார் 3000 லிருந்து 5000 பேர் வரை இருக்கிறார்கள்
 
அதனால்தான் சொல்கிறேன்
.
அரசாங்கத்தை திட்டாதீர்
ஆட்சியாளர்களை ஏசாதீர்
 
சரி. அப்படி என்றால் நாம் என்னதான் செய்வது என நீங்கள் கேட்கலாம்.
அவர்களை எப்படி எதிர் கொள்வது என நீங்கள் கேட்கலாம்.
சில சின்ன சின்ன விஷயங்களை முடிந்தவரை கடைபிடியுங்கள். அவர்களை வெல்லலாம்
.
  • வெளிநாட்டு பன்னாட்டு தயாரிப்புக்களை உங்கள் தின வாழ்க்கையிலிருந்து புறக்கணியுங்கள்.
  • குறிப்பாகத் தொலைக்காட்சியில் விளம்பரங்களில் காட்டப்படும் எல்லா தயாரிப்புக்களையும் புறக்கணியுங்கள்
  • உள்நாட்டு இன்னும் சொல்லப் போனால் உள்ளூர் தயாரிப்புக்களை உபயோகியுங்கள். அதன் விற்பனையை ஊக்குவியுங்கள்.
  • பெரிய பெரிய ஷாப்பிங் மால்களில் பொருட்களை வாங்காதீர். சிறு கடைகளில், நடைபாதைக் கடைகளுக்கு ஆதரவு கொடுங்கள்.
  • சில்லறை வர்த்தகத்தை வளரச் செய்யுங்கள். ஆன்லைன் வியாபரங்களை விட்டு வெளியேறுங்கள்.
  • காகித கரன்சிகளையும், வங்கி சேமிப்பையும் விட நாளைய அடுத்த தலைமுறைக்கு உபயோகமாகும் விஷயங்களில் முதலீடு செய்யுங்கள்.
  • இன, மத, நிற வேற்றுமைகளைக் களைந்து அனைவரும் ஒற்றுமையைக் கடைபிடியுங்கள்
 
மீண்டும் சொல்கிறேன்
அரசாங்கத்தை திட்டாதீர்
ஆட்சியாளர்களை ஏசாதீர்
‘நடப்பவை எல்லாம் ‘அவர்கள்’ செயல்

 
மேலும் விவரங்களுக்கு ஹீலர் பாஸ்கரின் “உலக அரசியல்” மற்றும் "கறுப்புப் பணம்" என்ற பெயர்களிலான ஆடியோ கேளுங்கள்.  http://anatomictherapy.org/tworld-poltics.php
கிறிஸ்தவ போதகர் M D ஜெகன் பேசியுள்ளதை யூ-ட்யூபில் கேளுங்கள்.
https://www.youtube.com/results?search_query=jegan+illuminat