Sunday, November 27, 2016

அரசாங்கத்தை திட்டாதீர்


அரசாங்கத்தை திட்டாதீர்
ஆட்சியாளர்களை ஏசாதீர் 
 
‘நடப்பவை எல்லாம் அவன் செயல்’. இல்லையில்லை ‘அவர்கள்’ செயல்.
யார் அவர்கள்? அவர்கள் என்ன செய்கிறார்கள்?
 
ஆட்டுவிப்போர் அவர்கள். ஆடுகிறவர்கள் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள்.
இந்த பரந்த பூமியில் பெரும்பாலான தேசங்களை அவர்கள்தான் ஆளுகிறார்கள் - மறைமுகமாக.
 
ஒரு நாட்டின் ஆட்சியாளர்களை அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். ஒரு தலைவனை உருவாக்குவதும், உயர்த்துவதும், அழிப்பதும் அவர்களே.
 
புதிய பொருளாதாரக் கொள்கை,, தாராளமயமாக்கல் என்ற பெயர்களில் உள்நாட்டு கனிம வளங்களைச் சுரண்டி தங்கள் நாடுகளுக்கு எடுத்துக் கொண்டு போவார்கள். 

நம் பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்து நமக்கே 40 மடங்காக விலை உயர்த்தி நம்மிடமே, நம் ஆட்களைக் கொண்டே விற்பார்கள்.
காலை எழுந்ததும் எடுக்கும் பற்பசை முதல் படுக்கப் போகும்போது ‘ஆன்’ செய்யும் கொசுவர்த்தித் திரவம் வரை அத்தனையும் அவர்களின் தயாரிப்புக்களே. 

அவர்களை நிராகரித்து மனித குலம் வாழ முடியாத மாய வலைக்குள் நம்மை வீழ்த்தி இருப்பதும் அவர்களே.
 
மனிதர்கள் சிந்தனையை மழுங்கடிக்கும் போதை வஸ்துக்கள், தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவை கொண்டு நம் சிந்தனையை அடிமைப்படுத்தி வைத்திருப்பதும் அவர்களே.
பண்டைய சமூகத்தின் ஆணிவேர்களாக விளங்கிய பாரம்பரிய கல்வி முறையை ஒழித்து மெக்காலே என்னும் கல்வித் திட்டத்தையும்,
நம்முடைய கலாச்சாரத்தை அடியோடு மாற்றி மேற்கத்திய கலாச்சாரத்தையும் சிந்தனையையும், 
நம் மரபு வகை மருத்துவத்தைப் பின் தள்ளி கொள்ளையடிக்கும் ஆங்கில மருத்துவத்தையும்  
தொன்று தொட்டு செய்து வந்த நம் வேளாண்மையை பசுமைப் புரட்சி என்னும் பெயரில் நஞ்சு கலந்த விவசாயமாகவும்,
மாற்றி, மறக்கடித்து, தங்களை மேலானவர்களாகக் காட்டி நம்ப வைத்து நம்மை மன அளவிலும், உடல் அளவிலும் அவர்களின் அடிமைகளாக வாழ வைத்துக் கொண்டிருப்பவர்களும் அவர்களே.
 
வெறும் காகிதங்களுக்கு பணம் என்ற மதிப்புக் கொடுக்க வைத்து நம்மை அதன் அடிமைகளாக்கி வைத்திருப்பதும், திடுமென அதை நிராகரித்து இன்றைக்கு மக்களை அலைய விட்டுகொண்டிருப்பதும் அவர்களே.
 
எல்லா அரசாங்கங்களும், கட்சிகளும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவையே. எல்லா வங்கிகளும் அவர்களால் நடத்தப்படுபவையே.
 
எல்லா பன்னாட்டு நிறுவனங்களும் அவர்களுக்கு சொந்தமானதே. அதன் பெரும்பங்குகள் அவர்கள் கைகளில்தான் இருக்கின்றன.
 
மனிதர்களைக் கட்டுப்படுத்த சட்டங்கள், அந்த சட்டங்களை உருவாக்கவும், கண்காணிக்கவும் அரசாங்கம், அந்த அரசைக் கட்டுப்படுத்த உலக வங்கி, ஐ.நா.சபை, உலக வர்த்தக ஒப்பந்தம் போன்றவை. இவற்றை நிர்வாகிப்பது இவர்களே.
 
எல்லா செய்தி நிறுவனங்களும் இவர்களால் நடத்தப்படுபவையே (BBC, CNN, RAITER). உள்ளூர் மற்றும் உள் நாட்டு செய்தி ஊடகங்களும் அவர்களை அண்டிப் பிழைப்பவையே. 

இந்த ஊடகங்களைக் கொண்டே நாட்டில் குழப்பம் ஏற்படுத்துவதும், சில இடங்களில் அமைதி நிலவுவதாகக் காட்டுவதும் இவர்களே. இந்த ஊடகங்களைக் கொண்டே தங்களின் தயாரிப்புக்களை நம் மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் இவர்களே
.
‘நம் உழைப்பைச் சுரண்டி, உழைப்புக்கு ஊதியம் என்பதாய் காகிதத்தை செல்வமெனச் சொல்லிக் கொடுத்து, அதை நாம் முழுமையாக அனுபவிக்கும் முன்னரே ஏதாவது ஒரு வழியில் பிடுங்கிக் கொண்டு, மீண்டும் மீண்டும் நம்மை உழைக்க வைப்பது அவர்களே
 
உங்கள் பணம் உங்கள் பையில்’ என்று வங்கிகளுக்கு வரவேற்றார் முன்னர் ஆட்சி செய்தவர். அதுவும் அவர்கள் செயலே. இப்பொழுது அதுவும் தாண்டி ‘உங்கள் பணம் உங்களுக்கு சொந்தமில்லை’ என்னும் நிலைக்கு நம்மை தள்ளி வைத்திருப்பதும் அவர்களே.
.அவர்களின் ஒரே ஒரு அறிவிப்பால் நம்மை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதே இன்றைக்கு நாம் காண்பது.
 
உங்கள் பணம் இனி உங்கள் கையில் இருக்காது. உங்கள் கணக்கில் வங்கிகளில் இருக்கும் எண் மற்றும் எழுத்து வடிவில்.. 
வங்கிகள் ரிசர்வ் பேங்க் கட்டுப்பாட்டில், 
ரிசர்வ் பேங்க் அவர்கள் கட்டுப்பாட்டில்.. 
நாளை வங்கியில் இருக்கும் உங்கள் பணத்துக்கு வட்டி கொடுப்பதைக் குறைக்கலாம். வாடகை கூட கேட்கலாம். ஏன் அவர்கள் நினைத்தால் ஒரு நாள் வங்கிகள் திவாலாகிப் போனதாகக் கூட அறிவிக்கலாம். 
இது கற்பனையல்ல. பல நாடுகளில் நடந்த உண்மை. 
 
உங்களிடமுள்ள பணத்தை எப்படி எல்லாம் பிடுங்கலாம் என்றுதான் ஒவ்வொரு திட்டமும் தீட்டுகிறார்கள். புதிய வரிகளை கொண்டு வருவது, இருக்கும் வரிகளை சீரமைப்பதும் எல்லாம் நமக்கு நல்லது செய்ய அல்ல. நம்மை சுரண்டவே.
 
ஆதார் கார்டைக் கொண்டு வந்தது முன்னர் இருந்த அரசு. அதில் குறைகள் உள்ளதாக எதிர்த்தது இப்போதைய ஆட்சியாளர்கள். ஆட்சி மாறியது. அப்பொழுது எதிர்த்தவர்களும் இன்று அதை நிறைவேற்றுகிறார்கள்.
 
இன்றைக்கு உங்கள் ஆதார் கார்டு உங்கள் சரித்திரத்தையே சொல்லும் கார்டாகி விட்டது
.
உங்கள் ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டு இணைக்கப்பட்டு விட்டது..
உங்கள் வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டு விட்டது.
உங்கள் பான் கார்டு இணைக்கப்பட்டு விட்டது.
உங்கள் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கப்ப்ட்டு விட்டது
உங்கள் எரிவாயு இணைப்புக் கணக்கு இணைக்கப்பட்டு விட்டது.
உங்கள் கடன் அட்டை கணக்குகள் இணைக்கப்பட்டு விட்டது.
நீங்கள் பணிபுரியும் நிறுவனங்களில் உங்கள் ஆதார் கார்டு இணைக்கப்பட்டு விட்டது.
உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் உங்கள் ஆதார் கார்டு இணைக்கப்பட்டு விட்டது.
உங்கள் ஜாதகம் மட்டும்தான் பாக்கி. விரைவில் அதையும் இணைத்து விடலாம்.
 
உங்கள் வருமானம், உங்கள் செலவு அனைத்தும் கண்காணிக்கப்படும். ‘நாம் ஒன்றும் தவறு செய்யவில்லையே. தவறு செய்வோர்தானே பயப்பட வேண்டும்’ என நீங்கள் நினைக்கலாம். தவறு செய்வதைக் கண்காணிப்பதில் தவறில்லை. நம் தனிப்பட்ட அந்தரங்கத்திலும் நுழைந்து  நம்மைக் கட்டுப்படுத்துவார்கள். வரிகள் என்ற பெயரிலோ இன்னும் வெவ்வேறு வடிவங்களிலோ உங்களை சுரண்டுவார்கள்.
 
இப்பொழுதே வருமான வரி, வீட்டு வரி,  நில வரி, தண்ணீர் வரி, விற்பனை வரி, மதிப்புக் கூட்டப்பட்ட வரி, வாகன வரி, நுழைவு வரி, சாலை வரி, என ஏகப்பட்ட வரிகளைக் கட்டி அழுது கொண்டுதான் உள்ளோம். அவை சரியான முறையில் நாட்டுக்கு அல்லது நமக்கு செலவழிக்கப்படுவதில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இன்னும் எல்லா வரிகளையும் உள்ளடக்கி ஜி.எஸ்.டி என்ற பெயரில் புதி வடிவில் ஒரு வரி நம்மை சந்திக்க இருக்கிறது.
இவை எல்லாமே அவர்கள் திட்டமே.

மக்களை கட்டுப்படுத்த சட்டங்களை அரசாங்கங்கள் இயற்றுகின்றன.
அரசாங்கங்களை கார்பரேட்டுகள் எனும் பெரு வணிகர்கள், மாஃபியாக்கள் கட்டுப்படுத்துகின்றனர். இதில் ஒரு வேடிக்கை நம்மை யார் வேலை செய்யச் சொல்கிறார்கள், யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதே பல நேரங்களில் அடுத்தடுத்த நிலைகளில் உள்ளவர்கள், அரசியல்வாதிகள் யாவருமே அறியாதவாறு அவர்கள் செயல்படுகிறார்கள்.


சிறு வணிகங்களை ஒழித்து பெரு வணிகங்களுக்கு வர்த்தகத்தை மடை மாற்றும் செயல்கள்தான் இவை
.
எனக்கு இரு கண் போனாலும் பரவாயில்லை என் எதிரிக்கு அல்ல சக தோழனுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்கிற நம் எண்ணத்தைக் கொண்டு நம் சேமிப்பை நம்மைக் கொண்டே அள்ளிக் கொண்டு போவது அவர்களே
.
இவை எல்லாம் எதற்காக எனும் கேள்வி யாவர்க்கும் வரும்
.
அவர்கள் ஆளுகையின் கீழ் நாம் எந்த கேள்விகளும் கேட்காமல் அடிமைகளாய், அவர்களுக்கு சேவகர்களாய்  வாழவும்
முழு உலகையும் ‘புதிய உலக சகாப்தம்’ என்ற பெயரில் ஒரு குடையின் கீழ் அவர்கள் ஆளுவதற்காகவும் இந்த செயல்பாடுகள்..
 
இவற்றை செய்யும் இவர்களின் பெயர் ‘இல்லுமினாட்டிகள்’’
 
இவர்கள் 17 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இப்பொழுது சுமார் 3000 லிருந்து 5000 பேர் வரை இருக்கிறார்கள்
 
அதனால்தான் சொல்கிறேன்
.
அரசாங்கத்தை திட்டாதீர்
ஆட்சியாளர்களை ஏசாதீர்
 
சரி. அப்படி என்றால் நாம் என்னதான் செய்வது என நீங்கள் கேட்கலாம்.
அவர்களை எப்படி எதிர் கொள்வது என நீங்கள் கேட்கலாம்.
சில சின்ன சின்ன விஷயங்களை முடிந்தவரை கடைபிடியுங்கள். அவர்களை வெல்லலாம்
.
  • வெளிநாட்டு பன்னாட்டு தயாரிப்புக்களை உங்கள் தின வாழ்க்கையிலிருந்து புறக்கணியுங்கள்.
  • குறிப்பாகத் தொலைக்காட்சியில் விளம்பரங்களில் காட்டப்படும் எல்லா தயாரிப்புக்களையும் புறக்கணியுங்கள்
  • உள்நாட்டு இன்னும் சொல்லப் போனால் உள்ளூர் தயாரிப்புக்களை உபயோகியுங்கள். அதன் விற்பனையை ஊக்குவியுங்கள்.
  • பெரிய பெரிய ஷாப்பிங் மால்களில் பொருட்களை வாங்காதீர். சிறு கடைகளில், நடைபாதைக் கடைகளுக்கு ஆதரவு கொடுங்கள்.
  • சில்லறை வர்த்தகத்தை வளரச் செய்யுங்கள். ஆன்லைன் வியாபரங்களை விட்டு வெளியேறுங்கள்.
  • காகித கரன்சிகளையும், வங்கி சேமிப்பையும் விட நாளைய அடுத்த தலைமுறைக்கு உபயோகமாகும் விஷயங்களில் முதலீடு செய்யுங்கள்.
  • இன, மத, நிற வேற்றுமைகளைக் களைந்து அனைவரும் ஒற்றுமையைக் கடைபிடியுங்கள்
 
மீண்டும் சொல்கிறேன்
அரசாங்கத்தை திட்டாதீர்
ஆட்சியாளர்களை ஏசாதீர்
‘நடப்பவை எல்லாம் ‘அவர்கள்’ செயல்

 
மேலும் விவரங்களுக்கு ஹீலர் பாஸ்கரின் “உலக அரசியல்” மற்றும் "கறுப்புப் பணம்" என்ற பெயர்களிலான ஆடியோ கேளுங்கள்.  http://anatomictherapy.org/tworld-poltics.php
கிறிஸ்தவ போதகர் M D ஜெகன் பேசியுள்ளதை யூ-ட்யூபில் கேளுங்கள்.
https://www.youtube.com/results?search_query=jegan+illuminat

Tuesday, January 19, 2016

ஓரிசாவின் காரியார் காளைகள்- ஓழிந்தே போயின ஓழித்தது யார்??

ஓரிசாவின் காரியார் காளைகள்- ஓழிந்தே போயின
ஓழித்தது யார்??

1978ம் ஆண்டு ஒரிசா மாநிலம் காலாஹந்தி மாவட்டத்தில் மஃபட்லால் நிறுவனத்தின் NGO சத்குரு சேவாசங்கம், SBI மற்றும் ஒரிசா மாநில கால்நடை & வருவாய்த் துறை ஆகியவை இணைந்து ஏழை விவசாயிகளுக்கு கரவைமாடும் அதற்குத் தேவையான தீவனம் வளர்க்க நிலமும் இலவசமாக வழங்கின. இந்த இலவச நிலத்தில் மாட்டுத்தீவனம் வளர்ப்பதற்கு ஊதியமும் தரப்பட்டது....
எவ்வளவு நல்ல திட்டம்... அனைவராலும் பாராட்டப்பட்டு...உள்ளூர் மக்களிடம் சிறந்த வரவேற்பையும் பெற்றது....
இந்தத் திட்த்தின் மேல் ஒரு சிறிய * பொறிக்கப்பபட்டிருந்தது...
சாத் சாத் terms & conditionஏ தான்....
கொடுக்கப்பட்ட மாடுகள் அனைத்தும் புனேயிலிருந்து கொண்டுவரப்படும் ஜெர்சி மாடுகளின் உயிரணு மூலம் ஊசிமூலமாக மட்டுமே சினை ஊட்டப்பட வேண்டும்..என்பதே அந்தக் கண்டிசன்.
மாடு, நிலம் இலவசம்....அந்த நிலத்தில் வேலைபார்க்க ஊதியம்...யாருக்கு கசக்கும்... இரத்தினக்கம்பளம் விரித்து திட்டம் வரவேற்கப்பட்டது....
திட்டம் ஆரம்பிக்கப்பட்டபின் இந்த மாடுகள் இயற்கையாக உள்ளூர் காளைகளுடன் இணைசேராமலிருக்க உள்ளூரிலிருந்த காரியார் இனக்காளைகள் அனைத்தும் மலடாக்கப்பட்டன...
அதுதான் உண்மையில் திட்டம் என்பது அப்போது யாருக்கும் புரியவில்லை... இலவச மோகம்...
ஆண்டுகள் உருண்டன... செயற்கை முறையில் சினையூட்டப்பட்டுப் பிறந்த கன்றுகளெல்லாம் எல்லாம் நோஞ்சானகப் பிறந்தன....
பத்தாண்டுகளுக்குள் பலம்வாய்ந்த, அதிகப் பால் கொடுக்கக் கூடிய நாட்டு காரியார் இனத்தின் ஒரு காளையைக் கூட ஒரிசாவின் காலஹந்தி மாவட்டத்தில் பார்க்க முடியவில்லை...ஒட்டுமொத்த இன அழிப்பு...
பாலுற்பத்தியில் தன்னிறைவடைந்திருந்த அந்த மாவட்டத்தில் இப்போது ஒவ்வொரு விவசாயியும் பாக்கெட்பால் வாங்குகிறான்!!
1977-78ல் ஒரு லிட்டர் நெய் 7ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டால்டா 9ரூபாய்க்கும் விற்கப்பட்ட இடத்தில், தற்போது டால்டா வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது!!
திட்டக் காலம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டவுடன், மாட்டுத்தீவனம் வளர்க்க இலவசமாக வழங்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் விவசாயிகளிடமிருந்து பறிக்கப் பட்டுவிட்டன.....
கைகொடுத்த பால் தொழில் தொலைந்ததால் காரியார் காளைவளர்த்த இளங்காளைகளெல்லாம் பிழைப்பிற்காக நகரத்து டின் செட்டிற்குள் அவிந்து கொண்டிருக்கிறார்கள் கட்டிடத் தொழிலாளர்களாக...
இது இலவசங்களுக்குப்பின் ஒழிந்திருக்கும் வணிக நோக்கங்களைத் தோலுரிக்கும் ஒரு சிறு சாம்பிள் மட்டுமே.....
"There is no free lunch in the world" என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு.... "இவ்வுலகில் எதுவும் இலவசமல்ல" என்பது அதன் பொருள்....
ஜல்லிக் கட்டைத் தடை செய்வதற்கும் நாட்டுக் காளைகளை அழிப்பதற்கும் தொடர்புண்டோ இல்லையோ....
இலவச மோகம் இன அழிப்புச் செய்யும் என்பது மட்டும் ஆழமான உண்மை...
எப்போது மாறுமோ நம் இலவச மோகம்?

பில்கேட்ஸ் – டாடா இந்திய விவசாயத்திற்கு வைக்கும் கடைசிக் கொள்ளி !

பில்கேட்ஸ் – டாடா இந்திய விவசாயத்திற்கு வைக்கும் கடைசிக் கொள்ளி !

டந்த டிசம்பர் 14 அன்று நைரோபியில் நடைபெற்ற உலக வர்த்தகக் கழக மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டு என்ன பேசியது என்பது இன்று வரை வெளியிடப்படவில்லை.
ஆனால் மாநாட்டு உறுப்பினர்களின் ஒப்பந்தம் டிசம்பர் 19-ம் தேதி கையெழுத்திடப் பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம், உறுப்பு நாடுகளின் விவசாயத்தை முற்றாக உலகச் சந்தைக்கு திறந்துவிடும் அம்சங்களை முன்வைத்திருக்கிறது.
இதன் படி, இனி WTO-ல் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள்
  • விவசாயிகளுக்கு வழங்கும் மானியத்தை உடனடியாக குறைக்க வேண்டும்.
  • எந்தவொரு நாடும் பொதுவில் தானியங்களைக் சேகரித்து வைக்கக் கூடாது. மாறாக அவை சந்தைக்கு திறந்து விடப்படவேண்டும்.
  • ஏற்றுமதி தொடர்பான அனைத்து மானியங்களும் நிறுத்தப்பட வேண்டும். இதை வளர்ந்த நாடுகள் உடனே அமலுக்கு கொண்டு வரவும் வளரும் நாடுகள் 2018-க்குள் செய்து முடிக்க வேண்டும்.
எனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இது ஒரு புறமிருக்க, நாட்டின் சேவைத்துறைகளான தண்ணீர், மின்சாரம், பொது சுகாதாரம், காப்பீடு, கல்வித்துறையை முற்றிலும் வணிகமயமாக்கும் காட்ஸ் ஒப்பந்தம் தொடர்பான விபரங்கள் இது வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது.
காட்ஸ், உலக வர்த்தகக் கழக ஒப்பந்தங்கள் குறித்து பொதுவெளியில் குறைந்தபட்ச விபரங்களை மட்டுமே பேசுகிற பத்திரிகைகள் இதற்கு இணையாக முன்வைக்கப்படும் மற்றொரு பேரழிவுத் திட்டமான TISA (Trade In Services Agreement) குறித்து வாய்திறக்க மறுக்கின்றன. வாய் திறக்கவும் முடியாது!
TISA ஒப்பந்தத்தின்படி WTO-GATS திட்டங்களை உறுப்பு நாடுகள் எதிர்த்தால், அதற்கு மாற்றாக அமெரிக்கா மூன்றாம் உலக நாடுகளைத் திரட்டி அவற்றி்ன் மீதான பொருளாதாரச் சங்கிலியை இறுக்கிப் பிணைக்கும். இந்த வகையில் TISA முன்வைக்கும் செயல்திட்டம், உலகப் பொருளாதாரத்தை மேலும் அமெரிக்கக் கரடியின் பிடியில் தள்ளும் வகையில்  WTO-GATS ஆபத்தை விட படுபயங்கரமானதாக இருக்கப்போகிறது. TISA-ல் பங்கேற்கும் நாடுகள் அது குறித்து பாராளுமன்றங்களிலோ, பத்திரிகைகளிலோ, நீதி சட்ட அமைப்புகளிலோ TISA குறித்து விவாதிக்கக் கூடாதென விதிகள் போட்டிருப்பதை விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறது.
ஏகாதிபத்திய அமெரிக்காவைப் பொறுத்தவரை WTO-GATS மற்றும் TISA மட்டுமே திட்டமல்ல. இந்தியாவைப் போன்ற மூன்றாம் உலகநாடுகளை அடிமைப்படுத்தி சுரண்டுவதற்கு மேலும் பல முனைகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.
மோடி கும்பல் நைரோபி மாநாட்டிற்கு செல்வதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகத்தான் பில்கேட்சும் ரத்தன் டாடாவும், “இந்தியாவில் 4.4 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்” என டைம்ஸ் ஆப் இந்தியாவில் கட்டுரை எழுதினார்கள்.
கருணையாளர்கள் பில்கேட்சும் ரத்தன் டாடாவும் டைம்ஸ் ஆப் இந்தியாவின் மண்டகப்படிக்கே கட்டுரையாளர்களாக காட்சி தந்திருக்கிறார்கள் என்றால் பிரச்சனையின் கனமும் பரிமாணமும் எத்தகையதாக இருக்கும்?
“இந்தியாவின் மனிதவளம் மிகப்பெரிய சொத்து” என்று வரையறுக்கிற டாடவும் பில்கேட்சும் “பத்தில் நான்கு இந்தியக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர்” என்று கவலையுற்றிருக்கின்றனர்.
கவலையுற்ற கையோடு சும்மா இருந்துவிடாமல், “புதிய ஊட்டச்சத்து அறிக்கை இந்தியாவில் குறை வளர்ச்சியை எதிர்நோக்குவதில் தலைமையின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டியிருக்கிறது (New nutrition report underscores the importance of leadership in addressing stunting in India)” எனும் தலைப்பில் மூன்று விசயங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
1. இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான தரவுகள் முழுமையின்றி குறைபாட்டுடன் இருப்பதுடன், அவை காலவதியாகிப் போய்விட்டன. புதிய தரவுகளை எடுக்க வேண்டியது அவசியம்.
2. ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழிப்பதற்கு விலைமலிவான திட்டங்கள் (cost-effective solution) எங்களிடம் இருக்கின்றன. அவை தாய்மார்கள் பிரசவித்த காலத்திலிருந்து குழந்தைக்கு இரண்டு வயது ஆகும் வரை அதாவது 1000 நாட்களுக்கு மேம்பட்ட ஊட்டச்சத்தும் உடல்நலமும் கிடைக்க வழிவகை செய்யும்.
3. எங்களது திட்டத்திற்கு முன்னுரிமை கொடுப்பதற்கும் (prioritizing programmes) மத்தியிலும் மாநிலத்திலும் அரசுகள் தங்களது கடமையுணர்வை புரிந்துகொள்ளும் வகையிலும் (shared sense of responsibility) செயலாற்ற அரசியல் தலைமை (political leadership) தேவைப்படுகிறது.
மேற்கண்ட இம்மூன்றும் இந்திய விவசாயத்தை ஏகாதிபத்தியத்தின் கீழ் இறுதியாக மறுகட்டமைப்பு செய்யும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இது பற்றிய விளக்கக் கட்டுரை உலக வர்த்தகக் கழக மாநாடு நடைபெறுவதற்கு பத்து நாட்களுக்கு முன்னரே பிசினஸ் டைம்ஸில் வந்திருக்கிறது. இதன்படி, பில்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இந்தியாவில் ஊட்டச் சத்து குறைப்பாட்டை ஆய்வு செய்வதற்கு நான்குவருட நிதி நல்கையாக 1.34 கோடி டாலர்களை (சுமார் ரூ 87 கோடி) டாடாவின் அறக்கட்டளைக்கு வழங்கியிருக்கிறது.
இந்த அமைப்பு, இந்திய விவசாயக் கொள்கையை ஊட்டச்சத்திற்கு ஏற்ப முற்றிலும் மாற்றிமைக்கும் TARINA (Technical Assistance and Research for Indian Nutrition and Agriculture) எனும் திட்டத்தை முன்வைத்திருக்கிறது.
TARINAவிற்குத் தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள, அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகமும், டாட்டா அறக்கட்டளையும் சேர்ந்து Tata-Cornell Agricultural and Nutrition Initiative (TCI) அமைப்பை ஆரம்பித்திருக்கிறார்கள்.
TARINAவின் நோக்கங்கள் உலக வர்த்தக் கழகத்தின் குரலாக அப்படியே ஒலித்திருக்கிறது. நைரோபியில் நடைபெற்ற WTO மாநாடு “இந்தியா இனி எந்தவொரு தானியத்தையும் சேகரித்து வைத்துக் கொள்ளக் கூடாது; அவற்றை சந்தைக்கு திறந்துவிட வேண்டும்” என்று சொல்கிற பொழுது TARINAவோ “ஊட்டச்சத்துக் மிகுந்த உணவு தானியங்கள் அனைவருக்கும் கிடைக்கும் படி திட்டம் வகுக்க வேண்டும்” என்று சொல்கிறது.
இரண்டாவதாக, “WTO விற்கு ஏற்ப விவசாயத்தை மாற்றியமை” என்று நைரோபி மாநாடு சொல்கிற பொழுது “ஊட்டச்சத்திற்கு ஏற்ப விவசாயத்தை மாற்றியமை” (to redesign agricultural projects with a focus on nutrition) என்று TARINA சொல்கிறது.
இந்த மாற்றியமைத்தல் திட்டம் இந்தியாவின் சகல விவசாயத்துறைகளையும் உள்ளடக்கும் விதமாக, தற்பொழுதும், வருங்காலத்திலும் விவசாயக் கொள்கைகள் பழங்கள், காய்கறிகள், கால்நடைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், பருப்பு வகைகள், உயர் புரதச் சத்து கொண்ட பயிர்களான பட்டாணி வகைத் தாவரங்கள் கிராமப்புற ஏழைகளுக்கு வருடம் முழுவதும் போய்ச்சேரும்படி அமைய வேண்டுமென வலியுறுத்துகிறது.
பில்கேட்ஸ்-டாடா முன்வைத்த இந்த டாரினா திட்டத்தைச் செயல்படுத்துபவர்களாக
புரவலர் என்ற பெயரில் மெலிண்டா-கேட்ஸ் அறக்கட்டளை,
தரகு வேலை பார்த்து தருபவன் என்ற பெயரில் டாடா சமூக அறிவியல் ஆய்வுக்கழகம்,
ஆராய்ச்சி செய்துகொடுக்க எமிராய் மற்றும் கார்னெல் பல்கலைக்கழகம் (வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் இந்தியா வந்தால் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள்),
பழங்குடியினரிடையேயும் ஒடுக்கப்பட்டவர்களிடையேயும் உள்ளே புகுந்து கனஜோராக வேலை செய்து தரவுகள் எடுக்க என்.ஜி.ஓ.க்களான BAIF மற்றும் CARE,
ஏகாதிபத்தியங்கள் மேற்பார்வையிட அகில உலக உணவுக்கொள்கைக்கான ஆராய்ச்சி நிறுவனம் (International Food Policy Research Institute)
என ஏகாதிபத்தியம் மற்றும் தரகுமுதலாளிகளின் வலுவான வலைப்பின்னல் இந்தியாவின் விவசாயத்தைச் சுற்றி இறுக்கப்பட்டிருக்கிறது.
இதில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி இன்னும் மேம்பட்ட சிக்கலான வடிவில் திரும்ப இந்திய அரசியல் அரங்கிற்கு வந்திருப்பதை நாம் தவறவிடாது கண்டுகொள்ள வேண்டும்.
இப்பொழுது ஊட்டச்சத்து குறைபாடு என்பதன் பெயரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் பில்கேட்ஸ் அறக்கட்டளை வடிவில் விவசாயத்தை மறுகட்டமைக்க முனைகிற பொழுது 1950-களில் இதே அமெரிக்க ஏகாதிபத்தியம் ஃபோர்டு பவுண்டேசன் மூலமாக இந்திய விவசாயத்தை மறுகட்டமைக்கிறோம் என்று “இந்தியாவின் உணவு நெருக்கடியும் அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கை” என்பதன் பெயரில் அறிக்கை தாக்கல் செய்தனர். இவ்வறிக்கையில் “இந்தியாவில் உணவு இலக்குகள் எட்டப்பட வேண்டுமானால் உரங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்” என்று இந்திய விவசாயத்தை பன்னாட்டுக் உரக் கம்பெனிகளின் இலக்காக மாற்றியமைத்தது.
இப்பொழுது எப்படி நாடு கடந்த கூட்டிணையக் குழுமங்களான பில்கேட்ஸ் அறக்கட்டளையிலிருந்து டாடா டிரஸ் வரை ஊட்டச்சத்து, உலகவர்த்தகக் கழகம் என்ற பெயரில் ஜல்லியடிக்கிறார்களோ அன்றைக்கு ஃபோர்டு பவுண்டசனோடு சேர்ந்து உரங்களிலும் (ESSO) எண்ணெய் நிறுவனங்களிலும் பெரும் பங்கை வைத்திருந்த ராக்பெல்லர் பவுண்டேசன் உரம் தான் இந்திய விவசாயத்திற்கு முதன்மையானது என்று கூறி இந்திய விவசாய நிலங்களை மலடாக்கினர்.
இரண்டாவதாக, இப்பொழுது எப்படி உலகவர்த்தகக் கழகத்தின் நைரோபி மாநாடும் பில்கேட்ஸ்-டாடாவின் TARINA பரிந்துரைகளும் ஒரே நேரத்தில் வந்திருக்கிறதோ அதே போன்று 1960-களில் போர்டு பவுண்டேசன் முன்வைத்த அறிக்கைக்கு இணையாக 1964இல் பெர்னார்டு. ஆர். பெல் தலைமையிலான உலக வங்கிக்குழு, ஒட்டுமொத்த முதலீட்டு முன்னுரிமைகள் விவசாயத்தை நோக்கி ஒருங்கிணைக்கும்படி பரிந்துரைத்திருந்தது.
60-களில் ஏற்பட்ட பஞ்சம், பசி, பட்டினி ஆகியவற்றைக் காரணம் காட்டிய அமெரிக்க பன்னாட்டு உரக் கம்பெனிகளின் இலக்காக இந்தியா இருக்க சம்மதிக்கவும் இந்திய விவசாயத்தின் மூல உத்தி போர்டு பவுண்டேசன் முன் வைக்கும் பசுமைப் புரட்சியாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் நிபந்தனைகளாக வைக்கவில்லை. மேலும் சரிந்து நிற்கும் உலகப் பொருளாதாரத்தில் தங்கு தடையற்ற மூலதன பாய்ச்சலுக்காக இந்தியா தனது பணமதிப்பில் 36.5% குறைத்துக் கொள்ளவும் ஆணையிட்டது (இன்றைக்கு மேக்-இன்-இந்தியா, எப்.டி.ஐ என்று சொல்கிற பொழுது இந்திய ரூபாயின் மதிப்பு என்னவாக இருக்கிறது என்று யோசியுங்கள்).
1968 ஏப்ரல் 28 நியூயார்க் டைம்ஸ் இதுபற்றி எழுதும் பொழுது, “இவற்றைக் கண்ணிகள் என்று அழையுங்கள், அவற்றை ‘நிபந்தனைகள்’ என்று அழையுங்கள் அல்லது விருப்பத்திற்கேற்ப அழைத்துக் கொள்ளுங்கள், அமெரிக்கா தான் வழங்கும் உதவிக்காக உலகவங்கி மூலம் விதிக்கும் நிபந்தனைகளில் பலவற்றை ஏற்றுக் கொள்வதைத் தவிர இந்தியாவிற்கு வேறு வாய்ப்பு எதுவும் இல்லை. ஏனென்றால் இந்தியாவிற்கு செல்வதற்கு வேறு இடம் எதுவுமில்லை” என்று கொக்கரித்தது.
இன்றைக்கு இதே நிகழ்ச்சி நிரல் தோற்றுப்போன அரசுக்கட்டமைப்பு நெருக்கடிக்குள் ஊட்டச்சத்து எனும் பெயரில் மறுகாலனியாதிக்கத்தை துரிதப்படுத்த வந்திருக்கிறது.
நியூயார்க் டைம்ஸிற்கு பதிலாக, எகானமிக் டைம்ஸில், TARINA திட்டத்தை நடத்திக் கொடுக்கும் கார்னல் பல்கலைக் கழகம் பின்வறுமாறு கூறுகிறது.
“The Tata Trusts, India’s leading philanthropy, will support the consortium through their convening power and influence with policymakers at the national and state levels.”
இதன் அர்த்தம் “இந்தியாவின் முன்னணிப் புரவலராக இருக்கும் டாடா-சேவை அமைப்பு தேசிய அளவிலும், மாநில அளவிலும் கொள்கை உருவாக்குபவர்களை பணிய வைப்பதிலும் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவைப்பதன் மூலமாக இக்கூட்டமைப்பிற்கு பங்களிக்கவிருக்கிறது” என்று கூறுகிறது.
இந்த வாக்கியத்தின் மூலம் 1960-களைப்போன்று இந்திய இறையாண்மை, அல்லது இந்தியா அல்லது பாராளுமன்றம் என்றெல்லாம் பேசவேண்டிய தேவை கார்னல் பல்கலைக்கழகத்திற்கு வந்துவிடவில்லை.
டாடாவிடம் சொல்லிவிட்டால் மற்றதை அவர் பார்த்துக்கொள்வார் என்று நேரடியாக இந்தியா எப்படி அமெரிக்காவின் காலனியாக இருக்கிறது என்பதை வெளிக் காட்டியிருக்கிறது.
அதாவது இனிமேலும் பாராளுமன்றம் என்றோ, மேக்-இன்-இந்தியா என்றோ , இறையாண்மை என்றோ பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை என்பது இதில் தெளிவாகியிருக்கிறது.
இவ்விதம் இந்திய விவசாயம் ஏகாதிபத்தியங்களின் நிரந்தரப்பிடியில் மறுகட்டமைப்பு செய்வதற்கு ஏதுவாக முழுநிகழ்ச்சி நிரலும் WTO, GATS, TISA மற்றும் TARINAவாக வந்துவிட்ட பிறகு, இது யாருக்கான அரசு என்பது தெரிந்துவிட்ட பிறகு, மக்கள் செய்ய வேண்டிய வேலை என்னவாக இருக்க முடியும்?
இதை தூக்கியெறிந்துவிட்டு தங்களுக்கான அதிகாரத்தை நிறுவிக்கொள்வது என்பதைத் தவிர வேறு நிகழ்ச்சி நிரலுக்கு இந்தியாவில் இடமில்லை.
– இளங்கோ

நன்றி : வினவு